Skip to main content

பக்தித் தொண்டு மற்றும் ஆத்ம ஞானம்.

 


ஒருவர் பகவானின் அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது, அவர், ஒரு தனிப்பட்ட ஆத்மா எனும் முறையில் வாசுதேவராகிய பரமாத்மாவின் நிலையான ஊழியனாய் இருத்தல் வேண்டும் என்று அறிகிறார். தன்னை உணர்தல் என்பது, பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் இரண்டு ஆத்மாக்கள் என்பதால் அவை மதிப்பில் சமமானவை என்று பொருளல்ல. தனிப்பட்ட ஆத்மா கட்டுப்பாட்டுக்கு ஆளாகக்கூடியது. பரமாத்மா ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாதது. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா, தான் பரமாத்மாவுக்கு கீழுள்ளது என்பதை உணரும் பொழுது, அவர் நிலை லப்தாத்மா, தன்னை உணர்தல் அல்லது முக்த பந்தன, ஜடவுலக மாசிலிருந்து விடுதலை என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் தன்னை பகவான் போன்ற நல்லவராகவும் அல்லது அவருக்குச் சமமாகவும் நினைக்கும் வரை உலகத்தின் மாசு தொடரும். இந்த நிலை மாயையின் கடைசி சூழ்ச்சி ஆகும். மாயை எப்பொழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைப் பாதிக்கும் நிறைய தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகும் ஒருவர் தானும் பகவானும் ஒன்று என்று தொடர்ந்து நினைத்தால், அவர் இன்னும் மாயையின் சூழ்ச்சியில் இருக்கிறார் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

பரேண எனும் சொல்லில் பர என்றால்அறிவார்ந்த, ஜடவுலக மாசினால் சிறிதும் கலக்கப்படாதஎன்று பொருளாகும். முழு உணர்வு நிலையில் ஒருவர் பகவானின் நிலைத்த தொண்டர் எனில் அது பராபக்தி எனப்படும். ஒருவர் தன்னை உலகியல் பொருள்களுடன் அடையாளம் கண்டு, அவற்றின் பயனை அடைய பக்தித் தொண்டு புரிந்தால், அது வித்தா பக்தி, மாசடைந்த பக்தி ஆகும். ஒருவர் உண்மையில் பராபக்தியைச் செயல்படுத்துவதன் மூலம் விடுதலை பெறலாம்.

இங்கு குறிக்கப்படும் மற்றொரு சொல் ஸர்வக்ஞே ஆகும். மனதிற்குள் அமர்ந்திருக்கும் பரமாத்மா எல்லாம் அறிந்தவர். அவர் அறிவார். உடலின் மாற்றத்தால் முன்பு செய்த செயல்களை நான் மறக்கலாம். ஆனால் பகவான் பரமாத்மாவாக என்னிடம் அமர்ந்திருப்பதால், அவர் எல்லாம் அறிவார்; அதனால் என் பழைய கர்மாவின் அல்லது பழைய செயல்களின் விளைவு எனக்குப் பரிசாக அளிக்கப்படுகிறது. நான் மறக்கலாம், ஆனால் அவர் எனக்குத் துன்பம் அல்லது இன்பத்தை, என் பழைய வாழ்வின் தீய செயல்கள் அல்லது நல்ல செயல்களுக்காகப் பரிசு அளிக்கிறார். ஒருவர் தன் பழைய வாழ்வின் செயல்களை மறந்திருப்பதால், அவர் எதிர்ச் செயலிலிருந்து விடுபட்டார் என்று நினைக்கக் கூடாது, எதிர்ச் செயல்கள் இடம் பெறும். என்ன மாதிரியான எதிர்ச் செயல்கள் என்பது அனைத்தும் அறிந்த பரமாத்மாவினால் தீர்மானிக்கப்படும்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.24.45 பொருளுரை வழங்கியவர்

 ஶ்ரீல பிரபுபாதர்  )




முக்கியக் கருத்துக்கள் 


  • பக்தித் தொண்டு மற்றும் ஆத்ம ஞானம்.

    • உண்மையான ஆத்ம உணர்வு: அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் ஒருவர், தான் ஒரு தனிப்பட்ட ஆத்மா என்பதையும், வாசுதேவராகிய பரமாத்மாவின் நித்தியமான ஊழியன் என்பதையும் உணர்கிறார்.

    • சமமற்ற நிலை: பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் ஆத்மாக்கள் என்ற ரீதியில் ஒன்றாகத் தெரிந்தாலும், மதிப்பீட்டில் சமமானவர்கள் அல்ல. தனிப்பட்ட ஆத்மா எந்நேரமும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது; ஆனால் பரமாத்மா ஒருபோதும் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்.

    • விடுதலை (முக்தி): தான் பரமாத்மாவுக்குக் கீழ் உள்ளவன் என்பதை ஆத்மா உணரும் நிலையே 'லப்தாத்மா' (தன்னை உணர்தல்) அல்லது 'முக்த பந்தன' (ஜடவுலகத் தளையிலிருந்து விடுதலை) எனப்படுகிறது.

    • மாயையின் கடைசிச் சூழ்ச்சி: தன்னை பகவானுக்குச் சமமானவராகவோ அல்லது பகவானே தான் என்று நினைப்பதோ மாயையின் இறுதிச் சூழ்ச்சியாகும். தியானம் மற்றும் சிந்தனைக்குப் பிறகும் ஒருவன் "நானே பகவான்" என்று கருதினால், அவன் இன்னும் மாயையின் பிடியிலேயே இருக்கிறான் என்று பொருள்.

    • பராபக்தி vs வித்தா பக்தி:

      • பராபக்தி: முழு உணர்வு நிலையில், தன்னை பகவானின் நித்தியத் தொண்டனாக உணர்ந்து செய்யும் கலப்பற்ற தொண்டு. இதுவே விடுதலைக்கு வழிவகுக்கும்.

      • வித்தா பக்தி: உலகியல் ஆதாயங்களுக்காகவும், புலன் இன்பத்திற்காகவும் செய்யப்படும் மாசடைந்த பக்தி.

    • பரமாத்மாவின் சர்வக்ஞ நிலை: 'ஸர்வக்ஞே' என்பது பகவானின் அனைத்தையும் அறிந்த தன்மையைக் குறிக்கும். நாம் உடல் மாற்றத்தினால் கடந்த காலச் செயல்களை மறக்கலாம், ஆனால் நமக்குள் இருக்கும் பரமாத்மா அனைத்தையும் நினைவில் வைத்துள்ளார்.

    • கர்ம வினைப் பயன்கள்: நாம் செய்த பழைய செயல்களை நாம் மறந்திருந்தாலும், அதன் விளைவுகளிலிருந்து நாம் தப்ப முடியாது. நமது முந்தைய நற்செயல்கள் அல்லது தீய செயல்களுக்கான இன்ப துன்பங்களை, எல்லாம் அறிந்த பரமாத்மாவே தகுந்த நேரத்தில் பரிசாக அளிக்கிறார்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...