Skip to main content

Posts

Showing posts with the label General / பொது (Articles)

பகவானும் அவரது சகாக்களும், அவரது விருப்பப்படியே தோன்றி மறைகின்றனர்.

பகவானும் அவரது சகாக்களும், அவரது விருப்பப்படியே தோன்றி மறைகின்றனர். ஜட இயற்கையின் சட்டங்களுக்கு அவர்கள் உட்பட்டவர்கள் அல்ல. இயற்கைச் சட்டங்களின்படி, பகவானின் குடும்பத்தினரை கொல்லக் கூடியவர்களும் இல்லை. இயற்கையான மரணத்தை அவர்கள் அடைவதும் சாத்தியமில்லை. எனவே குடிபோதையினால் தங்களுக்கிடையில் சண்டை செய்வதுபோல் காட்டிக்கொண்டு, பூமியிலிருந்து மறைவதுதான் ஒரே வழி. பெயரளவேயான இச்சண்டையும் பகவானின் விருப்பப்படிதான் நிகழும். இல்லையெனில் அவர்களுக்கிடையில் சண்டை நிகழ்வதற்கும் காரணமில்லை. அர்ஜுனன் கொண்டிருந்த குடும்பப் பாசத்தினால், மாயையில் புகுத்தப்பட்ட அவரிடம், பகவானால் பகவத்கீதை பேசப்பட்டது போலவே, பகவானின் விருப்பப்படியே யது வம்சத்தினரும் குடியால் போதை ஏறும்படிச் செய்யப்பட்டனர். பகவத் பக்தர்களும், சகாக்களும் பகவானிடம் பூரண சரணாகதியடைந்த ஆத்மாக்களாவர். இவ்வாறாக பகவானின் கரங்களில் உன்னத ஆயுதங்களாக உள்ள அவர்களை பகவானால் தமது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள முடியும். பகவானின் மகிழ்ச்சியைக் காண விரும்புவதால், தூய பக்தர்களும்கூட பகவானின் இத்தகைய லீலைகளை அனுபவிக்கின்றனர். பகவத் பக்த...

கணவனும் மனைவியும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரிய கூடாது

  புன்-நாம்னோ நரகாத் யஸ்மாத் பிதரம் த்ராயதே ஸுத: தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயம் ஏவ ஸ்வயம்புவா புத் என்ற நரகத்தில் தந்தை தண்டனை பெறுவதிலிருந்து மகன் அவரை விடுவிக்கிறான். இதனால் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இந்த நியதியின்படி, தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்படும் பொழுது, புத்திரனானவன் தன் தந்தையைத் தான் விடுதலை செய்கிறானேயொழிய தாயை அல்ல. இவ்வாறாக வேத இலக்கியத்தில் விவாகரத்து என்பதே கிடையாது. ஒரு மனைவி தன் கணவனிடம் எப்பொழுதும் விசுவாசமும், பதிபக்தியும் கொண்டிருக்கும்படி பயிற்சி அளிக்கப்படுகிறாள். ஏனெனில், எந்த ஒரு வெறுக்கத்தக்க பௌதிக சூழ்நிலையிலிருந்தும் விடுதலையடைய இது அவளுக்கு உதவியாக இருக்கும். புத்ரோ நயதி நரதேவ யம-க்ஷயாத் என்று இச்சுலோகம் தெளிவாகக் கூறுவது போல், “புத்திரன் யமராஜனின் காவலிலிருந்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறான்”. அது, புத்ரோ நயதி மாதரம், “புத்திரன் தன் தாயைக் காப்பாற்றுகிறான்” என்று ஒருபோதும் கூறவில்லை. வித்தளிக்கும் தந்தைதான் விடுவிக்கப்படுகிறார். கிடங்கின் அதிகாரியான தாய் அல்ல. ஆகவே கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரியக்கூ...

அக்ஷௌணி என்றால் என்ன?

