Skip to main content

மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடு

 


பதம் 22

ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத:
பக்தி - யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி:


மொழிபெயர்ப்பு

பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும்.

பொருளுரை

முந்திய சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், உண்மையான சமயக் கோட்பாடென்பது (தர்மம் பாகவதம்), ஸ்ரீமத் பாகவதத்தில் அல்லது பாகவதக் கல்விக்கு முதற்படியான பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளாகும் (பாகவதம் தர்மம்). இக்கோட்பாடுகள் யாவை? பாகவதம் கூறுகிறது, தர்ம: ப்ரோஜ்ஜித கைதவோ ‘த்ர: ஸ்ரீமத் பாகவதத்தில் ஏமாற்றுச் சமய முறைகள் இல்லை. பாகவதத்திலுள்ளஅனைத்தும் பரமபுருஷருடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. பாகவதம் மேலும் கூறுவதாவது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே: ஆராய்ச்சி அறிவினால் எட்டிப் பிடிக்க முடியாதவரான பரமபுருஷரை நேசிக்கும் முறையை, எது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்கிறதோ அதுவே பரம தர்மமாகும். இத்தகைய ஒரு சமயம், தன் - நாம - க்ரஹண, அதாவது பகவான் புனித நாம ஜபத்திலிருந்து துவங்குகிறது (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம்). பகவானின் புனித நாமத்தைப் பாடிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுபவனால் படிப்படியாக பகவானின் ரூபத்தையும், லீலைகளையும், உன்னத குணங்களையும் காண முடியும். இவ்விதமாக பரமபுருஷரின் நிலையை ஒருவன் முழுமையாக அறிந்து கொள்கிறான். பக்தித் தொண்டை நிறைவேற்றுவதன் மூலமாக மட்டுமே, பகவான் எப்படி ஜட உலகில் அவதரிக்கிறார், எப்படி அவர் பிறவிகளை எடுக்கிறார், எத்தகைய செயல்களை அவர் புரிகிறார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலைக்கு ஒருவன் வருகிறான். பக்த்யா மாம் அபிஜானாதி: பக்தித் தொண்டைச் செய்வதாலேயே பரமபுருஷரைப் பற்றிய அனைத்தையும் ஒருவரால் புரிந்துகொள்ள முடியும் என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது. அதிர்ஷ்டவசமாக ஒருவன் பரமபுருஷரை இவ்வாறு புரிந்துகொண்டு விட்டால், அதன் பலன், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம ஸநதி: இந்த ஜட உடலை விட்டவின், மீண்டும் இந்த ஜட உலகில் அவன் பிறவியெடுக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவன் பரமபதத்திற்குத் திரும்பிச் செல்கிறான். இதுதான் முடிவான பூரணத்துவம். எனவேதான் கிருஷ்ணர் பகவத்கீதையில் (8.15) பின்வருமாறு கூறுகிறார்:

மாம் உபேத்ய புனர் ஜன்ம
துஹ்காலயம் அசாஸ்வதம்
நாபனுவந்தி மஹாத்மான:
ஸம்ஸித்திம் பரமாத் கதா:

“பக்தியில் யோகிகளான சிறந்த ஆத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, துன்பம் நிறைந்ததும், நிலையற்றதுமான இந்த உலகிற்குத் திரும்பி வருவதேயில்லை. ஏனெனில் அவர்கள் மிகவுயர்ந்த பூரணத்துவத்தை அடைந்துவிட்டவர்களாகின்றனர்.”

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...