Skip to main content

Posts

Showing posts with the label Death / மரணம்(Articles)

மரணத்தை வெல்லும் அறிவு

மரணத்தறுவாயில் ஒவ்வொரு உயிரும் தன் மனைவி , மக்களுக்கு என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான் . அதுபோல் ஓர் அரசியல்வாதி நாட்டுக்கும் , தன் கட்சிக்கும் என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான் . ஒருவன் முழுதும் கிருஷ்ண உணர்வு பெறவில்லையென்றால் , அவன் எந்த உணர்வு நிலையில் இறக்கிறானோ அதற்கேற்ப மறுபிறவியில் உடலைப் பெறுகிறான் . மன்னர் புரஞ்ஜனன் முற்றிலும் தம் மனைவி மக்களின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் . எனவே அவர் ஒரு பெண்ணின் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது . அதுபோல் தான் பிறந்த நாட்டின் மீது அதிகப் பற்றுடைய அரசியல்வாதி தன் வாழ்வு முடிந்தபிறகு மீண்டும் அநித நாட்டிலேயே பிறக்கிறான் . இம்மையில் ஒருவன் செய்யும் செயல்களின் விளைவு மறுமையிலும் அவனைப் பாதிக்கிறது . சிலநேரங்களில் அரசியல்வாதிகள் தங்கள் புலனுகர்ச்சிக்காக கொடிய பாவங்களைச் செய்கின்றனர் . எதிர்க்கட்டிசியை அழிப்பது ஒரு அரசியல்வாதிக்கு அசாதாரணமன்று . ஒரு அரசியல்வாதி அவனது தாய் நாட்டிலேயே மீண்டும் பிறந்தால் கூட அவன்தன் முந்தைய வாழ்வில் செய்த பாவங்களின் பலன்களை அனுப...