Skip to main content

Posts

Showing posts from January, 2022

பாவ- க்ராஹி ஜனார்தனர்

 

பாவ- க்ராஹி ஜனார்தனர்

 

ஸ்ரீஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ சிக்ஷாஷ்டகம் (பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள்) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண விஞ்ஞானம் குறித்த புத்தகங்களை எழுதும்படி தனது சீடர்களுக்கு உபதேசித்தார். அப்பணியினை அவரது சீடத் தொடரில் வருபவர்கள் இன்று வரை ஏற்று நடத்தி வருகின்றனர். இடைவிடாத சீடப் பரம்பரையின் காரணத்தினால், பகவான் சைதன்யரால் வழங்கப்பட்ட தத்துவங்களின் விளக்கங்களும் வியாக்கியானங்களும் மிகமிக அதிகமாகவும், உண்மையிலிருந்து பிறழாமலும் கட்டுக்கோப்புடையதாகவும் உள்ளன. பகவான் சைதன்யர் அவரது இளமைக் காலத்தில் பண்டிதர் என்று பிரபலமாக அறியப்பட்டிருப்பினும், அவர் சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு ஸ்லோகங்களை மட்டுமே விட்டுச் சென்றார். இந்த எட்டு ஸ்லோகங்கள் அவரது திருப்பணியையும் கொள்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந்த உயர்மதிப்புடைய பிரார்த்தனைகளை இன்று வழங்குவதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறோம். (1) சேதோ-தர்பண-மார்ஜனம்  பவ-மஹா- தாவாக்னி-நிர்வாபனம் ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம் ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம் ஸர்வாத்ம-ஸ்னபனம் பரம் விஜயத...

கருணாமூர்த்தி

பகவத்கீதையில் (9.29) பகவான் கூறுகிறார்: ஸமோ ‘ஹம் ஸர்வ - பூதேஷு ந மே த்வேஷ்யோ ‘ஸ்தி ந ப்ரிய: யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாபி அஹம் “நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ அல்லது பட்சபாதம் காட்டுவதோ இல்லை. அனைவரிடமும் நான் சமமாகவே நடந்து கொள்கிறேன். ஆனால் பக்தியுடன் எனக்குச் சேவை செய்பவன் யாராயினும் அவன் என் நண்பனாவான். அவன் என்னில் இருக்கிறான், நானும் அவனிடம் ஒரு நண்பனாக இருக்கிறேன்.” பரமபுருஷ பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் நிச்சயமாக சமமாகத்தான் இருக்கிறார். ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் முழுமையாக சரணடையும் பக்தரொருவர் பக்தரல்லாதவரிடமிருந்து வேறுபட்டவராவார். அதாவது, பகவானிடமிருந்து சமமான ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ அனைவரும் அவரது திருவடிகளில் புகலிடம் கொள்ளலாம். ஆனால் பக்தரல்லாதவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனால் ஜட சக்தியால் உண்டாக்கப்பட்ட விளைவுகளால் அவர்கள் துன்புறுகின்றனர். ஒரு சாதாரண உதாரணத்தால், இவ்வுண்மையை நம்மால் புரிந்துகொள் முடியும். அரசர் அல்லது அரசாங்கம் எல்லாப் பிரஜைகளிடமும் சமமாக இருக்கிறது. ஆகவே, பிரஜை ஒருவர் அரசாங்கத்திடமிருந்து விசேஷ ஆதரவுகளைப் பெறும் தகுதி படைத்தவர...

பரதனின் மகிமை (பகுதி 3 )

'ரகுநந்தனா, நானும் பதினான்கு ஆண்டுகள் வரை சடைகள் தாங்கி, மரவுரி தரித்து, பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, உங்களது வருகையை எதிர்நோக்கி நகரத்துக்கு வெளியே வாழ்வேன். எதிரியைப் பொசுக்குபவரே! அவ்வளவு நாட்களுக்கும் இந்த அரசை நடத்தும் பொறுப்பு இப்பாதுகைகளிடமே இருக்கும். ரகுகுல ஏந்தலே! பதினான்கு ஆண்டுகள் நிறைவுற்றவுடனே அதே நாளில் உங்களது தர்சனம் கிடைக்கப் பெறவில்லை என்றால் நான் எரியும் நெருப்பில் புகுந்துவிடுவேன்!' என்று சூளுரைத்தார். பரதன் கூறிய இச்சூளுரையைக் கேட்ட பகவான் மகிழ்ச்சி யுடன் அதை ஏற்றுக்கொண்டார். பிறகு பரதனிடமும், தம்பி சத்ருக்னனிடமும், தாயான கைகேயினிடமும் நல்லமுறையில் நடந்துகொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார். இருவரையும் மார்புறத் தழுவிக்கொண்டார். விடையும் கொடுத்தார். அப்போது பரதனின் பிரிவைத் தாங்காமல் ஸ்ரீராமனுடைய கண்களில் கண்ணீர் நிரம்பிற்று. ditative இதற்கப்பால் பரதன் பகவானுடைய பாதுகைகளைத் தம் தலைமேல் ஏந்தியவாறு, மிக்க மனநிறைவோடு தேரேறினார். வழியில் பரத்வாஜ முனிவரைச் அனைத்தையும் உரைத்து. சந்தித்து, நடந்தவை அவரிடம் அனுமதி பெற்று சிருங்கபேரபுரம் வழியாக அயோத்தி வந்தடைந்தார்....

