Skip to main content

Posts

Showing posts from January, 2026

ஸ்ரீ மத்வாசாரியர்

   பக்தி நெறி பரப்பிய ஞானச் சுடர் - ஸ்ரீ மத்வாசாரியர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாரதத் திருநாட்டில் உதித்த ஒப்பற்ற தத்துவ ஞானியும், ஆன்மீக வழிகாட்டியுமான ஸ்ரீ மத்வாசாரியர், ஆன்மீக உலகில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர். துவைதக் கோட்பாட்டை (இருமைத் தத்துவம்) நிலைநாட்டியும், பக்தி யோகத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. மத்வாசாரியரின் அவதாரத் திருநாளில், அவரது வியக்கத்தக்க வாழ்க்கை வரலாற்றையும், அவர் போதித்த உயரிய தத்துவங்களையும் சிந்திப்பது நமக்குப் பெரும் புண்ணியமாகும். பரம்பரை பரம்பொருள் மகாவிஷ்ணு, இந்த பிரபஞ்சத்தின் உன்னத ரகசியங்களை நான்கு பெரும் ஆளுமைகளுக்கு உபதேசித்தார். அன்னை லட்சுமி தேவி, சிவபெருமான், பிரம்ம தேவன் மற்றும் நான்கு குமாரர்கள் ஆகியோரே அந்த நால்வர். இந்த நான்கு வழிகளில் இருந்தே நான்கு புனிதமான ஆன்மீக மரபுகள் அல்லது 'சம்பிரதாயங்கள்' தோன்றின: ஸ்ரீ சம்பிரதாயம்: லட்சுமி தேவி வாயிலாக ராமானுஜாசாரியருக்குக் கிடைத்த ஞானவழி. ருத்ர சம்பிரதாயம்: சிவபெருமான் வாயிலாக விஷ்ணு சுவாமிக்கு அருளப்பட்ட நெறி. பிரம்ம சம்பிரதாயம்: பிரம்...

போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

ஒரு சாதுவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் (பகுதி 2)

  ஒரு சாதுவின் இரண்டாம் நிலைப் பண்புகள் திதிக்ஷவ : காருணிகா : ஸுஹ்ருத : ஸர்வ தேஹினாம் அஜாதசத்ரவ : சாந்தா : ஸாதவ : ஸாது பூஷணா : மொழிபெயர்ப்பு ஸாதுவின் அடையாளங்கள் என்னவென்றால் , அவர் எல்லா வாழும் உயிரினங்களிடம் கொள்ளும் சகிப்புத் தன்மை , கருணை , தோழமை ஆகும் . அவருக்கு எதிரிகள் இல்லை , அவர் அமைதியானவர் , புனித நூல்களைப் பின்பற்றுபவர் . அவரின் எல்லா தனிப் பண்புகளும் விழுமியவை . பொருளுரை மேலே வர்ணிக்கப்பட்டதுபோல , ஸாது என்பவர் பகவானின் பக்தராவார் . அதனால் , அவருடைய அக்கறை பகவானிடம் பக்தித் தொண்டு செய்வது பற்றிய அறிவொளியை மக்களிடம் ஏற்படுத்துவதே ஆகும் . அதுவே அவர் கருணையாகும் . பகவானுக்குப் பக்தித் தொண்டு புரியாத மனித வாழ்வு பாழ் என்று அவர் அறிவார் . ஒரு பக்தர் நாடு முழுவதும் பயணம் செய்து , வீடு வீடாகச் சென்று , “ கிருஷ்ண உணர்வு கொள் , பகவான் கிருஷ்ணரின் பக்தராக இருங்கள் . உங்கள் மிருக மனப்பாங்கை நிறைவு செய்வதால் உங்கள் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள் . மனித வாழ்வு என்பது தன்னை உணர்தலுக்காக அல்லது கிருஷ்ண உணர்வு ...