Skip to main content

Posts

Showing posts with the label Lord Shiva / சிவபெருமான் (Articles)

சிவம் என்றால் “மங்கலம்”.

  யத் த்வி - அக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம் ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆஸு ஹந்தி தத் பவித்ர - கீர்திம் தம் அலங்க்ய - ஸாஸனம் பவான் அஹோ த்வேஷ்டி ஸிவம் ஸிவதேர: மொழிபெயர்ப்பு சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே, நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப் பெரியத் தவரைச் செய்திருக்கிறீர். ‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப் பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும் தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது. பொருளுரை சிவபெருமான் பௌதீக உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் மிகச் சிறந்த மகாத்மாவாக விளங்குகிறார். உடலோடு ஆத்மாவை அடையாளம் காணும் மனிதர்களுக்கு அவரத நாமம் மிகவும் மங்கலமானதாகும். இதுபோன்ற மனிதர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தால், படிப்படியாகத் தாம் இந்தப் பரு உடல் அல்ல, ஆத்மா என்று உணர்ந்து கொள்வர். சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். உடலினுள் இருக்கும் ஆத்மா மங்கலகரமானதாகும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி:’ “நான் பிரம்மம்”. இவ்வுணர்தலே ம...

“ஸிவோ (அ)ஹம்” - “நான் சிவபெருமான்”

  சிவபெருமான் ஆடம்பரமான ஆடைகள் , ஆபரணங்கள் , மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் இறுதியில் நாய்கள் தின்னப் போகும் இந்த உடலை அலங்கரிப்தில் மோகங்கொண்டவர்கள் அதைத் தானானக் கருதி மிகவும் ஆடம்பரமாக போற்றிப்பாதுகாக்கின்றனர் . இம்மனிதர்கள் சிவபெருமானைப் புரிந்து கொள்வதில்லை . மாறாக ஆடம்பரமான செல்வ வளத்திற்காக அவர்கள் அவரை அணுகுகின்றனர் . இரண்டு வகையான பக்தர்கள் சிவபெருமானுக்கு உண்டு . ஒரு பிரிவினர் முழு லோகாயத வாதிகள் அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வளங்களை சிவபெருமானிடம் வேண்டுகின்றனர் . மற்றொரு பிரிவினர் அவரோடு ஒன்றாக இணைய வேண்டுமென்று விருமபுகின்றனர் . அவர்கள் பெரும்பாலும் மாயாவாதிகள் ஆவர் . அவர்கள் “ ஸிவோ ( அ ) ஹம் ” “ நான் சிவபெருமான் ” அல்லது “ முக்தி பெற்ற பிறகு நான் சிவபெருமானுடன் இணைவேன் ” என்று ஓதுகின்றனர் . மாறாக கர்மாக்ளும் , ஞானிகளும் பொதுவாக சிவபெருமானின் பக்தர்களேயாவர் . ஆயினும் அவர்கள் அவரது உண்மை நோக்கத்தினை அறிந்து கொள்வதில்லை . சில நேரங்களில் சிவபெருமானின் பக்தர்கள் அவரை...

வைஷ்ணவானாம் யதா ஸம்பு

  “ வைஷ்ணவானாம் யதா ஸம்பு ”: அதாவது எல்லாப் பக்தர்களிலும் சிறந்தவர் சிவபெருமானே என்று சொல்லப்படுகின்றது . ஆகையினால் பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் அனைவரும் சிவபெருமானின் பக்தர்களும் ஆவர் . பிருந்தாவனத்தில் கோபீஸ்வரன் கோயில் எனப்படும் சிவபெருமான் ஆலயம் இருக்கின்றது . கோபியர்கள் சிவபெருமானை மட்டுமல்லாது காத்யாயனி என்னும் துர்கையையும் வழிபடுகின்றனர் . ஆனாலும் அவர்களது நோக்கம் பகவான் கிருஷ்ணரின் கருணையைப் பெற வேண்டும் என்பதாகவே இருக்கின்றது . பகவான் கிருஷ்ணரின் பக்தன் சிவபெருமானை நிந்திப்பதில்லை மாறாக அவனும் சிவபெருமானை , சிறந்த பக்தர் என்று வணங்குகிறான் . ஆகையினால் சிவபெருமானை வணங்கும் பக்தன் , கிருஷ்ணரின் அருளைப் பெறவேண்டும் என்றே அவரை வணங்குகின்றானே ஒழிய வேறு எந்தவித பொருள் இன்பத்திற்காகவும் அல்ல . இது பகவத்கீதையிலும் (7.20) பொருட் செல்வம் வேண்டியே மக்கள் பொதுவாக பிறதேவர்களை வழிபடுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது . “ கானமஸ்தைஸ் தைர் ஹ்ருத ஜ்ஞானா :” பொருளாசையே ஒருவனைத் தேவர்களை வணங்கத் தூண்டுகிறது . ...