Skip to main content

Posts

Showing posts with the label Fear / பயம் (Articles)

அச்சம் தவிர்

பகவத்கீதைக் கூறுகிறது: ஆன்மீக வளர்ச்சியடைய விரும்பும் ஒருவன் முதலில் அச்சத்தை விட வேண்டும். “அபயம் ஸத்த்வ ஸம்ஸீத்தி:” (ப.கீ.16.1) பௌதீக ஈடுபாட்டினாலேயே அச்சம் உண்டாகிறது. இதனை ஸ்ரீமத் பாகவதமும் (11.2.37) குறிப்பிடுகின்றது: “பயம்த்விதீயாபினி வேஸத: ஸ்யாத்:” உடலியற் கருத்துடைய வாழ்க்கையே அச்சத்தினை உருவாக்குகின்றது. ஒருவன் தன்னை இழந்த ஜடவுடல் என்று நினைக்கும்வரை அவனுக்கு அச்சம் என்பது இருக்கும், இச் ஜடக்கருத்தினின்று ஒருவன் வெளிவரும் பொழுது அவன் பிரம்மபூத அல்லது தன்னுணர்வு பெற்றவனாகிறான் உடனடியாக அவன் அச்சமற்றவனாகிறான். ப்ரஹ்ம பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ.18.54) அச்சமுடையோன் ஆனந்தம் அடைவதில்லை. பக்தர்கள் அச்சமில்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஆனந்த முடையோராயிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் பகவானின் தாமரைத் திருவடிகளிடத்துத் தொடர்ந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதே காரணமாகும். இது மேலும் கூறப்படுகிறது: ஏவம் ப்ரஸன்ன - மனஸோ பகவத் - பக்தி - யோகத: பகவத் - தத்த்வ - விஞ்ஞானம் முக்த - ஸங்கஸ்ய ஜாயதே (பாக.1.2.20) பகவத் பக்தி யோகத்தினைப் பயிற்சி செய்வதின் மூலம் ஒருவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகிற...

பயம்

  ஆபன்ன: ஸ்ம்ஸ்ருதிம் கோராம்யன்-நாம விவசோ க்ருணன் தத: ஸத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம் மொழிபெயர்ப்பு பயமே சொரூபமானதும் கூட கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன. பொருளுரை  பரம புருஷ பகவானாகிய வாசுதேவன் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் பரம ஆளுநராவார். பகவானின் கடுங்கோபத்திற்கு அஞ்சாதவர் ஒருவரும் படைப்பில் இல்லை. மாபெரும் அசுரர்களான இராவணன், ஹிரண்யகசிபு மற்றும் கம்ஸனைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஜீவராசிகள் அனைவரும் பரம புருஷனால் கொல்லப்பட்டனர். மேலும் சர்வ வல்லமை பொருந்தியவரான வாசுதேவன், தமது சுய சொரூபத்தின் சக்திகளையெல்லாம் அவரது நாமத்தில் பொருத்தியுள்ளார். அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருடன் சம்பந்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்தும் அவருக்குள்ளேய அடங்கியுள்ளன. கிருஷ்ணரின் நாமத்தைக் கேட்டதும் பயமே உருவாக உள்ளதும், அஞ்சுகிறது என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கிருஷ்ணா என்ற நாமத்திற்கும், கிர...