Skip to main content

Posts

Showing posts with the label Vedic scriptures / வேத சாஸ்திரங்கள் (Articles)

சாஸ்திர விதிகளின் முக்கியத்துவம்

  ய : ஷா ஸ்த்ர – விதி ம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம – காரத : ந ஸ ஸித் தி ம் அவாப்னோதி ந ஸுக ம் ந பராம் க திம் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன் , பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை . பொருளுரை : முன்பே விவரிக்கப்பட்டபடி , சாஸ்திரங்களின் விதிகள் மனித சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நிலைகளுக்கும் கொடுக்கப் பட்டுள்ளன . ஒவ்வொருவரும் இந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகின்றனர் . இவற்றைப் பின்பற்றாமல் தனது மனம்போன போக்கில் காமம் , கோபம் , மற்றும் பேராசையின்படி ஒருவன் செயல்பட்டால் , அவன் தனது வாழ்வில் என்றுமே பக்குவமடைய முடியாது . வேறு விதமாகக் கூறினால் , ஒரு மனிதன் இவ்வெல்லா விஷயங்களையும் கொள்கையளவில் அறிந்தவனாக இருந்தாலும் , தனது சொந்த வாழ்வில் இவற்றை ஈடுபடுத்தாத வரை அவன் மனித இனத்தின் கடைநிலையைச் சேர்ந்தவனாகவே அறியப்படுகின்றான் . மனித வாழ்வில் உள்ள உயிர்வாழி , வாழ்வை உன்னத தளத்திற்கு உயர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற...

(ஞானினஸ் தத்வ-தர்சின: தத்துவதர்சிகளால் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் படிக்க வேண்டும்.

  அறிஞரென்ற பட்டம் பெற்றிருப்பதால், கல்வியில் முன்னேறியிருப்பதாக காட்டிக் கொள்ளும் நவீன இராட்சஸர்கள், பகவான் ராமச்சந்திரர் பரமபுருஷரல்ல என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்றும் நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால் கற்றுணர்ந்தவர்களும், ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்களும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; பகவான் ராமச்சந்திரரையும், அவரது செயல்களையும், பரமசத்தியத்தை அறிந்த தத்துவ தரிசிகளால் அளிக்கப்படும் விளக்கங்களுக்கேற்ப மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பகவத்கீதையில் (4.34) பகவான் கூறுகிறார்: தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ-தர்சின: “ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சிசெய். அவருக்குத் தொண்டு செய்து, அவரிடம் அடக்கமாக கேள்வி கேள். தன்னுணர்வு பெற்ற ஆத்மாவான அவர் உண்மையைக் கண்டவராதலால், அவரால் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” ஒருவர் பரம சத்தியத்தைப் பூரணமாக அறிந்த ஒரு தத்துவ தரிசியாக இருந்தால் தான் அவரால் பரமபுருஷரைப் பற்றிய செயல்களை விவரிக்க இயலும். எனவே பல இராமாயண உரைகள் இருந்த போதிலும், அவற்றில் சில அதிகாரப்பூர்வமானவை அ...