Skip to main content

Posts

வாள் நுனியில் ஒரு விருந்து

மிதிலை நாட்டின் புகழ்பெற்ற மன்னராகவும், சீதா தேவியின் அன்பான தந்தையாகவும் திகழ்ந்தவர் ஜனக மகாராஜா. அவர் நாட்டை ஆளும் பெரிய பொறுப்பில் இருந்தாலும், உள்ளத்தால் பற்றற்ற ஒரு துறவியைப் போல வாழ்ந்து வந்தார். எல்லையில்லா அதிகாரமும் அளவற்ற செல்வமும் அவரிடம் இருந்தன; ஆனால், அவர் எப்போதும் பகவான் ஶ்ரீ ஹரியின் நினைவிலேயே மூழ்கி, தனது அனைத்து செயல்களையும் பகவானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்தார். ஒருநாள், சில பிராமணர்கள் ஜனகரிடம் வந்தார்கள். "மன்னரே, நாடு முழுவதையும் ஆளும் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டே, உங்களால் எப்படி ஆன்மீகத்தில் ஈடுபாட்டோடும், பொருட்களின் மீது பற்று இல்லாமலும் வாழ முடிகிறது?" என்று வியப்புடன் கேட்டார்கள். ஜனக மகாராஜா லேசாகப் புன்னகைத்தார். "பிராமணர்களே! நாளை என் அரண்மனைக்கு விருந்துண்ண வாருங்கள். விருந்து முடிந்ததும் உங்கள் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்," என்று அன்போடு அழைப்பு விடுத்தார். மறுநாள், பிராமணர்கள் அரண்மனைக்கு வந்தார்கள். அங்கு அவர்களுக்காக விதவிதமான, சுவையான உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன. அரண்மனையின் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைக் கண்டு பிராமணர்கள் வியப்பி...

பழ வியாபாரியின் சரணாகதி

பதம் 10 க்ரீணீஹி போ: ஃபலானீதி ஸ்ருத்வா ஸத்வரம் அச்யுத: ஃபலார்தீ தான்யம் ஆதாய யயௌ ஸர்வ-ஃபல-ப்ரத: மொழிபெயர்ப்பு ஒரு சமயம் பழ வியாபாரி ஒருத்தி, “விரஜவாசிகளே, நீங்கள் பழங்கள் வாங்க விரும்பினால் இங்கு வாருங்கள்!” என்று கூவியழைத்தாள். இதைக் கேட்ட கிருஷ்ணர், தமக்குச் சில பழங்கள் தேவைப்பட்டது போல், உடனே கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொண்டு பண்டமாற்று செய்து கொள்ளச் சென்றார். பொருளுரை ஆதிகுடிமக்கள் பொதுவாக பழங்கள் விற்பதற்காக கிராமவாசிகளிடம் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணரிடம் எந்த அளவுக்குப் பற்று கொண்டிருந்தனர் என்பது இங்கு விவரிக்கப்படுகிறது. கிருஷ்ணர், ஆதிகுடிமக்களுக்கு ஆதரவு காட்டுவதற்காக, உடனே பழங்களை வாங்கச் செல்வார். மற்றவர்களைப் போலவே, பண்டமாற்று செய்து கொள்ள கையில் அரிசியுடன் செல்வார். பதம் 11 ஃபல-விக்ரயிணீ தஸ்ய ச்யுத-தான்ய-கர-த்வயம்   ஃபலைர் ஆபூரயத் ரத்னை: ஃபல-பாண்டம் அபூரி ச மொயிபெயர்ப்பு கிருஷ்ணர் பழக்காரியை நோக்கிக் விரைந்து செல்லும் பொழுது. அவர் பிடித்திருந்த தானியங்களில் பெரும் பகுதி கொட்டிவிட்டது. இருபப்பினும், பழக்காரி கிருஷ்ணரின் கரங்களைப் பழங்களால் நிரப்பி...

ஜூலன் யாத்திரையின் முக்கியத்துவம்

ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் திவ்யமான ஊஞ்சல் லீலை: ஶ்ரீ ஜூலன் யாத்திரை ஶ்ரீ ஜூலன் யாத்திரை (ஊஞ்சல் சேவை) என்பது ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் திவ்யமான ஊஞ்சல் லீலையைக் கொண்டாடும், உலகெங்கிலும் உள்ள வைஷ்ணவர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு மங்களகரமான திருவிழாவாகும். இந்த ஜூலன் உத்ஸவம், கீர்த்தனம், ஊஞ்சல் சேவை மற்றும் ஶ்ருங்கார சேவை ஆகியவற்றின் மூலமாகத் தங்களது பக்தித் தொண்டைச் சமர்ப்பிக்க பக்தர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. ஜூலன் யாத்திரை: காலம் மற்றும் நாட்கள் ஜூலன் யாத்திரை, பவித்ரோபனா ஏகாதசியில் தொடங்கி, பலராம பூர்ணிமா அல்லது ஶ்ராவண பூர்ணிமா நாளில் நிறைவடைந்து, 5 நாட்கள் வரை நடைபெறுகிறது. ஶ்ரீ பிருந்தாவன தாமத்தில் பாரம்பரியமாக ஜூலன் யாத்திரை 13 நாட்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஜூலன் யாத்திரை: பொருள், தோற்றம் மற்றும் பின்னணி லீலை பொருள்: ‘ஜூலன்’ என்பது ஊஞ்சலையும், ‘யாத்திரை’ என்பது ஊர்வலம்/திருவிழாவையும் குறிப்பதால், இது 'ஊஞ்சல் திருவிழா' எனப் பொருளாகிறது; பக்தர்கள் மலர்களாலும் இலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட மர ஊஞ்சலில் ஶ்ரீ ஶ்ரீ ராதா-...

கிருஷ்ண நாம உச்சாடனமும் மனத்தூய்மையும்"

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே” ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இது எல்லை கடந்த ஒலி அதிர்வு. மனக்கண்ணாடியில் படிந்திருக்கும் மாசைத் துடைக்க நமக்கு உதவுவது. நியூயார்க் நகரின் இரண்டாவது சாலையில் நெருக்கமான வாகனப் போக்குவரத்து காரணமாக எல்லாப் பொருட்களின் மீதும் தூசியும் புகைக் கரியும் படிந்திருப்பது போல் நம் மனக் கண்ணாடியின் மீதும் உலக வாழ்வு சார்பான அழுக்கைப் படிய விட்டிருக்கிறோம். இவ்வுலகில் நம் நடவடிக்கைகளை நாம் கையாளும் விதம் காரணமாக நம் மனமெனும் தெளிவான கண்ணாடியில் பெருமளவில் தூசி சேர்ந்து அதன் விளைவாக நம்மால் எதையும் சரியான வடிவில் பார்க்க முடிவதில்லை. இந்த எல்லை கடந்த ஒலி அதிர்வு (ஹரே கிருஷ்ண மந்திரம்) தூசியை அகற்றி நம் உண்மையான அமைப்பிலான நிலையில் நம்மை நாம் தெளிவாகக் காண உதவுகிறது. “நான் இந்த உடலில்லை; நான் ஆன்மா, உணர்வு என் சின்னம்” என்று நாம் இருத்திக் கொள்ள முடிகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது நம் உணர்வு தெளிவு பெற்று இவ்வுலக இன்னல்களெல்லாம் மறைந்து போகின்றன. இந்த இகவுலகை எப்போதும் எரித்துவரும் தீ ஒன்றுண்டு; அதை அணைக்க எல்லோரும் முய...

"இந்த ஒரு மாற்றம் உங்கள் வாழ்வை மாற்றும்!"

பிருந்தாவனம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகள் நிறைந்த புனித பூமி. காற்றில் ராதா நாமமும், யமுனையின் அலைகளில் பிரேமையும் வழிந்தோடும் அத்தலத்தில், பகவத் பக்தியில் திளைத்த ஒரு சாதகன் வாழ்ந்து வந்தான். அவனுக்குள் ஆன்மீகத் தீக்ஷை பெற வேண்டும் என்ற ஆர்வம் தீயாக எரிந்தது. அதற்காக, பிருந்தாவனத்தின் தவப்புதல்வரான ஒரு உத்தம கௌடீய வைஷ்ணவ குருதேவரின் சந்நிதியை அடைந்தான். அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, கைகூப்பி மிகுந்த பணிவோடு வேண்டினான்: "என் குருதேவரே! உங்களை நான் என் ஆன்மீக வழிகாட்டியாக மனதார ஏற்றுக்கொண்டுவிட்டேன். இந்த எளியவன் மீது கருணை கூர்ந்து, எனக்குத் தீக்ஷை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும்." சீடனின் ஆசையைக் கேட்ட குருதேவர், மெல்லிய புன்னகையோடு அவனை நோக்கினார்: "மகனே! தீக்ஷை என்பது வெறும் சடங்கல்ல, அது ஆன்மாவின் மறுபிறப்பு. என்னிடமிருந்து அதைப் பெறுவதற்கு உன்னிடம் என்ன தகுதி இருக்கிறது?" சாதகன் சற்றே தயங்கி, "குருவே, தகுதி என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? என்னிடமிருந்து எத்தகைய உயர்வை எதிர்பார்க்கிறீர்கள்?" என்றான். குருதேவர் அமைதியாகக் கூறினார்: "சர...

