Skip to main content

Posts

Showing posts with the label Goal / இலக்கு(Articles)

மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடு

  பதம் 22 ஏதாவான் ஏவ லோகே ‘ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத: பக்தி - யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி: மொழிபெயர்ப்பு பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும். பொருளுரை முந்திய சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், உண்மையான சமயக் கோட்பாடென்பது (தர்மம் பாகவதம்), ஸ்ரீமத் பாகவதத்தில் அல்லது பாகவதக் கல்விக்கு முதற்படியான பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளாகும் (பாகவதம் தர்மம்). இக்கோட்பாடுகள் யாவை? பாகவதம் கூறுகிறது, தர்ம: ப்ரோஜ்ஜித கைதவோ ‘த்ர: ஸ்ரீமத் பாகவதத்தில் ஏமாற்றுச் சமய முறைகள் இல்லை. பாகவதத்திலுள்ளஅனைத்தும் பரமபுருஷருடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. பாகவதம் மேலும் கூறுவதாவது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே: ஆராய்ச்சி அறிவினால் எட்டிப் பிடிக்க முடியாதவரான பரமபுருஷரை நேசிக்கும் முறையை, எது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்கிறதோ அதுவே பரம தர்மமாகும். இத்தகைய ஒரு சமயம், தன் - நாம - க்ரஹண, அதாவது பகவான் புனித நாம ஜபத்திலிருந்து துவங்குகிறது (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ...

மானிடப் பிறப்பு தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது

  மானிடப் பிறப்பு   தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது . ஒருவன் தேவலோகத்தில் தேவனாகப் பிறக்கலாம் . ஆயினும் வசதிகள் ஏராளமாக அங்கே இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது . இப்பூலோகத்தில் கூட வசதி மிக்கவன் பொதுவாக கிருஷ்ண உணர்வினை மேற்கொள்வதில்லை . உலகப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதில் உண்மையான விருப்பமுடைய புத்திமான் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் . அத்தொடர்பினால் ஒருவன் பொருள் , பொன் என்னும் உலகக் கவர்ச்சியிலிருந்து படிப்படியாக விடுதலை பெற முடியும் . உலகப் பற்றின் அடிப்படை விதிகளாக இருப்பது , பணமும் , பெண்களுமே ஆவர் . ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அதனால்தான் வீடு பேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைய வேண்டுமென்று உண்மையில் விரும்புவோர் இறை உலகில் நுழைவதற்கானத் தகுதியைப் பெற பணம் மற்றும் பெண்களைத் துறக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார் . பணமும் பெண்களும் பகவானின் தொண்டிற்கே முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும் . இவ்வாறு பயன்படுத்துபவன் உலக...

எந்த நோக்கத்திற்காகவே பகவான் மனித வாழ்வைப் படைத்துள்ளார் ?

  பந்தப்பட்ட ஆத்மாவின் முக்திக்கு உதவும் பொருட்டே கடவுள் குறிப்பாக மானிட ரூபத்தைப் படைத்துள்ளார் . எனவே மனித வாழ்வை துஷ்பிரயோகம் செய்பவன் நரகத்திற்கு வழியை அமைத்துக்கொள்கிறான் . புருஷத்வே சாவிஸ்தராம் என்று வேதங்கள் கூறுவது போல் , “ மனித உருவிலுள்ள வாழ்வின் நித்திய ஆத்மாவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது ” வேதங்களும் பின்வருமாறு கூறுகின்றன . தாப்யோ காம் ஆனயத் தா அப்ருவன் ந வை நோ ‘ யம் அலம் இதி தாப்யோ ‘ ஸ்வம் ஆனயத் தா அப்ருவன் ந வை நோ ‘ யம் அலம் இதி தாப்ய - புருஷம் ஆனயத் தா அப்ருவன் ஸுக்ருதம் பத இந்த சுருதி மந்திரத்தின் பொருள் பின்வருமாறு : பசு , குதிரை முதலான தாழ்ந்த உயிரினங்கள் சிருஷ்டியின் நோக்கத்தை நிறைவேற்ற உண்மையில் பொருத்தமானவை அல்ல . ஆனால் கடவுளுடனான தனது நித்திய உறவைப் புரிந்து கொள்வதற்கு மனித வாழ்வு வாய்ப்பளிக்கிறது . எனவே ஒருவன் பௌதிக புலன்களை அடக்கி மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் . ஒருவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால் , பரமபுருஷர் மிகவும் மகிழ்ந்...