Skip to main content

Posts

Showing posts from January 2, 2026

எஸ் ! நோ ! வெரிகுட் !

  ஆம், இல்லை, மிக்க நன்று! தாம் கேள்விப்படும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு மேலோட்டமாக மொழி அறிவு பெற்ற ஒரு கிராமவாசி ஒருவன் இருந்தான். அவனுக்கு ‘எஸ்’ (ஆம்), ‘நோ’ (இல்லை) மற்றும் ‘வெரி குட்’ (மிக்க நன்று) ஆகிய ஒருசில சொற்கள் மட்டுமே அத்துப்படி. அச்சொற்களை எங்கு, எப்பொழுது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற எவ்விதப் புரிதலும் அவனிடம் இருந்ததில்லை. இருப்பினும், ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமூகம் அளிக்கும் மதிப்பைப் பெற்றிடும் ஆசையில், தகுந்த இடமறியாமல் அந்தச் சொற்களைப் பிறர் முன்னிலையில் உதிர்ப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை, சில கொள்ளையர்கள் ஒரு கொலைச் செயலைச் செய்துவிட்டு, அக்குற்றத்தைச் செய்யாத அந்த அப்பாவிக் கிராமவாசி தான் குற்றவாளி என்று ஜோடித்துத் தப்பிச் சென்றனர். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிபதி அந்தக் கிராமவாசியிடம் வங்க மொழியில், "இந்தக் கொலையை நீதான் செய்தாயா?" என்று வினவினார். மூடத்தனமான அந்த நபர், "இந்த நீதிபதி முன்னிலையில் நான் ஆங்கிலத்தில் பேசினால், அவர் என்னை மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு கனவான் என்று கருதி எனக்கு மிகுந்த மரியாத...

பக்தியைப் பெறுவது எப்படி?

  ப்ரஸங்கம் அஜரம் பாசம் ஆத்மன : கவயோ விது : ஸ ஏவ ஸாதுஷூ க்ருதோ மோக்ஷ த்வாரம் அபாவ்ருதம் மொழிபெயர்ப்பு ஒவ்வொரு படித்த மனிதனும் ஜடப் பொருளின் மீது கொண்டுள்ள பற்றானது , ஆன்மாவுக்கு எதிரான மிகப்பொரிய சிக்கல் ஆகும் என்று நன்கு அறிந்திருக்கிறான் . ஆனால் , அதே பற்று தன்னை அறிந்த பக்தர்களிடம் இருக்கும் பொழுது , அது வீடுபேற்றுக்கான கதவைத் திறக்கிறது . பொருளுரை ஒருவர் ஒரு பொருள் மீது கொண்ட பற்றே கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் பந்தத்திற்கு காரணம் ஆகும் . அதே பற்றை பிறவற்றின் மேல் செலுத்தினால் , அது வீடு பேற்றுக்கு வழிவகுக்கிறது என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . பற்று கொல்லப்பட இயலாதது ; அது மாற்றப்பட வேண்டியதாகும் . ஜடவுலகப் பொருளுக்கான பற்று உலகியல் உணர்வு நிலை என்றும் , கிருஷ்ணர் அல்லது அவர் பக்தருக்கான பற்று கிருஷ்ண உணர்வு நிலை என்றும் அழைக்கப்படும் . அதனால் உணர்வு நிலை பற்றுதலின் தளமாகும் . நாம் உலக உணர்விலிருந்து கிருஷ்ண உணர்வு நிலைக்கு , உணர்வு நிலையைத் தூய்மைப்படுத்தும் பொழுது , விட...