புனிதமான கங்கை நதியின் மகிமையும் தவளைகளின் மோக்ஷ பிராப்தியும்

முன்னொரு காலத்தில், இந்த பூமியில் சத்தியதர்மா என்றொரு அரசர் வாழ்ந்து வந்தார். அவரது அரசியின் பெயர் விஜயா . அவள் நற்குணமும் அழகும் பொருந்தி, தன் கணவருக்குச் சேவை செய்வதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவள். பூவுலகில் ஏழாயிரம் ஆண்டுகள் எல்லா இன்பங்களையும் அனுபவித்த அந்த தம்பதியினர், ஒரு நாள் மரணமடைந்தனர். உடனே, மரணத்தின் அதிபதியான யமராஜரின் தூதர்கள் அவர்களைப் பாசக்கயிற்றால் கட்டி, நரக வேதனை தரும் வழியே யமலோகத்திற்கு இழுத்துச் சென்றனர். அவர்களைப் பார்த்த தர்மராஜர் (யமராஜர்) ,   சித்திரகுப்தனை அழைத்து, "இவ்விருவரின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பற்றி நமக்குக் கூறு," என்று கட்டளையிட்டார். சித்திரகுப்தனும் அவர்களது பிறப்பு முதல் செய்த செயல்களை ஆராய்ந்து, "ஹே பிரபு, கேளுங்கள்! முன்னொரு காலத்தில், புலிகளால் துரத்தப்பட்ட மான் ஒன்று தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடி வந்து, இந்த அரசரின் சபையில் அடைக்கலம் புகுந்தது. ஆனால், அந்த மானைக் கண்ட அரசர், இரக்கமில்லாமல் தன் வாளினால் அதன் இடுப்பில் பலமாக வெட்டினார். தன்னிடம் தஞ்சம் புகுந்த ஒரு ஜீவனைக் காப்பாற்றாமல் வதைத்ததால், இந்த அரசரும் இவரது மனைவிய...

ஆபத்தான சந்தேகம்... அழிவை தரும் அதீத ஆர்வம்!

ஆன்மீகப் பாதையில் முன்னேற விரும்புபவர்களுக்கு 'ஸ்ரத்தா' எனப்படும் தூய நம்பிக்கை மிக மிக முக்கியமானது. இந்த நம்பிக்கையை நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், தேவையில்லாத சந்தேகம், சிற்றறிவால் விளையும் அதீத ஆர்வம் போன்ற ஆபத்தான பள்ளங்களால் இந்த நம்பிக்கை எளிதில் பலவீனமடைந்துவிடக்கூடும். நம்பிக்கையின் இந்த பலவீனமான தன்மையை விளக்குவதற்கு ஒரு அழகான சீடனின் கதை கூறப்படுகிறது. அந்தச் சீடன் தினமும் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வைத் தேடி, அந்த ஆற்றைக் கடக்க தனக்குத் தொடர்ந்து உதவக்கூடிய ஒரு வழியைக் காட்டுமாறு தன் குருதேவரிடம் அவன் வேண்டினான். அதற்கு அவனது குரு, ஒரு காகிதத்தில் ஏதோ ஒன்றை எழுதி, அதை ஒரு சிறிய மஞ்சூஷாவுக்குள் (தாயத்துக்குள்) வைத்து முத்திரையிட்டு, ஒரு மோதிரத்துடன் இணைத்து அந்தச் சீடனிடம் கொடுத்தார். அதை பத்திரமாக அணிந்துகொண்டு செல்லுமாறு குரு அவனுக்குக் கட்டளையிட்டார். தன் குரு தமக்கு ஒரு சக்திவாய்ந்த ஆன்மீகப் பொருளை வழங்கியிருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் (ஸ்ரத்தையுடன்) அந்தச் சீடன் தண்ணீரின் மீது நடக்க...

முதிர்ந்த பக்தர் யார்? ஓர் விளக்கம்"