  ஓர் அக்ஷௌணி என்பது, 21,870 தேர் மற்றும் யானைகளையும், 109,350 காலாப்படை வீரர்களையும், மற்றும் 65,610 குதிரைகளையும் கொண்டதொரு படையின் அணிவகுப்பைக் குறிக்கிறது. இதைப்பற்றிய சரியான விவரம் மகாபாரதத்தில், ஆதி பர்வத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: ஏகோ ரதோ கஜஸ் சைக: நரா: பஞ்ச பதாதய: த்ரயஸ் ச துரகாஸ் தஜ்-ஜ்ஞை: பத்திர் இதி அபிதீயதே பத்திம் து த்ரிகுணாம் ஏதாம் விது: ஸேணாமுகம் புதா: த்ரீணி ஸேனாமுகானி ஏகோ குல்ம இதி அதிதீயதே த்ரயோ குல்மா கணோ நாம வாஹினீ து கணாஸ் த்ரய: ஸ்ருதாஸ் திஸ்ரஸ் து வாஹின்ய: பருத்னேதி விசக்ஷணை: சமூஸ் து ப்ருதனாஸ் திஸ்ரஸ் சம்வஸ் திஸ்ரஸ் து அனீகினீ அனீகினீம் தச-குணாம் ஆஹுர் அக்ஷௌஹிணீம் புதா: அக்ஷௌஹிண்யஸ் து ஸங்க்யாதா ரதானாம் த்விஜ-ஸத்தமா: ஸங்க்யா-கணித-தத்வக்ஞை: ஸஹஸ்ராணி ஏக-விம்சதி சதானி உபரி சாஷ்டௌ ச பூயஸ் ததா ச ஸப்ததி: கஜானாம் து பரீமாணம் தாவத் ஏவாத்ர நிர்திசேத் ஞேயம் சத-ஸஹஸ்ரம் து ஸஹஸ்ராணி ததா நவ நராணாம் அதி பஞ்சாசச் சதானி த்ரீணி சானுகா: பஞ்ச-ஷஷ்டி-ஸஹஸ்ராணி ததாஸ்வானாம் ச தானி ச தசோத்தராணி ஷட் சாஹுர் யதாவத் அபிஸங்க்யயா ஏதாம் அக்ஷௌஹிணீம் ப்ராஹ...

காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர்

காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 கலியுகத்தில் மனிதர்கள் தாங்கள் உண்பதற்காக நிறைய இறைச்சிக் கூடங்களைத் திறக்கின்றனர். அதனால் பழைய சடங்குகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டால் மக்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் மேலும் விலங்குகளைக் கொல்வதற்குத் தூண்டப்படுவர். கல்கத்தாவில் உள்ள இறைச்சிக் கடைகளில் காளியின் படத்தை வைத்திருப்பார்கள், மாமிசம் உண்போர் இதுபோலக் காளியின் படங்கள் வைத்திருக்கும் கடைகளிலேயே இறைச்சிகளை வாங்குவர். ஏனெனில் அது காளிதேவிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியம் என்பது அவர்கள் கருத்து. காளிதேவி சிவபெருமானின் சிறந்த துணைவியாதலினால் அவள் புலால் உண்ணமாட்டாள் என்பதை அவர்கள் அறிவதில்லை. சிவபெருமான் சிறந்த வைணவராதலினால் அவர் புலால் உண்ணுவதில்லை. மேலும் அவருக்கு அளிக்கும் படையல்களையே காளிதேவியும் ஏற்றுக்கொள்கிறாள். அதனால் அவள் இறைச்சியோ, மீனோ உண்பதற்கான சாத்தியமே இல்லை. இதுபோன்ற நிவேதனங்கள் எல்லாம் காளிதேவியின் அடியவர்களான பேய், பூதம், பிசாசு மற்றும் ராட்சர்களுக்கு அளிக்கப்படுவதாகும். அவர்களே இவைகளை ஏற்றுக் க...

காளி தேவி மாமிசம் சாப்பிடுவார்களா?