பரதனின் மகிமை (பகுதி 2 )

  பரதன் சித்ரகூடத்தை நெருங்கினார். அப்போது வானத்தில் புழுதி எழும்பிப் படர்ந்தது. அதைப் பார்த்த ஸ்ரீராமன் லக்ஷ்மணனிடம் அதற்குரிய காரணத்தை அறிந்து வரச் சொன்னார். லக்ஷ்மணன் ஒரு மரத்தின் மேல் ஏறிப் பார்க்கிறார். பரதன் தான் படையுடன் வருகிறார் என்று உறுதி செய்துகொள்கிறார். அவர் மேல் ஸந்தேஹம் கொண்டு கடுமையான சொற்களை வெளியிடுகிறார். அப்போது ஶ்ரீ ராமன் பரதனுடைய நற்குணங்களையும், அன்பையும் பெருமைப்படுத்திப் புகழ்ந்து சொல்கிறார்: இச்சமயம் பரதன் நம் எல்லோரையும் சந்திக்க வருகிற முறையைப் பார்த்தால், அது எல்லாவிதங்களிலும் சரியானதாகவே படுகிறது. நமக்கு இதமில்லாதபடி நடப்பதை அவன் மனத்தாலும் எண்ணமாட்டான்; நீ பரதனை இவ்வாறு ஸந்தேஹிக்கவும், அவனிடம் அஞ்சவும் நேரும்படி அவன் உனக்கு எப்போது தீங்கு செய்திருக்கிறான்? பரதன் இங்கு வந்தபின், இம்மாதிரி கொடூரமான, அன்பில்லாத வார்த்தைகளை நீ சொல்லாதே. நீ அவனிடம் விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டாலும், பிரியமில்லாத சொற்களைச் சொன்னாலும், அவையெல்லாம் என்னிடமே நீ சொன்னதாகவும், நடந்து கொண்டதாகவுமே கருதுவேன். அரசைப் பெறும்பொருட்டு இந்தக் கொடிய வார்த்தைகளைச் சொல்கிறாய் என்ற...

கிருஷ்ணரின் கருணை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை

 

கிருஷ்ணரின் கருணை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை

 

பரதனின் மகிமை (பகுதி 1)

பரதனுடைய ஆதர்ச வாழ்க்கை ஸ்ரீபரதனுடைய வாழ்க்கை மிகவும் பொலிவு மிக்கது. எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அவரிடம் எந்த இடத்திலும், எந்தக் குறையும் காணப்படவில்லை. அவருடைய மஹிமை எல்லையற்றது. பரதன் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரம் என்றே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் அவருடைய சரித்திரம், அவரை ஒரு ஸாதுக்களில் தலைசிறந்தவராகவும், பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு யஜமான பக்தராகவும். மஹாத்மாவாகவும், பற்றற்றவராகவும், பக்தியை முதன்மையாகக் கொண்ட கர்மயோகியாகவும் நிரூபிக்கிறது. பரதன் தர்மத்தையும், நீதியையும் அறிந்தவர்; நற்குணங்கள் நிறைந்தவர்; தியாகசீலர்; புலனடக்கமும், நன்னடத்தையும் உள்ளவர். அன்பு, பணிவு இவற்றின் உருவமாய்த் திகழ்ந்தார். சிரத்தை கொண்டவராகவும், அறிவாளியாகவும் விளங்கினார். வைராக்யம், ஸத்யம், தவம், பொறை, சகிப்பு, கருணை, வாத்ஸல்யம், தீரம், வீரம், ஆழம், எளிமை, சாந்தம், இனிமை, தற்பெருமை கொள்ளாமை, எல்லோரையும் நண்பராக்கிக் கொள்ளும் தன்மை, முதலிய குணங்கள் இவரிடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்து காணப் படுகின்றன. ஸஹோதர பாசத்துக்கு இவர் உயிருள்ள உருவே போன்றவர். பரதனுக்குத் தந்தையிடமிர...