Skip to main content

கல்லாலான ஒரு படகு

 



தேஷாம் குபத - தேஷ்ட்ரூணாம் பததாம் தமஸி ஹி அத:
யே ஸ்ரத்தத்யுர் வசஸ் வை மஜ்ஜந்தி அஸ்ம-ப்லவா இவ


மொழிபெயர்ப்பு

(முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள்.

பொருளுரை

ஸ்ரீமத் பாகவதம் (11.20.17) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

ந்ரு-தேஹம் ஆத்யம் ஸுலபம் ஸுதுர்லபம்
ப்லவம் ஸுகல்பம் குரு-கர்ண-தாரம்

பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அறியாமை எனும் கடலில் விழுந்துவிட்டோம். ஆயினும் ஒரு சிறந்த படகைப் போன்றுள்ள இந்த மனித உடலானது, அறியாமை எனும் இக்கடலைக் கடப்பதற்குச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது, கப்பல் தலைவனைப்போல் செயற்படும் ஓர் ஆன்மீக குருவினால் வழிநடத்தப்படும்போது அந்த படகினால் சமுத்திரத்தை மிகச் சுலபமாக கடந்து விடமுடியும். அது மட்டுமின்றி வேத ஞானம் எனப்படும் அனுகூலமான காற்றும், படகு கடலை கடப்பதற்கு உதவி புரிகிறது. அறியாமை எனும் கடலைக் கடப்பதற்கான இவ்வசதிகளையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொள்ளாதவன் தற்கொலை செய்து கொள்பவனாவான்.

கல்லாலான ஒரு படகில் ஏறுபவன் ஆபத்தைச் சந்திக்கிறான். பூரணத்துவ நிலைக்கு உயர்வதற்கு, கல்லாலாகன படகுகளில் ஏற்றிச் செல்லும் பொய்யான தலைவர்களை மக்கள் முதலில் கைவிட வேண்டும்.

மனித சமுதாயம் முழுவதுமே இத்தகைய ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் காப்பாற்றப்படுவதற்கு வேதங்களின் உபதேசங்களை அது பின்பற்றியே ஆக வேண்டும். இத்தகைய உபதேசங்களின் சாராம்சம் பகவத்கீதையின் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் இலட்சியத்தை நிறைவேற்றுவது எப்படி என்பதைப் பற்றிய நேரடியான உபதேசங்களை பகவத் கீதை அளிக்கிறது. எனவே வேறெந்த உபதேசங்களையும் ஒருவர் ஏற்றுக் கொள்ளக் கூடாது. எனவேதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: “எல்லாவிதமான சமய முறைகளையும் கைவிட்டு என்னிடம் மட்டும் சரணடைவாயாக” என்று கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பரமபுருஷராக ஒருவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவரது உபதேசங்கள் மனித குலத்திற்கு மிகச் சிறந்த நன்மையை அளிப்பவையாக இருப்பதால், அவரது உபதேங்களைப் பின்பற்றுவதாலேயே ஒருவனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையெனில் அதிகாரப் பூர்வமில்லாத தியான முறையினாலும், யோகப் பயிற்சி என்ற பெயரில் நிலவிவரும் உடற்பயிற்சி முறைகளினாலும் ஒருவன் ஏமாற்றப்படுவான். இவ்விதமாக அவன் கல்லாலான படகில் ஏறி அதிலுள்ள பயணிகளுடன் சேர்ந்து நீரில் மூழ்கிவிடுவான், துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கர்கள் இந்த பௌதிக சிக்கலிலிருந்து வெளியேறுவதில் மிகவும் ஆவல் கொண்டவர்களாக இருப்பினும், சில சமயங்களில் அவர்கள் கல் படகுகளைத் தயாரிப்பதற்கும் ஆதரவாக இருப்பதை நாம் காண்கிறோம். அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவியாக இருக்காது, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வடிவில் கிருஷ்ணரால் அளிக்கப்பட்டுள்ள சரியான படகை அவர்கள் தஞ்சமடைய வேண்டும். அப்பொழுது அவர்கள் சுலபமாக காப்பாற்றப்படுவார்கள். இது தொடர்பாக ஸ்ரீ விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர் பின்வருமாறு கருத்துரைக்கிறார்: அஸ்மமய: ப்லவோ யேஷாம் தே யதா மஜ்ஜந்தம் ப்லவம் அனுமஜந்தி ததேதி ராஜ-நீதி-உபதேஸ்ட்ருஷு ஸ்வ-ஸப்யேஸு கோபோ வ்யஞ்ஜித: அரசியல் தந்திரத்தினால் சமுதாயம் வழிநடத்தப்படுமானால், அது கல்லாலான ஒரு படகைப் போல் மூழ்கிவிடும் என்பது நிச்சயம். அரசியல் தந்தரத்தால் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியாது. மனித வாழ்வின் இலட்சியத்தைப் புரிந்து கொள்வதற்கும், கடவுளைப் புரிந்து கொள்வதற்கும், மனித வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் மக்கள் கிருஷ்ண உணர்வைப் பின்பற்ற வேண்டும்.


 (ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 6.7.14 பொருளுரை வழங்கியவர்

 ஶ்ரீல பிரபுபாதர்  )



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...