Skip to main content

Posts

Showing posts with the label General / பொது (Stories)

வாள் நுனியில் ஒரு விருந்து

மிதிலை நாட்டின் புகழ்பெற்ற மன்னராகவும், சீதா தேவியின் அன்பான தந்தையாகவும் திகழ்ந்தவர் ஜனக மகாராஜா. அவர் நாட்டை ஆளும் பெரிய பொறுப்பில் இருந்தாலும், உள்ளத்தால் பற்றற்ற ஒரு துறவியைப் போல வாழ்ந்து வந்தார். எல்லையில்லா அதிகாரமும் அளவற்ற செல்வமும் அவரிடம் இருந்தன; ஆனால், அவர் எப்போதும் பகவான் ஶ்ரீ ஹரியின் நினைவிலேயே மூழ்கி, தனது அனைத்து செயல்களையும் பகவானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்தார். ஒருநாள், சில பிராமணர்கள் ஜனகரிடம் வந்தார்கள். "மன்னரே, நாடு முழுவதையும் ஆளும் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டே, உங்களால் எப்படி ஆன்மீகத்தில் ஈடுபாட்டோடும், பொருட்களின் மீது பற்று இல்லாமலும் வாழ முடிகிறது?" என்று வியப்புடன் கேட்டார்கள். ஜனக மகாராஜா லேசாகப் புன்னகைத்தார். "பிராமணர்களே! நாளை என் அரண்மனைக்கு விருந்துண்ண வாருங்கள். விருந்து முடிந்ததும் உங்கள் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்," என்று அன்போடு அழைப்பு விடுத்தார். மறுநாள், பிராமணர்கள் அரண்மனைக்கு வந்தார்கள். அங்கு அவர்களுக்காக விதவிதமான, சுவையான உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன. அரண்மனையின் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைக் கண்டு பிராமணர்கள் வியப்பி...

"இந்த ஒரு மாற்றம் உங்கள் வாழ்வை மாற்றும்!"

பிருந்தாவனம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகள் நிறைந்த புனித பூமி. காற்றில் ராதா நாமமும், யமுனையின் அலைகளில் பிரேமையும் வழிந்தோடும் அத்தலத்தில், பகவத் பக்தியில் திளைத்த ஒரு சாதகன் வாழ்ந்து வந்தான். அவனுக்குள் ஆன்மீகத் தீக்ஷை பெற வேண்டும் என்ற ஆர்வம் தீயாக எரிந்தது. அதற்காக, பிருந்தாவனத்தின் தவப்புதல்வரான ஒரு உத்தம கௌடீய வைஷ்ணவ குருதேவரின் சந்நிதியை அடைந்தான். அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, கைகூப்பி மிகுந்த பணிவோடு வேண்டினான்: "என் குருதேவரே! உங்களை நான் என் ஆன்மீக வழிகாட்டியாக மனதார ஏற்றுக்கொண்டுவிட்டேன். இந்த எளியவன் மீது கருணை கூர்ந்து, எனக்குத் தீக்ஷை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும்." சீடனின் ஆசையைக் கேட்ட குருதேவர், மெல்லிய புன்னகையோடு அவனை நோக்கினார்: "மகனே! தீக்ஷை என்பது வெறும் சடங்கல்ல, அது ஆன்மாவின் மறுபிறப்பு. என்னிடமிருந்து அதைப் பெறுவதற்கு உன்னிடம் என்ன தகுதி இருக்கிறது?" சாதகன் சற்றே தயங்கி, "குருவே, தகுதி என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? என்னிடமிருந்து எத்தகைய உயர்வை எதிர்பார்க்கிறீர்கள்?" என்றான். குருதேவர் அமைதியாகக் கூறினார்: "சர...

ஜாக்கிரதையாக இருங்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் !

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில ஹரிஜன் ஒருவன் வசித்து வந்தான் அவன் திருமணமாகி நெடு நாளாகியும் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாகும் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அதனால் அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் உனக்கு குழந்தை உண்டாகும் என்றார்.   தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான் ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.  அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது கோடைக்காலம் வெயில்  வெப்பத்தால் துன்பத்திற்கு ஆளானார் . சிறு தூரத்தில் தான் சென்று கொண்டிருந்த வழியில் ...

துறவி மற்றும் ஆடு

ஒரு நாள் ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தார். அந்தப் பாதையில் அவர் செல்லும் போது, ஒரு குயவன், தனது வீட்டின் முன் அமர்ந்து பானைகள் செய்து கொண்டிருந்தான். அருகில் ஏராளமான மண் பானைகள், சட்டிகள், குடங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலேயே, ஒரு ஆடு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அது ஓர் நொடிக்கும் அமைதியின்றி கதறிக் கொண்டே இருந்தது. துறவி அந்த இடத்தில் வந்து தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும், குயவன் மரியாதையுடன் வணங்கி, ஒரு சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீரைப் பருகிய துறவி கேட்டார்: “இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?” “இல்லை சுவாமி,” என்றான் குயவன். “இது காட்டாடு. வழியில் வந்ததைக் கண்டு பிடித்து கட்டிப் போட்டேன்.” “எதற்காக?” என்று சற்றே வியப்புடன் கேட்டார் துறவி. “ஒரு பண்டிகை வரவிருக்கிறது. அந்த நாளில் இறைவனுக்குப் பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன்,” என்றான் குயவன். துறவியின் முகத்தில் மேலும் ஆச்சரியம் தெரிந்தது. “பலியா?” என்று கேட்டார். “ஆமாம் சுவாமி. திருவிழா தினங்களில் இறைவனுக்குப் பலி கொடுக்கப்படும். அது அவருக்...

நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும்.

நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும். ஒரு உயிர்வாழி எவ்வாறு தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, இறந்தபிறகு ஒரு உடலிலிருந்து மற்றோரு உடலிற்கு செல்கிறது என்பதை பின்வரும் கதையிலிருந்து அறியலாம். கைலாஷ் என்ற ஒருவன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தான். ஒரு நாள் மாமுனிவரான நாரதர், அவனிடம் வந்து, "கைலாஷ்! என்னோடு வா. நான் வைகுந்தத்திற்கு செல்கிறேன். என்னுடன் உன்னையும் அழைத்து செல்கிறேன்", என்று கூறினார். அதற்கு கைலாஷ், "என்னை மன்னியுங்கள் ஐயா. என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். நான் அவர்களை பராமரிக்க வேண்டும். என்னால் இப்போது வர இயலாது. சிறிது காலம் கழித்து பார்க்கலாம்", என்று பதிலளித்தான். பல வருடங்கள் கழித்து நாரத முனிவர் மீண்டும் கைலாஷிடம் வந்து, "கைலாஷ்! இப்போது வைகுந்தம் வர தயாரா?" என்று கேட்டார். கைலாஷ், "அய்யா, என்னுடைய பேரப்பிள்ளைகளை நான் கவனிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உதவி என் குடும்பத்தினருக்கு மிகவும் அவசியம். என்னால் வர இயலாது", என்று கூறினான். மீண்டும் சில வருடங்கள் கழித்து அங்கு வந்த நாரத முனிவர் கைலாஷ் இற...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more