Skip to main content

Posts

Showing posts with the label Happiness / ஆனந்தம் ( Articles)

மகிழ்ச்சி இருக்கும் இடம்

  முன்னுரை: இந்த ஶ்லோகம், நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அறியாமல்,  ஜட உலகில்   அதைத் தேடும் மனிதனின் நிலையை எளிமையாக விளக்குகிறது. எப்படி ஒரு மான் கானல் நீரை உண்மை நீராக எண்ணி ஓடுகிறது, அதுபோல் நாமும் உண்மையான மகிழ்ச்சியைத் தவறான இடங்களில் தேடுகிறோம். உண்மையான மகிழ்ச்சி ஜலம் தத்-உத்பவைஸ் சன்னம் ஹித்வாக்ஞோ ஜல-காம்யயா ம்ருகத்ருஷ்ணாம் உபாதாவேத் ததான்யத்ரார்த்த-த்ருக் ஸ்வத: ஜலம்-நீர்; தத்-உத்பவை:-அந்த நீரிலிருந்து வளர்ந்த புல்லால்; சன்னம்-மூடப்பட்டுள்ள; ஹித்வா-விட்டுவிட்டு; அக்ஞ:-அறிவில்லாத ஒரு மிருகம்; ஜல-காம்யயா-நீரைப் பருக விரும்பி; ம்ருகத்ருஷ்ணாம்-கானல் நீரை; உபாதாவேத்-தேடிச் செல்கிறது; ததா-அதுபோலவே; அன்யத்ர-வேறெங்கோ; அர்த்த-த்ருக்-தன்னலத்தில் ஈடுபட்டு; ஸ்வத:-தனக்குள். மொழிபெயர்ப்பு அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது. அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல், ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். பொருளுரை அறிவ...

பௌதீக உலகம் இன்பத்தின் மிகப்பெருங்காடு

  பௌதீக வாழ்க்கைக் காட்டின் நேரடி பொருள் இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது , வணிகர்கள் நகரங்களில் நல்ல விலைக்கு விற்பதற்காகக் காட்டிற்குள் சென்று பல அரியப்பொருட்களைச் சேகரிக்கின்றனர் . ஆயினும் அக்காட்டுப்பாதை மிகவும் ஆபத்து நிறைந்ததாகும் . பௌதீக உலகில் அனுபவித்து மகிழ்வதற்காக ஒரு தூய ஆத்மா பகவானின் தொண்டினைக் கைவிட விரும்பும் பொழுது கிருஷ்ணர் பௌதீக உலகினுள் நுழைவதற்கான வாய்ப்பினை நிச்சயம் அவனுக்கு அருள்வார் . “ பிரேம விவர்தத்தில் ,” “ க்ருஷ்ண பஹிர் முக ஹனா போக வாஞ்சா கரே ” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது . பௌதீக உலகில் ஒரு தூய ஆத்மா வீழ்வதற்கு இதுவே காரணமாகும் , ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பின் கீழ் அவனது செயல்பாடுகள் இருப்பதினால் உயிர்வாழி பல்வேறு உயிர்க்குலங்களிடையே பல்வேறு நிலைகளை அடைகிறான் . சிலநேரம் அவன் தேவலோகத்தில் ஒரு தேவகுமாரனாகப் பிறக்கிறான் , சிலநேரம் கீழ் உலகில் ஒர் இழிந்த ஜந்துவாகப் பிறக்கிறான் . இது தொடர்பாக ஸ்ரீல நரோத்தம தாஸ தாக்கூர , “ நானா யோனி ஸதா பிரே :” உயிர்வாழ...