Skip to main content

Posts

Showing posts with the label Atma / ஆத்மா ( Articles))

பக்தித் தொண்டு மற்றும் ஆத்ம ஞானம்.

  ஒருவர் பகவானின் அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , அவர் , ஒரு தனிப்பட்ட ஆத்மா எனும் முறையில் வாசுதேவராகிய பரமாத்மாவின் நிலையான ஊழியனாய் இருத்தல் வேண்டும் என்று அறிகிறார் . தன்னை உணர்தல் என்பது , பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் இரண்டு ஆத்மாக்கள் என்பதால் அவை மதிப்பில் சமமானவை என்று பொருளல்ல . தனிப்பட்ட ஆத்மா கட்டுப்பாட்டுக்கு ஆளாகக்கூடியது . பரமாத்மா ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாதது . கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா , தான் பரமாத்மாவுக்கு கீழுள்ளது என்பதை உணரும் பொழுது , அவர் நிலை லப்தாத்மா , தன்னை உணர்தல் அல்லது முக்த பந்தன , ஜடவுலக மாசிலிருந்து விடுதலை என்று அழைக்கப்படுகிறது . ஒருவர் தன்னை பகவான் போன்ற நல்லவராகவும் அல்லது அவருக்குச் சமமாகவும் நினைக்கும் வரை உலகத்தின் மாசு தொடரும் . இந்த நிலை மாயையின் கடைசி சூழ்ச்சி ஆகும் . மாயை எப்பொழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைப் பாதிக்கும் நிறைய தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகும் ஒருவர் தானும் பகவானும் ஒன்று என்று தொடர்ந்து நினைத்தால் , அவர்...

ஜீவனால் உடலின்றி தனித்து வாழ்வது எப்படி சாத்தியமாகும் ?

       நெருப்பையும் அதன் எரிபொருளையும், ஆத்மாவிற்கும் உடலுக்கும் ஒப்பிடும் உவமையைப் பொறுத்தவரை, நெருப்பானது ஓரளவிற்கு அதன் எரிபொருளையே சார்ந்துள்ளது. என்றும், எரிபொருளின்றி நெருப்பின் இருப்பை நம்மால் உணர முடியாது என்பதால் ஜீவனால் உடலின்றி தனித்து வாழ்வதும், உடலால் மறைக்கப்படுவதும், இறுதியில் அதிலிருந்து விடுபடுவதும் எப்படி சாத்தியமாகும் என்று இன்னமும் ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும். பரமபுருஷரைப் பற்றிய அறிவாற்றலால் (வித்யா) மட்டுமே ஜீவனின் இயற்கையை ஒருவனால் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். உண்மை அறிவினால் (வித்யா) பௌதிக இருப்பைத் துண்டித்து, இப்பிறவியிலேயே ஆன்மீக உண்மையை ஒருவனால் உணரமுடியும். ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரரின் கருத்துப்படி, நம்முடைய இந்த பௌதிக வாழ்வு நம்மீதான ஒரு செயற்கையான திணிப்பாகும். அறியாமை எனப்படும் பகவானின் நினைத்தற்கரிய ஆற்றலினால், ஸ்தூல மற்றும் சூட்சுமமான பௌதிக ரூபங்களின் குணங்கள் மனோ தத்துவ ரீதியாக ஜீவராசியின் மீது சுமத்தப்படுகின்றன. தவறான இந்த தேகாபிமானத்தின் காரணத்தினால் மாயையான செயல்களின் ஒரு தொடரை ஜீவராசி தொடங்குகிறான். முந்திய அத்தியாயத...

நம் மனதைக் கட்டுப்படுத்தும் போது ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது.

  ஆத்மானம் ரதினம் வித்தி ஷரீரம் ரதம் ஏவ ச புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹம் ஏவ ச இந்த்ரியாணி ஹயான் ஆஹுர் விஷயாம்ஸ் தேஷு கோசரான் ஆத்மேந்த்ரிய-மனோ-யுக்தம் போக்தேத்-யாஹுர் மனீஷிண: "ஜடவுடல் எனும் ரதத்தில் ஆத்மா பிரயாணி, புத்தியே சாரதி. மனமே ஓட்டும் உபகரணம், புலன்களே குதிரைகள். இவ்வாறு மனம் மற்றும் புலன்களின் சேர்க்கையால் ஆத்மா இன்புறவோ, துன்புறவோ செய்கின்றான். பெரும் சிந்தனையாளர்கள் இவ்வாறே எண்ணுகின்றனர்." மனம் புத்தியினால் வழிகாட்டப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் மோசமான வியாதி சிறப்பான மருந்தையும் வென்று விடுவதைப்போல, பலமானதும் அடங்காததுமான மனம் ஒருவனது சுய புத்தியையும் அடிக்கடி வென்று விடுகிறது. இத்தகு பலமிக்க மனம் யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அர்ஜுனனைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இஃது என்றும் அசாத்தியமே. அப்படியிருக்க நவீன மனிதனைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? இங்கு கூறப்பட்டிருக்கும் உவமை பொருத்தமானது: வீசும் காற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. குழம்பிய மனதைக் கட்டுப்படுத்துவது அதை விடக் கடினமானதாகும். பகவான் சைதன்யரால் கூறப்பட்டபடி, மனதைக...

நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், பொய் அகங்காரம் பிறக்கிறது.

  தொடக்கத்தில் , பரிசுத்த உணர்வு நிலை அல்லது கிருஷ்ணர் பற்றிய தூய உணர்வு எனும் நிலையிலிருந்து முதல் மாசு தோன்றியது . இது    பொய் அகங்காரம்    அல்லது உடலைத் தானாக எண்ணிக்கொள்ளுதல் ஆகிய   தவறு என்று அழைக்கப்படும் . உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது . ஆனால் உயிர்களுக்கு அளவோடு கூடிய சுதந்திரமும் உள்ளது . இது தான் கிருஷ்ண உணர்வினை மறக்கச் செய்கிறது . அதாவது உண்மையில் , தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு இருக்கிறது ; ஆனால் அளவோடு கூடிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் , கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது . இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது ; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர் திடீரென்று மாறுவது போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன . அதனால் , ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய கக்தி போன்றது என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தச் சான்று மிகச் சரியானது . ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு மிகவும் நன்றாக மழிக்கிறார் . ஆனா...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more