பதம் 22 ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத: பக்தி - யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி: மொழிபெயர்ப்பு பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும். பொருளுரை முந்திய சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், உண்மையான சமயக் கோட்பாடென்பது (தர்மம் பாகவதம்), ஸ்ரீமத் பாகவதத்தில் அல்லது பாகவதக் கல்விக்கு முதற்படியான பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளாகும் (பாகவதம் தர்மம்). இக்கோட்பாடுகள் யாவை? பாகவதம் கூறுகிறது, தர்ம: ப்ரோஜ்ஜித கைதவோ ‘த்ர: ஸ்ரீமத் பாகவதத்தில் ஏமாற்றுச் சமய முறைகள் இல்லை. பாகவதத்திலுள்ளஅனைத்தும் பரமபுருஷருடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. பாகவதம் மேலும் கூறுவதாவது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே: ஆராய்ச்சி அறிவினால் எட்டிப் பிடிக்க முடியாதவரான பரமபுருஷரை நேசிக்கும் முறையை, எது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்கிறதோ அதுவே பரம தர்மமாகும். இத்தகைய ஒரு சமயம், தன் - நாம - க்ரஹண, அதாவது பகவான் புனித நாம ஜபத்திலிருந்து துவங்குகிறது (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ...