Skip to main content

ஒரு சாதுவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் (பகுதி 1)

 ஒரு சாதுவின் முதன்மைப் பண்புகள் 




மயிஅனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம்
மத் க்ருதே த்யக்தகர்மாணஸ் த்யக்த ஸ்வஜன பாந்தவா:


மொழிபெயர்ப்பு

அம்மாதிரி ஸாது விலகிச் செல்லாமல் பகவானிடம் கடும் உறுதியுடன் கூடிய பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார். பகவானுக்காக அவர் உலகத்தில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் போன்ற பிற தொடர்புகளை ஒதுக்கி விடுகிறார்.


பொருளுரை

துறவு வாழ்வில் இருப்பவர், ஸந்யாஸி, ஸாது என்றும் அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் தன் வீடு, தன் வசதி, தன் நண்பர்கள், தன் உறவினர்கள் மற்றும் தன் நண்பர்கள், குடும்பத்திற்கான தனது கடமைகள், இவற்றைத் துறக்கிறார். அவர் பரம புருஷ பகவானின் பொருட்டு இவற்றைத் துறக்கிறார். சந்நியாசி பொதுவாக வாழ்வின் துறவு நெறியில் இருப்பவர். ஆனால் அவர் துறவு அவரது ஆற்றல், சிறந்த தவத்துடன் பகவானின் தொண்டில் செயல்பட்டால் மட்டுமே வெற்றியடையும். அதனால் பக்திம் குர்வந்தி யே த்ருடாம் என்று இங்கு கூறப்படுகிறது. ஸாது என்பவர் பகவானின் தொண்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டும் வாழ்வின் துறவு நெறியிலும் இருப்பவராவார். ஸாது என்பவர் பகவானின் சேவைக்காக, சமுதாயம், குடும்பம் மற்றும் உலக மனித தத்துவத்திற்கான எல்லாப் பொறுப்பையும் விட்டு விட்டவர். அவர் இந்த உலகில் பிறப்பு எடுத்தவுடன், அவருக்கு மக்களிடம், தேவர்களிடம், சிறந்த முனிவர்களிடம், பொதுவாக வாழும் உயிரினங்களிடம், அவர் பெற்றோரிடம், குடும்பத்தின் முன்னோர்களிடம் மற்றும் பிறரிடம் பல பொறுப்புகளும், கடமை உணர்ச்சிகளும் உண்டு. அவர் பகவானின் தொண்டிற்காக அம்மாதிரி கடமைகளை விட்டுவிட்டால், அவர் அக்கடமைகளைத் துறந்ததற்காக, தண்டிக்கப்படமாட்டார். ஆனால் புலன் திருப்திக்காக ஒருவர் கடமைகளைத் துறந்தால், அவர் இயற்கையின் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்.


( ஶ்ரீமத் பாகவதம் 3.25.22 / பொருளுரை 


ஸாது மற்றும் துறவறம்

  • துறவியின் இலக்கணம்: துறவு நிலையில் இருப்பவர் (ஸந்யாஸி) 'ஸாது' என்று அழைக்கப்படுகிறார். அவர் பகவானுக்காகத் தனது வீடு, வசதிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பக் கடமைகளை முழுமையாகத் துறக்கிறார்.

  • உறுதியான பக்தி: வெறும் துறவு மட்டும் போதுமானதல்ல; அந்தத் துறவு ஆற்றல்மிக்க தவத்துடனும், பகவானின் சேவையில் மிகுந்த உறுதியுடனும் (த்ருடாம்) இணைந்திருக்கும் போது மட்டுமே வெற்றி பெறுகிறது.


கடமைகளும் பொறுப்புகளும்

  • பல்வேறு கடப்பாடுகள்: ஒரு மனிதன் பிறக்கும்போதே சமூகம், தேவர்கள், முனிவர்கள், பெற்றோர், முன்னோர்கள் மற்றும் சக உயிரினங்கள் எனப் பல தரப்பினருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறான்.

  • விலக்கு அளிக்கப்படுதல்: ஒரு ஸாது பகவானின் தொண்டிற்காக இத்தகைய உலகாயதக் கடமைகளைத் துறக்கும்போது, அவர் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதற்காக அவர் தண்டிக்கப்படுவதில்லை.


துறவின் நோக்கம்: ஆன்மீகம் vs புலன் இன்பம்

  • தண்டனைக்குரிய துறவு: ஒருவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்யாமல், வெறும் புலன் இன்பத்திற்காகவும் (Sensory satisfaction) சோம்பேறித்தனத்திற்காகவும் துறவு மேற்கொண்டால், அவர் இயற்கையின் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்.

  • உன்னதத் துறவு: ஆனால், பரம புருஷ பகவானின் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உலகத் தொடர்புகளைத் துறப்பவர் உன்னதமானவராகக் கருதப்படுகிறார்.


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...