நித்யம் நிரீக்ஷமானானாம் யத் அபி த்வாரகௌகஸாம் ந வித்ருப்யந்தி ஹி த்ருச : ஸ்ரீயோ தாமாங்கம் அச்யுதம் மொழிபெயர்ப்பு துவாரகா வாசிகள் , அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும் , அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை . பொருளுரை தங்களது மாளிகைகளின் உச்சிக்கு ஏறிச் சென்ற துவாரகாபுரி பெண்கள் , பகவானின் குறையற்ற அழகிய திருவுடலை இதற்கு முன் தாங்கள் பலமுறை கண்டிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை . பகவானைக் காண்பதில் அவர்களுக்கு திகட்டல் உண்டாகவில்லை என்பதையே இது குறிக்கிறது . பௌதிக அழகு கொண்ட எதையும் சில முறைகள் காண்பதால் முடிவில் அது கவர்ச்சியற்றதாகிவிடுகிறது . இது திகட்டச் செய்யும் விதியாகும் . இவ்விதியால் ஜடவுலகில் மட்டுமே செயற்பட முடியும் . ஆன்மீக உலகில் இதற்கு இடமில்லை . குறையற்றவர் என்ற சொல் இங்கு கவனிக்கத்தக்கதாகும் . ஏனெனில் , தனிப்பெருங் கருணையால் பகவான் பூமியில் அவதரித்தபோதிலும் , அவர் குறையற்றவராகவே இருக்கிறார் . ஜீவராசிகள் குறையுடையவர்கள...