 காளி தேவி மாமிசம் சாப்பிடுவார்களா? 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரம்மானந்தா: காளி மாமிசம் சாப்பிடுவார்களா? பிரபுபாதா: காளி மாமிசம் உண்பதில்லை, ஆனால் மாமிசம் உண்பதை விட்டுவிட இயலாதவர்கள், ஒரு ஆட்டை - (பசுவை அல்ல) அல்லது ஒரு சிறிய விலங்கை காளி தேவியின் முன் அமாவாசை இரவன்று (பகலில் அல்ல) பலியிட்டு, அதை சாப்பிடலாம் என்பது சாஸ்திரத்தின் கட்டளையாகும். பஞ்சத்ரவிடா: அவ்வாறு வழங்கப்பட்டால், அந்த மாமிசத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள்?அது யாருடைய பிரசாதம்? யார் அதை உண்பார்கள்? பிரபுபாதா: பிரசாதம் அல்ல ... அந்த மாமிசம் காளியால் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, ஆனால் அது காளியின் கூட்டாளிகளான சூனியக்காரிகளாலும் மற்றவர்களாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரம்மானந்தா: ஸ்ரீமத் பாகவதத்தில், காளி தேவி தன் கணவரான சிவ பெருமானின் பிரசாதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள்.  பிரபுபாதா: ஆமாம். பிரம்மானந்தா: அப்படியானால் காளி தேவி சைவம். சரியா? பிரபுபாதா: ஆமாம். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே ...

எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை

  ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம். புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான, ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது. உணவு தானியங்கள், பால், பழம், மரம், கல், சர்க்கரை, பட்டு நூல், இரத்தினங்கள், பருத்தி, உப்பு, நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத் தேவைகள் பூரணமாக பகவானால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரபஞ்சத்திலுள்ள மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், அதிலுள்ள ஒவ்வொரு கிரகத்திலும் வாழும் உயிரினங்களுக்கும், உணவு வழங்குவதற்கும், அவற்றின் நலத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு பகவான் அளித்துள்ளார். தேவைகளைப் பூர்த்தி செய்பவர் பூரணமானவராவார். மேலும் மனிதன் இத்தேவைகளை பெறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டுமே சிறிது தேவைப்படுகிறது. செயற்கையான முறையில் வாழ்வின் வசதிகளை உண்டாக்கும் இயந்திரங்கள், கருவிகள் அல்லது மிகப்பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியவை தேவையில்லை...

சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை

சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் ச ஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன மொழிபெயர்ப்பு ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. பொருளுரை தரமான, அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் பகவத் கீதையே மிகச்சிறந்ததாகும். மிருகங்களைப் போல இருக்கும் மனிதர்களுக்கு சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையோ சாஸ்திர ஞானமோ இல்லை; சிலர், சாஸ்திரங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், அவற்றின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட முடிந்தாலும், அச்சொற்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு சிலர், பகவத் கீதையைப் போன்ற சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்திருந்தாலும், புருஷோத்தமரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டில் நம்பிக்கை கொள்வதில்லை. அத்தகைய நபர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க இயலாது. அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர்களில், நம்பிக்கையின்றி எப்போதும் சந்தேகத்தில் உழல்பவர்கள், ...

கடவுள் இருக்கின்றாரா?

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ் *************************** கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என்பதைக் காட்டிலும் கடவுள் இருக்கின்றார் என்பதற்கே சாட்சிகள் அதிகமாக உள்ளன. அதை நிரூபிப்பதற்கான சில தகவல்கள்: * இவ்வுலகில் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, தேவைப்பட்டு இல்லாமல் இருப்பதும் ஏதுவும் இல்லை. உதாரணமாக, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் இருக்கின்றது, பலதரப்பட்ட உயிரினங்களின் பசியைத் தணிப்பதற்குப் பலதரப்பட்ட உணவு வகைகள் உள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால், இவற்றையெல்லாம் முறையாக நிர்வகிப்பவர் ஒருவர் இருப்பதை நிச்சயம் உணரலாம். * ஓர...