Skip to main content

Posts

Showing posts with the label Chanting / ஜபித்தல் (Articles)

பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருந்தால் மனதிருப்தி நிச்சயம்.

  பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருந்தால் மனதிருப்தி நிச்சயம். ஜீவராசியால் சிறிது நேரம்கூட அமைதியாக இருக்க முடியாது. அவன் எதையாவது செய்து கொண்டோ, நினைத்துக் கொண்டோ அல்லது எதைப் பற்றியாவது பேசிக்கொண்டோதான் இருப்பான். பௌதிகவாதிகள் பொதுவாக தங்களது புலன்களை திருப்திப்படுத்தும் விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் இவ்விஷயங்கள் மாயா சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவை எவ்வித திருப்தியையும் அளிப்பதில்லை. எனவே அவர்கள் கவலைகளும், ஆவல்களும் நிறைந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. திருப்தி அளிக்காத பொருளை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே பகவானின் பெருமைகளை எப்பொழுதும் பாடிக் கொண்டிருப்பதுதான், புலன் நுகர்வில் ஈடுபட்டுள்ள இத்தகைய அதிருப்தியடைந்த ஜீவன்களுக்கு திருப்தியை அளிக்கும் என்று நாரத முனிவர் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகக் கூறுகிறார். ஒரு ஜீவராசியின் சிந்தனை, உயர்வு, விருப்பம் அல்லது செயல் ஆகியவற்றை ஒருவராலும் தடுக்க முடியாது. ஆ...