ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ ந ஸ்வாத்யாயஸ் தபஸ் த்யாகோ யதா பக்திர் மமோர்ஜிதா மொழிபெயர்ப்பு உத்தவா, எனது பக்தர்களால் எனக்கு ஆற்றப்படும் கலப்படமற்ற தூய பக்தித் தொண்டானது என்னை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறது. ஆனால் அஷ்டாங்க யோகம், சாங்க்யத்துவம், புண்ணியச் செயல், வேதக் கல்வி, தவம் அல்லது துறவு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்களால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. பொருளுரை ஒருவன் ஶ்ரீ கிருஷ்ணரையே அஷ்டாங்க யோகம், சாங்க்ய தத்துவம் போன்ற முறைகளின் இலக்காகக் கொண்டிருக்கக்கூடும்; எனினும் பகவானைப் பற்றி கேட்டல், பாடுதல் மற்றும் அவரது நோக்கத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றினால் பகவானின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபடுவது எந்த அளவுக்கு பகவானைத் திருப்திப்படுத்துமோ, அந்த அளவுக்கு மற்ற சமய முறைகள் திருப்திப்படுத்துவதில்லை. ஶ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஞான-கர்மாதி-அனாவ்ருதம் : ஒரு பக்தன் ஶ்ரீ கிருஷ்ணரை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். அவன் தனது அன்புத்தொண்டை கர்மத்திலோ, மனோ தத்துவ ஊகத்திலோ சிக்கவைக்கக்கூடாது. பிருந்தாவன வாசிகள் எப்பொழுதும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரையே...