Skip to main content

புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள்


புத்திசாலி கிளியின் இனிமையான வார்த்தைகள்


மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


முன்னொரு காலத்தில் புண்ணிய ஸ்தலமான காஞ்சியில் ஒரு பிரபலமான பட்டுப்படவை வியாபாரி (ஸாதிகா வியாபாரி) ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் கூண்டுடன் கூடிய கிளியோன்று (பஞ்சரம்) விற்பனைக்ககாக வைத்திருப்பதைக் கண்டார். அது மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமானதாகவும் விளங்கியது. வியாபாரி அதனை மிகவும் மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வாங்கி வந்தார். கிளியைக் கூண்டுடன் தனது வீட்டு வாசலின் முன்பு கட்டி தொங்க விட்டார். வீட்டிலுள்ள அனைவரும், வியாபாரியின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் கிளியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கிளி அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. அது, "கடந்த முறை ஒரு வியாபாரி என்னைப் பிடித்தபோது மிகவும் சிரமப்பட்டுத்தான் தப்பித்தேன். இந்த முறை தப்பிக்க மிகவும் புத்திசாலித்தனமான யோசனையைக் கையாள வேண்டும்" என்று நினைத்துக் கொண்டிருந்தது. பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர் இந்த கிளிக்கு இனிமையான வார்த்தைகளைப் பேச மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருந்தார்.


மறுநாள் தனது காலைக் கடன்களையெல்லாம் முடித்த பின் அந்த வியாபாரி கிளியை பார்ப்பதற்காக வந்தார். உடனே கிளி அவனிடம், " ஓ வர்த்தக ஸ்ரேஷ்டரே, இந்த கூண்டிலிருந்து என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு மூன்று சத்திய வார்த்தைகளை சொல்கிறேன்" என்றது. கிளியின் இனிய வார்த்தைகளில் ஆச்சரியப்பட்டுப் போன வியாபாரி, இத்தகைய அபூர்வமான கிளியை நான் ஏன் விடுவிக்கப் போகிறேன்" என்று நினைத்தான். உடனே கிளி , "தாஸஜன ரஞ்சகா! மஹானுபாவ!, இந்த வார்த்தைகளால் வியாபாரியைப் போற்றிப் புகழ்ந்தது. வியாபாரி கிளியின் இந்த வார்த்தைகளால் சற்றே குழம்பிப்போனான். பின் கிளி தொடர்ந்து, "உனக்கு எனது முதல் சத்ய வார்த்தைப் பிடித்திருந்தால் என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். மேலும் எனது இரண்டாவது சத்ய வார்த்தைகள் பிடித்திருந்தால் என்னை பெரிதாக வளர்ந்த தென்னை மரத்தில் விட்டு விடுங்கள். எனது மூன்றாவது சத்ய வார்த்தைகளும் பிடித்திருந்தால் நீங்கள் விரும்பினால் என்னை விடுவித்து விடுங்கள்" என்றது.



கிளியின் இந்த இனிமையான மற்றும் புத்திசாலித்தனமான வார்த்தைகளால் வியப்படைந்த வியாபாரி கிளியிடம், சரி உனது முதல் சத்ய வார்த்தையைக் கூறு" என்றார். 


கிளி கூறியது, "நாம் எதை இழந்தாலும் அது அழியாது நிலைத்திருக்கும் (பவிஷ்யத்). எனவே விலைமதிப்பற்ற பொருளை ஒருவர் இழக்க நேர்ந்தாலும் அதற்காக வருத்தப்படக் கூடாது". கிளியின் இந்த முதல் சத்ய வார்த்தையால் ஈர்க்கப்பட்ட வியாபாரி கிளியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.  "எதையும் கண்ணால் காணும் வரை நம்பக்கூடாது, நீ அப்படி நினைக்கவில்லை அல்லவா?" என்று நம்பிக்கையுடன் கிளி கூறியது. " ஓ இது சரியான உண்மை" என்ற வியாபாரி கிளியை தென்னை மரத்தில் கொண்டு விட்டார். கிளி மரத்தில் உச்சிக்கு சென்று பின் கூறியது, "எனது வயிற்றில் இரண்டு வைடூரியங்கள் உள்ளன." உடனே வியாபாரி, "ஐயோ இந்த கிளியின் வார்த்தைகளை நான் ஏன் நம்பினேன்?, நான் கிளியை இழந்திருக்கக்கூடாது" என்று நினைத்தான்.


வியாபாரியின் துயர நிலையைக் கண்ட கிளி கூறியது, "நீங்கள் எனது இரண்டு சத்ய வார்த்தைகளையும்  கேட்டீர்கள். இருந்தும் அதிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லையே, அதனை நீங்கள் நடைமுறையில் செயல்படுத்தவில்லையே?. முதலில் இரண்டு வைடூர்யங்களை இழந்து விட்டோமே என்று துயரப்பட்டீர்கள். இரண்டாவதாக எனது வயிற்றில் இரண்டு வைடூர்யங்கள் இருப்பதாக நம்பினீர்கள். "ஓ மூர்க்கனே வைடூர்யங்களை நான் எப்படி என் வயிற்றினுள் வைத்திருக்க முடியும்? என்ற கிளி மீண்டும் கூறியது, இறுதியாக எனது மூன்றாவது சத்ய வார்த்தைகளையும் கூறிவிடுகிறேன், " நாம் கூறும் போதனைகளை வெறுமனே கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டும் இருந்து விட்டு தனது வாழ்க்கையில் அதை  செயல்படுத்த தவறுபவனுக்கு நீதியை போதிக்கக் கூடாது" என்று என் முன்னோர்கள் எனக்கு உரைத்தார்கள்" என்று கூறிய கிளி பறந்து சென்று விட்டது.



இக்கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒழுக்க நெறி:


1. புராணங்கள் மற்றும் இதிகாஸங்களிலிருந்து பற்பல அழகான அறநெறிக் கதைகளை பெரியவர்களிடமிருந்து நாம் கேட்டிருப்போம். அவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல் அதனால் இந்த சமுதாயத்திற்கு எந்த நன்மைகளையும் செய்ய இயலவில்லை என்றால்....நாம் வெறுமனே கதைகளைக் கேட்டு என்ன பிரயோஜனம்? எனவே நம்மிடமுள்ள அனைத்து கெட்ட குணங்களையும் அகற்றி நம்முடைய ஸநாதன தர்மத்தில் கற்பிக்கப்படும் அனைத்து  ஒழுக்கங்களையும் உள்வாங்கி அதனை நமது வாழ்வில் கடைபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


2. கிளி சரியாகக் கூறியது போல், "நாம் இழந்ததற்காக ஒருபோது வருத்தப்படக் கூடாது. எது நடந்தாலும் அது நமது நன்மைக்காகவே என்று நினைக்க வேண்டும்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...