மனிதர்கள் அறியாமையால் செய்யும் செயல்கள், அவனை பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது
எல்லாப் பக்கங்களிலும் தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருந்த போதிலும் அதனை அறியாது அம்மான் ஓர் அழகிய நந்தவனத்தில் புல்லை மேய்ந்த கொண்டிருந்தது . மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் குடும்பவாழ்க்கையின் நடுவில் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் . ஒரு நந்தவனத்தில் தும்பிகளின் இனிய ஒசையினைக் கேட்டுக் கொண்டு வாழ்வது , குடும்பத்திற்கு எழில்சேர்க்கும் மனைவியுடன் ஒவ்வொருவரும் வாழ்வது போன்றதாகும . தும்பிகளின் இனிய இசை குழந்தைகளின் மழலைமொழியோடு ஒப்பிடக் கூடியது . மானைப் போன்ற மனிதன் தன் முன்னே காலம் என்னும் புவி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் இல்லற வாழ்வில் மகிழ்ந்து கொண்டிருக்கிறான் . உயிர்ப்பொருள்கள் செய்யும் செயல்கள் மற்றொருவகையான ஆபத்தினை உருவாக்கி அவனைப் பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது . பாலை வனத்தில் ஒன்றல்ல . சிற்றின்பத்திலும் மானுக்குத் தீராத மோகமுண்டு . இதன் முடிவு என்னவென்றால் மானைப் போல் வாழ்பவன் உரிய காலத்தில் கொல்லப்படுவான் . அதனா...