நாரதிய புராணத்தின் ஶ்ரீ ஹரி-பக்தி-சுதோதயாவின் 18-ஆம் அத்தியாயத்திலிருந்து ஒரு ஆன்மீகக் கதை முற்காலத்தில் கங்கைக் கரையில் முனிவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளையும் தத்துவங்களையும் பற்றித் தங்களுக்குள் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில், ஏழு கல்பங்கள் ஆயுள் கொண்ட மகாமுனிவரான மார்க்கண்டேய ரிஷி அங்கு எழுந்தருளினார். [ஒரு கல்பம் என்பது சுமார் 432 கோடி பௌதிக வருடங்களாகும்.] அவர் வந்தவுடன், அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்குத் தங்களது மனமார்ந்த வணக்கங்களைச் செலுத்தி, அமர்வதற்கு உயரிய ஆசனத்தை அளித்து கௌரவித்தனர். அப்போது மார்க்கண்டேய ரிஷி, தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த பராசரர் என்ற சிறுவனைக் கவனித்தார். அச்சிறுவனுக்கு வெறும் ஏழு வயதே ஆகியிருந்தபோதிலும், மார்க்கண்டேயர் தன் ஆசனத்திலிருந்து கீழே இறங்கி, அந்தச் சிறுவனுக்குத் தனது சாஷ்டாங்க வணக்கங்களைச் செலுத்தினார். இதைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் அனைவரும் அளவற்ற வியப்பும் குழப்பமும் அடைந்தனர். உடனே பராசரர் திடுக்கிட்டு எழுந்து, முதியவரான மார்க்கண்டேய ரிஷியின் திருவடிகளில் விழு...

பகவானின் கதையும் கண்டாபரணமும்: அசுர சிக்ஷையும் பக்த ரக்ஷையும்

கௌமோதகீம் பகவதோ தயிதாம் ஸ்மரேததிக்தாமராதிபடசோணிதகர்தமேன மாலாம் மதுவ்ரதவரூதகிரோபகுஷ்டாம்  சைத்யஸ்ய தத்வமமலம் மணிமஸ்ய கண்டே மொழிபெயர்ப்பு   யோகி அவருக்கு மிகவும் அன்பான, கௌமோதகீ எனப் பெயருடைய அவருடைய கதாயுதத்தைத் தியானிக்க வேண்டும். இந்தக் கதை, பகைமையுடைய வீரர்களான அரக்கர்களைத் தகர்த்து அவர்களின் குருதியால் பூசப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள அழகிய மாலையின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அந்த மாலை எப்போதும் ரீங்காரமிடும் வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள முத்தாரத்தைத் தியானிக்க வேண்டும், அது எப்போதும் அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய உயிரினங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பொருளுரை   யோகி பகவானுடைய தெய்வீக உடலின் பல்வேறுபட்ட உறுப்புகளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உயிரினங்களின் உடலமைப்பு நிலை புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிரினங்களில் இரண்டு வகைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று அராதி எனப்படுகிறது. அவை பரம புருஷ பகவானின் லீலைகளைப் புரிந்துகொள்வதை வெறுக்கின்றன. பகவான் தன் கையில், எப்போதும் அசுரர்களைக் கொன...

பகவத் கடாக்ஷம்: பக்தர்களின் துன்பங்களை முற்றிலும் நீக்கும் துக்க நிவாரணி

தஸ்யாவலோகமதிகம் க்ருபயாதிகோர தாபத்ரயோபசமனாய நிஸ்ருஷ்டமக்ஷ்ணோ:   ஸ்நிக்தஸ்மிதாநுகுணிதம் விபுலப்ரஸாதம் த்யாயேச்சிரம்விபுலபாவனயா குஹாயாம் மொழிபெயர்ப்பு யோகிகள் முழு பக்தியுடன் பகவானின் கண்களிலிருந்து அடிக்கடி வீசும் அன்புப் பார்வைகளை ஆழ்ந்து நினைக்க வேண்டும். ஏனெனில், அவரது பக்தர்களின் அச்சம் தரத்தக்க மூன்று வித வேதனைகளுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன. இனிய புன்சிரிப்பினைத் தொடர்ந்துவரும் அவரது பார்வைகள் அதிகமான அருள் நிறைந்தவை. பொருளுரை ஒருவர் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வில், இந்த ஜடவுடலில் இருக்கும் வரை அவர் கவலைகள், வேதனைகளால் துன்பப்படுதல் இயற்கையானது. ஒருவர் உன்னதமான இருப்பிடத்தில் இருந்தபோதிலும், அவர் ஜட சக்தியின் பாதிப்பைத் தவிர்க்க முடியாது சில சமயம் தொல்லைகள் வருகின்றன. ஆனால் பக்தர்களின் கவலைகளும் வேதனைகளும், அவர்கள் பரம புருஷ பகவானை அவருடைய அழகிய வடிவத்தில் அல்லது பகவானின் சிரித்த முகத்தை நினைக்கும் பொழுது உடனே தணிக்கப்படுகின்றன. பகவான் தன் பக்தர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அளிக்கிறார். அவர் அருளின் மிகச்சிறந்த வெளிப்பாடு, அவரது பக்தர்களுக்கான கருணை நிறைந்த புன்சிரிப்பு நிறைந்த முகமாக...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more