Skip to main content

Posts

Showing posts from February, 2022

பகவான் கிருஷ்ணரை எத்தனை முறை பார்தாலும் சலிப்படைவதில்லை

நித்யம் நிரீக்ஷமானானாம் யத் அபி த்வாரகௌகஸாம் ந வித்ருப்யந்தி ஹி த்ருச : ஸ்ரீயோ தாமாங்கம் அச்யுதம் மொழிபெயர்ப்பு துவாரகா வாசிகள் , அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும் , அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை . பொருளுரை தங்களது மாளிகைகளின் உச்சிக்கு ஏறிச் சென்ற துவாரகாபுரி பெண்கள் , பகவானின் குறையற்ற அழகிய திருவுடலை இதற்கு முன் தாங்கள் பலமுறை கண்டிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை . பகவானைக் காண்பதில் அவர்களுக்கு திகட்டல் உண்டாகவில்லை என்பதையே இது குறிக்கிறது . பௌதிக அழகு கொண்ட எதையும் சில முறைகள் காண்பதால் முடிவில் அது கவர்ச்சியற்றதாகிவிடுகிறது . இது திகட்டச் செய்யும் விதியாகும் . இவ்விதியால் ஜடவுலகில் மட்டுமே செயற்பட முடியும் . ஆன்மீக உலகில் இதற்கு இடமில்லை . குறையற்றவர் என்ற சொல் இங்கு கவனிக்கத்தக்கதாகும் . ஏனெனில் , தனிப்பெருங் கருணையால் பகவான் பூமியில் அவதரித்தபோதிலும் , அவர் குறையற்றவராகவே இருக்கிறார் . ஜீவராசிகள் குறையுடையவர்கள...

விருந்தாவனத்து கோபியர்களின் உண்மையான தன்னலமற்ற பிரேம பக்தி

ஒரு முறை துவாரகையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை காண நாரத மகரிஷி வந்தார் அப்போது அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில் நாரத முனிவர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நோக்கி கேட்டார். துவாராகையில் உள்ள தங்களது பத்தினிகளை விட விருதாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் தங்கள் மனம் எப்போதும் எண்ணி கொண்டிருப்பதன் காரணம் என்ன. அதை நான் எவ்வாறு உணர்ந்து கொள்வது என்றார். பகவான் கிருஷ்ணரும் நாரதரை நோக்கி சிரித்து பின்னர் மௌனமானார். சிறிது நேர உரையாடலுக்கு பின்னர்  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நாரதரை நோக்கி எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது" என்று சொன்னார். அதற்கு நாரதர், "இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள், எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்" என்று சொன்னார். கிருஷ்ணரும், "நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம். இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னார். ருக்மிணியும் ஸத்யபாமாவும்,"எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்...

சிறுவனின் நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்ட குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர். முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது கோவிலில் பூஜைகள தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார். அவனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து , கண்ணா, சாப்பிடு” என்று கூறினான் கண்ணன் அசையவில்லை உடனே அவன் வெறும் சாதத்தை - எவ்வாறு கண்ணன் சாப்பிடுவார் என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான் தயிரை சாதத்தில் கலக்கி. உப்புமாங்காயை வைத்தான் அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான் சாதம் அப்படியே இருந்தது. என்னுடைய அப்பா வந்தால் உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார். சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான் க...

பகவான் நித்யானந்தர்

  இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம். ஆதி குருவான பலராமர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூத்த சகோதரரும் ஆதி குருவுமான பலராமர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் நித்யானந்த பிரபுவாகவும், இராமரின் லீலையில் லக்ஷ்மணராகவும் பங்...

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பீஷ்மதேவரின் மரணம்

  தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ கால : ப்ரத்யுபஸ்தித : யோ யோகினஸ் சந்த - ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது . இது , தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும் . பொருளுரை பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி , பொருத்தமான ஒரு நேரத்தில் ஜடவுடலை விட்டு , அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர் . பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது : தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் , அக்னி தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் , சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது , அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து , ஆன்மீக வானத்தை அடைகின்றனர் . இந்த நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது . பக்குவமடைந்த யோகிகள் இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் . விரும்பிய நேரத்தில் உடல...