Skip to main content

மகிழ்ச்சி இருக்கும் இடம்

 


முன்னுரை:

இந்த ஶ்லோகம், நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அறியாமல், ஜட உலகில்  அதைத் தேடும் மனிதனின் நிலையை எளிமையாக விளக்குகிறது. எப்படி ஒரு மான் கானல் நீரை உண்மை நீராக எண்ணி ஓடுகிறது, அதுபோல் நாமும் உண்மையான மகிழ்ச்சியைத் தவறான இடங்களில் தேடுகிறோம்.


உண்மையான மகிழ்ச்சி


ஜலம் தத்-உத்பவைஸ் சன்னம் ஹித்வாக்ஞோ ஜல-காம்யயா
ம்ருகத்ருஷ்ணாம் உபாதாவேத் ததான்யத்ரார்த்த-த்ருக் ஸ்வத:

ஜலம்-நீர்; தத்-உத்பவை:-அந்த நீரிலிருந்து வளர்ந்த புல்லால்; சன்னம்-மூடப்பட்டுள்ள; ஹித்வா-விட்டுவிட்டு; அக்ஞ:-அறிவில்லாத ஒரு மிருகம்; ஜல-காம்யயா-நீரைப் பருக விரும்பி; ம்ருகத்ருஷ்ணாம்-கானல் நீரை; உபாதாவேத்-தேடிச் செல்கிறது; ததா-அதுபோலவே; அன்யத்ர-வேறெங்கோ; அர்த்த-த்ருக்-தன்னலத்தில் ஈடுபட்டு; ஸ்வத:-தனக்குள்.


மொழிபெயர்ப்பு


அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது. அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல், ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்.


பொருளுரை


அறிவு பற்றாக்குறையின் காரணத்தால் ஜீவராசி எப்படி புற உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். தான் ஓர் ஆன்மீகமான ஜீவன் என்ற தனது உண்மையான சொரூபத்தை ஒருவன் புரிந்து கொள்ளும் பொழுது, அவனால் பரம ஆன்மீக ஜீவனாகிய ஸ்ரீ கிருஷ்ணரையும் புரிந்து கொள்ள முடியும். மேலும் கிருஷ்ணருக்கும் தனக்கும் இடையிலுள்ள உண்மையான அன்புப் பரிமாற்றத்தையும் அவனால் புரிந்து கொள்ள முடியும். உடலானது எப்படி ஆன்மீக ஆத்மாவிலிருந்து வளர்கிறது என்பதை இச்சுலோகம் சுட்டிக் காட்டுவது கவனிக்கத் தக்கதாகும். நவீன விஞ்ஞானிகள், உயிரானது ஜடத்திலிருந்து வளர்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் உயிரிலிருந்து நான் ஜடம் வளர்கிறது. உயிரானது, அல்லது ஆன்மீக ஆத்மாவானாது இங்கு நீருக்கு ஒப்பிடப்படுகிறது. அந்த நீரிலிருந்து, புல்லின் வடிவில் ஜடத்தொகுதிகள் வளர்கின்றன. ஆன்மீக ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான அறிவை அறியாதவன், ஆத்மாவினுள் இருக்கும் ஆனந்தத்தைக் காண, தன் உடலுக்குள் பார்வையைச் செலுத்துவதில்லை; மாறாக, புல்லுக்கு அடியிலுள்ள நீரைப்பற்றிய அறிவு இல்லாத ஒரு மான் நீரைத்தேடி, வெளியிலுள்ள பாலைவனத்திற்குச் செல்வது போலவே, மகிழ்ச்சியைத் தேடி அவன் வெளியே செல்கிறான். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், உயிரின் எல்லைக்கப்பால் நீரைத் தேடமுயலும், தவறாக வழிநடத்தப்பட்ட மனிதர்களின் அறியாமையைக் களைய முயற்சி செய்கிறது. ரஸோ வை ஸ:. ரஸோ ‘ஹம் அப்ஸு கௌந்தேய. நீரின் சுவை கிருஷ்ணரேயாவார். தாகத்தை தணித்துக் கொள்ள, ஒருவன் நீரைச் சுவைத்து கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள வேண்டும். இது ஒரு வேதக் கட்டளையாகும்.  (ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 7.13.29 - )


முடிவுரை:


மகிழ்ச்சி நம்முள் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். கிருஷ்ண பக்தி வழியாக தான் ஓர் ஆன்மீகமான ஜீவன் என்றும் தனது உண்மையான சொரூபம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாசன் என்றும் ஒருவன் புரிந்து கொள்ளும் பொழுது, நம் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியும். வெளியில் அல்லாமல், நம்முள் இருக்கின்ற கிருஷ்ண  தாசன் என்ற உண்மையான நிலையை கண்டறிந்து "கிருஷ்ண சேவையை" தொடர்ந்து செய்யும் நித்ய சேவைகளே நித்யமான மகிழ்ச்சியைத் தரும் வழி.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...