Skip to main content

Posts

Showing posts with the label Sraddha Ceremony / ஸ்ராத்தம் (Articles)

பித்ரு வ்ரதம் / கயா ஸ்ராத்தம்

பகவத் கீதையில் (9.25) “பித்ரூன் யாந்தி பித்ரு வ்ரதா:” என்று கூறப்பட்டிருக்கிறது. குடும்ப நலத்தில் அக்கறை கொண்டவர்கள் “பித்ரு வ்ரதா:” என்று அழைக்கப்படுகின்றனர். பித்ரு லோகம் என்றொரு உலகம் இருக்கிறது. அதன் தலைவன் அர்யமான் ஆவான். அவனும் ஒரு தேவனைப் போன்றவன்தான். மேலும் அவனை திருப்திப்படுத்துவதின் மூலம் ஒருவன் பேய்களாய்த் திரியும் தனது குடும்ப உறுப்பினர்கள் பூத உடல் பெறுமாறு உதவலாம். தனது குடும்பத்திடமும், கிராமத்திடமும், நாட்டிடமும் மிகுந்த பற்றுக் கொண்டு, பாவமும் செய்தவர்கள் பஞ்சபூதங்களினாலான பூத உடலைப் பெறுவதில்லை. மாறாக மனம், புத்தி, ஆணவம் என்பவற்றினாலான நுண்ணுடலையே பெறுகின்றனர். இந்நுண்ணுடல்களில் இருப்பவர்களே பேய்கள் எனப்படுவர். இந்தப் பேய்களின் நிலை மிகவும் துன்பமானது, அவர்களிடம் மனம், புத்தி, ஆணவம் போன்றவை இருந்தும் பூதஉடல் இல்லாததினால் அவர்கள் பௌதீக இன்பங்களை விரும்பி தொல்லைகள் கொடுக்கின்றனர். அக்குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக மகன் அர்யமான் தேவன் அல்லது பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். காலங்காலமாகவே இந்தியாவில் ஒரு குடும்பத்தின் மூத்த மைந்தன் கயா என்ற ஊருக்குப...

ஸ்ராத்தம் (திவசம்) என்றால் என்ன ?

  ஸ்ராத்தம் என்பது வேதத்தைப் பின்பற்றுபவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கு முறையாகும் . இது ஓர் ஆண்டில் 15 நாட்கள் நடைபெறும் . அப்பொழுது சடங்கு முறைகளைச் செய்யும் மதவாதிகள் , பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்குப் படையல் கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர் . இவ்வாறு அந்த பிதாக்களும் முன்னோர்களும் , இயற்கையின் மாற்றங்களால் , ஜடவுலக இன்பம் அனுபவிக்க முழுமையான உடல் இல்லாத நிலையில் அவர்கள் சந்ததியினரால் தரப்படும் ஸ்ராத்தப் படையலினால் மீண்டும் அத்தகைய உடல்களைப் பெற முடியும் . ஸ்ராத்தம் அல்லது பிரசாதத்துடன் தரும் படையல் நிகழ்ச்சி இன்றும் இந்தியாவில் , சிறப்பாக கயா நகரில் இருக்கின்றது . அங்கு புகழ் வாய்ந்த கோயிலில் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் படையல் கொடுக்கப்படுகின்றது . இவ்வாறு பகவான் சந்ததிகளின் பக்தித் தொண்டினால் மகிழ்வதால் , அவருடைய அருளால் முழு உடலற்ற முன்னோர்களின் கண்டனத்துக்கு உரிய ஆன்மாக்களை விடுவிக்கிறார் . ஆன்மீக   முன்னேற்ற வளர்ச்சிக்காக , அவர்கள் மீண்டும் முழு உடலைப் பெறுவதற்கு உதவுகிறார் . ...

வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டியவர் யார் ?

தாவத் கர்மாணி குர்வீத ந நிர்வித்யேத யாவதா மத்-கதா-ஸ்ரவணாதௌ வா ஸ்ரத்தா யாவன் ந ஜாயதே மொழிபெயர்ப்பு எதுவரையில் கர்மத்தில் திருப்தியடையவில்லையோ, எதுவரையில் என் கதை முதலியவற்றைக் கொண்ட பக்தித்தொண்டில் சிரத்தை உண்டாகவில்லையோ அதுவரையில் ஒருவன் வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டும். பொருளுரை தூய பக்தர்களுடன் சகவாசம் கொண்டு பகவத் தொண்டில் முழு நேர ஈடுபாடு கொள்வதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தாலொழிய ஒருவன் சாதாரண வேதக் கோட்பாடுகளையும், கடமைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதை பகவானே பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஸ்ருதி-ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ் தே உல்லங்ய வர்ததே ஆக்ஞா-ச்சேதீ மம த்வேஷீ மத்-பக்தோ ’பி ந வைஷ்ணவ: “சுருதி மற்றும் ஸ்மிருதி சாஸ்திரங்கள் எனது கட்டளைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டளைகளை மீறுபவன் எனது விருப்பத்தை மீறி என்னை எதிர்ப்பவனாகிறான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒருவன் தன்னை எனது பக்தன் என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அவன் ஒரு வைஷ்ணவனல்ல.” பகவானைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் திட நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாத...