ஒரு சாதுவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் (பகுதி 1)

 ஒரு சாதுவின் முதன்மைப் பண்புகள் 




மயிஅனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம்
மத் க்ருதே த்யக்தகர்மாணஸ் த்யக்த ஸ்வஜன பாந்தவா:


மொழிபெயர்ப்பு

அம்மாதிரி ஸாது விலகிச் செல்லாமல் பகவானிடம் கடும் உறுதியுடன் கூடிய பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார். பகவானுக்காக அவர் உலகத்தில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் போன்ற பிற தொடர்புகளை ஒதுக்கி விடுகிறார்.


பொருளுரை

துறவு வாழ்வில் இருப்பவர், ஸந்யாஸி, ஸாது என்றும் அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் தன் வீடு, தன் வசதி, தன் நண்பர்கள், தன் உறவினர்கள் மற்றும் தன் நண்பர்கள், குடும்பத்திற்கான தனது கடமைகள், இவற்றைத் துறக்கிறார். அவர் பரம புருஷ பகவானின் பொருட்டு இவற்றைத் துறக்கிறார். சந்நியாசி பொதுவாக வாழ்வின் துறவு நெறியில் இருப்பவர். ஆனால் அவர் துறவு அவரது ஆற்றல், சிறந்த தவத்துடன் பகவானின் தொண்டில் செயல்பட்டால் மட்டுமே வெற்றியடையும். அதனால் பக்திம் குர்வந்தி யே த்ருடாம் என்று இங்கு கூறப்படுகிறது. ஸாது என்பவர் பகவானின் தொண்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டும் வாழ்வின் துறவு நெறியிலும் இருப்பவராவார். ஸாது என்பவர் பகவானின் சேவைக்காக, சமுதாயம், குடும்பம் மற்றும் உலக மனித தத்துவத்திற்கான எல்லாப் பொறுப்பையும் விட்டு விட்டவர். அவர் இந்த உலகில் பிறப்பு எடுத்தவுடன், அவருக்கு மக்களிடம், தேவர்களிடம், சிறந்த முனிவர்களிடம், பொதுவாக வாழும் உயிரினங்களிடம், அவர் பெற்றோரிடம், குடும்பத்தின் முன்னோர்களிடம் மற்றும் பிறரிடம் பல பொறுப்புகளும், கடமை உணர்ச்சிகளும் உண்டு. அவர் பகவானின் தொண்டிற்காக அம்மாதிரி கடமைகளை விட்டுவிட்டால், அவர் அக்கடமைகளைத் துறந்ததற்காக, தண்டிக்கப்படமாட்டார். ஆனால் புலன் திருப்திக்காக ஒருவர் கடமைகளைத் துறந்தால், அவர் இயற்கையின் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்.


( ஶ்ரீமத் பாகவதம் 3.25.22 / பொருளுரை 


ஸாது மற்றும் துறவறம்

  • துறவியின் இலக்கணம்: துறவு நிலையில் இருப்பவர் (ஸந்யாஸி) 'ஸாது' என்று அழைக்கப்படுகிறார். அவர் பகவானுக்காகத் தனது வீடு, வசதிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பக் கடமைகளை முழுமையாகத் துறக்கிறார்.

  • உறுதியான பக்தி: வெறும் துறவு மட்டும் போதுமானதல்ல; அந்தத் துறவு ஆற்றல்மிக்க தவத்துடனும், பகவானின் சேவையில் மிகுந்த உறுதியுடனும் (த்ருடாம்) இணைந்திருக்கும் போது மட்டுமே வெற்றி பெறுகிறது.


கடமைகளும் பொறுப்புகளும்

  • பல்வேறு கடப்பாடுகள்: ஒரு மனிதன் பிறக்கும்போதே சமூகம், தேவர்கள், முனிவர்கள், பெற்றோர், முன்னோர்கள் மற்றும் சக உயிரினங்கள் எனப் பல தரப்பினருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறான்.

  • விலக்கு அளிக்கப்படுதல்: ஒரு ஸாது பகவானின் தொண்டிற்காக இத்தகைய உலகாயதக் கடமைகளைத் துறக்கும்போது, அவர் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதற்காக அவர் தண்டிக்கப்படுவதில்லை.


துறவின் நோக்கம்: ஆன்மீகம் vs புலன் இன்பம்

  • தண்டனைக்குரிய துறவு: ஒருவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்யாமல், வெறும் புலன் இன்பத்திற்காகவும் (Sensory satisfaction) சோம்பேறித்தனத்திற்காகவும் துறவு மேற்கொண்டால், அவர் இயற்கையின் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்.

  • உன்னதத் துறவு: ஆனால், பரம புருஷ பகவானின் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உலகத் தொடர்புகளைத் துறப்பவர் உன்னதமானவராகக் கருதப்படுகிறார்.


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more