பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா போலி சாமியார்களையும், யோகிகளையும், துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான்
ஆன்மீக உணர்விற்குத் தங்கள் சொந்த வழிகளை உருவாக்கும் ஏமாற்றுக்காரர்கள் எப்போதும் இருக்கின்றனர் . சில பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா இதுபோன்ற போலி சாமியார்களையும் , யோகிகளையும் , துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான் . ஆனால் அவன் ஆன்மீகமான அல்லது பௌதீகமான எந்தவொரு நன்மையும் அவர்களிடமிருந்து பெறுவதில்லை . இக்காலத்தில் மந்திர , தந்திரங்கள் செய்யும் ஏராளமான ஏமாற்றுக்காரர்கள் இருக்கின்றனர் . தங்கள் அடியவர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்கத்தை கூட உண்டாக்கிக் காட்டுகின்றனர் . அவர்கள் அடியவர்களும் அவர்களை கடவுள் என்று நம்புகின்றனர் . கலியுகத்தில் இதுபோன்ற ஏமாற்று முதன்மையாக இருக்கின்றது . அதனால்தான் விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர உண்மையான குரு யார் என்று பின்வருமாறு விளக்குகிறார் . ஸம்ஸார - தாவாவை - வீட - லோக த்ராணாய காருண்ய - கனாகனத்வம் ப்ராப்தஸ்ய கல்யாண - குணார்ணவஸ்ய வந்தே குரோ : ஸ்ரீ - சரணாரவிந்தம் பௌதீக உலகில் எரியும் நெருப்பான வாழ்க்கைப் போராட்டத்தினை அணைக்கக் கூடிய குருவை ஒருவன் அணுக...