Skip to main content

Posts

Showing posts with the label Srimati Radharani / ஶ்ரீமதி ராதா ராணியின் லீலை (Articles)

ஸ்ரீராதாஷ்டமி

  பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமித் திருநாள்  ‘கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாள்  ‘ஸ்ரீராதாஷ்டமி  என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதிராதா ராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விருப்பம் கொண்டார். எனவே கிருஷ்ணர் பிறந்த ஸ்தலத்திற்கு அருகே ஓடிய யமுனை நதியில் ‘தங்கத் தாமரையில் ஒரு பெண் குழந்தையாக அவதரித்தார். அந்நகர மன்னர் ‘விருஷபானு என்பவர் யமுனைக்கு நீராடச் சென்ற போது ஜொலிக்கும் அந்தத் தாமரையைக் கண்டு அதிசயத்தார். பிறகு அருகே சென்ற போது அத் தாமரையில் இருந்த தெய்வீகமான பெண் குழந்தையை பார்த்ததும் தன் அரண்மனைக்கு கொண்டு வந்தார். பெரியாழ்வாருக்கு,  தாயார் ஆண்டாள் தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதி ராதாரணி அருள்புரிந்தார். ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருஸ்தலமான ‘ராவல் கிராமத்தில் தவழும் குழந்தையாக வீற்றிருக்கிறார்.   ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ராவல் கிராமம். சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்...

""ஸ்ரீமதி ராதாராணியின் முக்கியமான இருபத்தைந்து தெய்வீக குணங்கள்

  அத, வ்ருந்தா, வனேஷ்வர்யா: கீர்த்யந்தே ப்ரவரா குணா மது ரேயம் நவ - வயாஷ் சலாபாங்கோஜ்ஜ்வல-ஸ்மிதா சாரு-ஸௌபாக்ய-ரேகாட்டியா கந்தோன்மாதி,த-மாதவா   ஸங்கீத- ப்ரஸராபிஜ்ஞா ரம்ய-வாங் நர்ம- பண்டி,தா வினீதா கருணா - பூர்ணா விதக்தா, பாடவான்விதா   லஜ்ஜா - ஷீலா ஸு-மர்யாதா தைர்ய-காம்பீர்ய-ஷாலினீ ஸு- விலாஸா மஹாபாவ- பரமோத்கர்ஷ- தர்ஷிணீ   கோகுல-ப்ரேம - வஸதிர் ஜகச்-ச்ரேணீ- லஸத்- யஷா: குர்வ் -அர்பித-குரு-ஸ்நேஹா ஸகீ,-ப்ரணயிதா- வஷா   க்ருஷ்ண- ப்ரியாவலீ- முக்யா ஸந்ததாஷ்ரவ- கேஷவா பஹுனா கிம் குணாஸ் தஸ்யா: ஸங்க்யாதீதா ஹரேர் இவ (1) மதுரா - மிகவும் இனிமையானவள் ,  (2) நவ - வயா - என்றும் இளமையானவள் , (3) சல - அபாங்கா - சஞ்சலமான கண்களைக் கொண்டவள் ,  (4) உஜ்ஜ்வல - ஸ்மிதா - பிரகாசமாகச் சிரிப்பவள் ,  (5) சாரு - ஸௌபாக்ய - ரேக - ஆட்யா - மிகவும் அழகான மங்கல ரேகைகளை உடையவள் ,  (6) கந்த உன்மாதி த - மாதவா - தனது திருமேனியின் நறுமணத்தினால் கிருஷ்ணரை மகிழ்விப்பவள் .  (7) ஸங்கீத ப்ரஸர - அபிஜ்ஞா - சங்கீதத்தை விரிவாக அறி...

"ராதா-கிருஷ்ணர்" இவ்விரு நபர்களின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கு மாபெரும் ஆன்மீக நுண்ணறிவு தேவைப்படுகிறது.

  ராதா க்ரிஷ்ண ஏக ஆத்மா, துஇ தேஹ தாரி' அன்யோன்யே விலஸே ரஸ ஆஸ்வாத₂ன கேரி மொழிபெயர்ப்பு ராதையும் கிருஷ்ணரும் ஒருவரே, ஆனால் அவர்கள் இரண்டு திருமேனிகளை ஏற்று, பிரேம ரஸங்களைச் சுவைத்து, ஒருவரையொருவர் அனுபவிக்கின்றனர். பொருளுரை:  தெய்வீக நபர்களான ராதையும் கிருஷ்ணரும் பௌதிகவாதிகளுக்குப் புரியாத புதிராக உள்ளனர். ராதா - கிருஷ்ணரைப் பற்றி ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமியின் கையேட்டிலிருந்து வரும் மேற்கூறிய வர்ணனை ஒரு சுருக்கமான விளக்கமாகும், ஆனால் இவ்விரு நபர்களின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கு மாபெரும் ஆன்மீக நுண்ணறிவு தேவைப்படுகிறது. ஒருவர் இருவராக அனுபவிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் சக்திமானாகவும் ஸ்ரீமதி ராதாராணி அந்தரங்க சக்தியாகவும் உள்ளனர். வேதாந்த தத்துவத்தின்படி, சக்திமானுக்கும் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லை; அவை ஒன்றே. நெருப்பையும் வெப்பத்தையும் நம்மால் எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதுபோல அந்த ஒன்றினை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாது. பக்குவமற்ற வாழ்வில் பூரணத்தைப் பற்றிய அனைத்தும் புரியாத புதிராகவே உள்ளது; எனவே, இத்தகைய சார்ந்த அறிவாற்றலின்படி, சக்திமானுக்கும் சக்திக்கும் இட...

ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைப் போலவே முற்றிலும் ஆன்மீகமயமானவள்.

 ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைப் போலவே முற்றிலும் ஆன்மீகமயமானவள். அவளை பௌதிகமாக யாரும் கருதக் கூடாது. அவள் நிச்சயமாக, பௌதிகப் புலன்களால் மூடப்பட்டு, ஸ்தூலம், சூட்சுமம் என்று பௌதிக உடல்களைக் கொண்டுள்ள கட்டுண்ட உயிர்வாழிகளைப் போன்றவள் கிடையாது. அவள் முற்றிலும் ஆன்மீகமானவள், அவளது உடல், அவளது மனம் என இரண்டும் அதே ஆன்மீக ஸ்வரூபம் கொண்டவை. அவளுடைய உடல் ஆன்மீகமானது என்பதால், அவளது புலன்களும் ஆன்மீகமானதே. இவ்வாறாக, அவளது உடல், மனம் புலன்கள் என அனைத்தும் கிருஷ்ண பிரேமையினால் முழுமையாக ஜொலிக்கின்றன. அவள் ஹ்லாதி,னீ சக்தியின் (பகவானது அந்தரங்க சக்தியின் ஆனந்தமளிக்கும் சக்தியின்) ஸ்வரூபம் என்பதால், ஸ்ரீ கிருஷ்ணருடைய இன்பத்திற்கு அவள் மட்டுமே மூலமாவாள். அகத்தில் தம்மிடமிருந்து வேறுபட்ட எதனையும் ஸ்ரீ கிருஷ்ணரால் அனுபவிக்க முடியாது. எனவே, ராதையும் ஸ்ரீ கிருஷ்ணரும் வேறுபட்டவர்கள் அல்லர். ஸ்ரீ கிருஷ்ணருடைய அந்தரங்க சக்தியின் ஸந்தி,னீ பகுதியானது முழு கவர்ச்சியுடைய ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபத்தை வழங்கியுள்ளது, அதே அந்தரங்க சக்தி ஹ்லாதி னீயின் அம்சத்தில். அனைவரையும் கவரக்கூடியவரை கவரக்கூடிய ஸ்ரீமதி ராதாராணியை ...

ஶ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

  தேவீ க்ருஷ்ண-மயீ ப்ரோக்தா ராதிகா பர-தேவதா ஸர்வ-லக்ஷ்மீ-மயீ ஸர்வ- காந்தி: ஸம்மோஹினீ பரா “திவ்ய தேவதையான ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடி மறுபாகமாவாள், எல்லா லக்ஷ்மி-கணங்களுக்கும் அவளே மையமாவாள்.   எல்லாரையும் வசீகரிக்கும் முழுமுதற் கடவுளை வசீகரிப்பதற்குத் தேவையான எல்லா வசீகரமும் பொருந்தியவள். அவளே பகவானின் அந்தரங்க சக்திகளில் உயர்ந்தவளாவாள்." (பிருஹத்-கௌதமீய-தந்த்ர) “ராதா கிருஷ்ண தத்துவம் முக்தி பெற்ற நபர்களால் அறியப்பட வேண்டியதாகும், கட்டுண்ட ஆத்மாக்களால் அல்ல. நாம் முக்தர்களாக மாறும் அந்த நிலைக்காக காத்திருப்போம். அப்போது நம்மால் ராதா-க்ருஷ்ண-ப்ரணய விக்ருதிர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், ராதையும் கிருஷ்ணரும் பௌதிகத் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்ல... கிருஷ்ணரை சாதாரண ஆண் என்றோ, ராதையை சாதாரண பெண் என்றோ நாம் கருதக் கூடாது.   அவர்களே பரம பூரண உண்மை. ஆனால் அந்த பூரண உண்மையில், ஆனந்த சக்தி உள்ளது, அது ராதா-கிருஷ்ணரின் லீலைகளில் வெளிப்படுகிறது." 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ...

ஸ்ரீமதி ராதாராணியின் கருணை

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவரது தூய பக்தர்களின் உடைமையாவார். இதன் விளைவாக பக்தர்களால் மட்டுமே மற்றொரு பக்தனுக்கு கிருஷ்ணரை வழங்க முடியும்; கிருஷ்ணரை நேரடியாக அடையவே முடியாது. எனவே பகவான் சைதன்யர் தம்மை, “பிருந்தாவனத்து கோபியர்களை பரிபாலித்து வருபவரான பகவானின் தொண்டர்களிடம் மிகவும் கீழ்ப்படிந்துள்ள தொண்டன்” (கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸானுதாஸ:) என்று கூறிக் கொண்டார். ஆகவே தூய பக்தன் பகவானை நேரடியாக அணுக முயலாமல், பகவானின் தொண்டர்களுக்கும் தொண்டனை திருப்திப் படுத்த முயல்கிறான். இதனால் பகவான் திருப்தியடைகிறார். அதன் பிறகு மட்டுமே பகவானின் தாமரைப் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூளசி இலைகளின் சுவையை பக்தனால் அனுபவிக்க முடியும். பிரம்ம-சம்ஹிதையில், வேத இலக்கியங்களில் பெரும் பண்டிதர்களால் மட்டும் பகவானைக் கண்டுவிட முடியாது என்றும், அவரது தூய பக்தர்களின் மூலமாக மட்டுமே மிகச் சுலபமாக அவரை அணுக முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிருந்தாவனத்தில் தூய பக்தர்கள் எல்லோரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் இன்பச் சக்தியாகிய ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை வேண்டி பிரார்த்திக்கின்றனர். ஸ்ரீமதி ராதாராணி, பௌதிக பெண்ம...