பரதனுடைய ஆதர்ச வாழ்க்கை ஸ்ரீபரதனுடைய வாழ்க்கை மிகவும் பொலிவு மிக்கது. எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அவரிடம் எந்த இடத்திலும், எந்தக் குறையும் காணப்படவில்லை. அவருடைய மஹிமை எல்லையற்றது. பரதன் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரம் என்றே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் அவருடைய சரித்திரம், அவரை ஒரு ஸாதுக்களில் தலைசிறந்தவராகவும், பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு யஜமான பக்தராகவும். மஹாத்மாவாகவும், பற்றற்றவராகவும், பக்தியை முதன்மையாகக் கொண்ட கர்மயோகியாகவும் நிரூபிக்கிறது. பரதன் தர்மத்தையும், நீதியையும் அறிந்தவர்; நற்குணங்கள் நிறைந்தவர்; தியாகசீலர்; புலனடக்கமும், நன்னடத்தையும் உள்ளவர். அன்பு, பணிவு இவற்றின் உருவமாய்த் திகழ்ந்தார். சிரத்தை கொண்டவராகவும், அறிவாளியாகவும் விளங்கினார். வைராக்யம், ஸத்யம், தவம், பொறை, சகிப்பு, கருணை, வாத்ஸல்யம், தீரம், வீரம், ஆழம், எளிமை, சாந்தம், இனிமை, தற்பெருமை கொள்ளாமை, எல்லோரையும் நண்பராக்கிக் கொள்ளும் தன்மை, முதலிய குணங்கள் இவரிடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்து காணப் படுகின்றன. ஸஹோதர பாசத்துக்கு இவர் உயிருள்ள உருவே போன்றவர். பரதனுக்குத் தந்தையிடமிர...