Skip to main content

Posts

Showing posts with the label Srimad Bhagavatam Story / ஶ்ரீமத் பாகவத கதைகள்(Story )

பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்

  பிரகலாதர் பகவான் நரசிம்மரை சாந்தப்படுத்துதல்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   இரண்யகசிபுவைக் கொன்ற பிறகும் பகவானுடைய கோபம் தனியவில்லை . பிரம்மா முதலான தேவர்களாலும் அவரை சாந்தப்படுத்த இயலவில்லை . ஸ்ரீதேவியும் , நாராயணரின் இணையிரியா நாயகியுமான தாய் லக்ஷ்மிதேவிகூட , பகவான் நரசிம்மதேவர் முன் வரத் துணியவில்லை . பிறகு பிரம்மதேவர் , பகவானை அணுகி அவரைச் சாந்தப்படுத்தும்படி பிரகலாத மகாராஜனை கேட்டுக் கொண்டார் . தமது தலைவராகிய பகவான் நரசிம்மதேவர் தன்னிடம் கொண்டுள்ள பாசத்தில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த பிரகலாதர் சிறிதும் அச்சப்படவில்லை . அவர் மௌனமாக பகவானுடைய தாமரைப் பாதங்களை அணுகி , மரியாதையுடன் அவரை வணங்கினார் . பகவான் நரசிம்மர் பிரகலாதரிடம் பேரன்பு கொண்டிருந்ததால் , அவர் தமது கையைப் பிரகலாதரின் தலைமேல் வைத்து அவரை ஆசீர்வதித்தார் . பகவானுடைய நேரடியான ஸ்பரிசத்தினால் பிரகலாதர் உடனே ஆத்ம ஞானத்தைப் ( ப்ரஹ்ம - ஞான ) பெற்றார் . இவ்வாறாக அவர் , பூரண ஆத்ம ஞானத்துடனும் , பக்தித் பரவசத்துடனும் பகவானை துதித்துப் போற்றினார் ...