Skip to main content

Posts

Showing posts with the label Bhisma. / பீஷ்மதேவர் (Articles)

பீஷ்மரின் உபதேசங்கள் மனித வாழ்வை உயர்த்தும் ஒன்பது குணங்கள்

நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை  (1) கோபப்படாதிருத்தல்,  (2) பொய் சொல்லாமை,  (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,  (4) மன்னித்தல்,  (5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்,  (6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,  (7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல்,  (8) எளிமையாக இருத்தல், மற்றும்  (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும்.  மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது.  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁...

பீஷ்மதேவரின் மரணம்

  தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ கால : ப்ரத்யுபஸ்தித : யோ யோகினஸ் சந்த - ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது . இது , தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும் . பொருளுரை பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி , பொருத்தமான ஒரு நேரத்தில் ஜடவுடலை விட்டு , அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர் . பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது : தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் , அக்னி தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் , சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது , அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து , ஆன்மீக வானத்தை அடைகின்றனர் . இந்த நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது . பக்குவமடைந்த யோகிகள் இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் . விரும்பிய நேரத்தில் உடல...

கிருஷ்ணரும், பீஷ்மரும்

  சித - விசிக - ஹதோ விசீர்ண - தம்ச : க்ஷதஜ - பரிப்லுத ஆததாயினோ மே ப்ரஸபம் அபிஸஸார மத் - வதார்தம் ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த : மொழிபெயர்ப்பு முக்தி அளிப்பவரான , அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக , எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல் , போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார் . அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது . மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது . பொருளுரை கிருஷ்ணரும் , பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது . ஏனெனில் , கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும் , பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது ; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன . ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும் . பகவான் பரிபூரண...