பந்தப்பட்ட வாழ்வில் இருப்பதென்பது கடல் நடுவே ஒரு படகை ஓட்டுவதற்கு ஒப்பாகும் . சூழ்நிலை நன்றாக இருந்தால் , படகு மிகச் சுலபமாக ஓடும் . ஆனால் அங்கு புயல் காற்றோ , மூடுபனியோ , வீசும் காற்றோ அல்லது மேகமோ இருக்கு மானால் , கடலில் மூழ்கிவிடுவதற்கும் வாய்ப்புண்டு . எவ்வளவு நன்றாக ஆயத்தபபடுத்தப்பட்டு இருந்தாலும் , கடலில் திடீர் மாற்றத்தை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது . கப்பலால் கடல்களைக் கடந்துள்ளவனுக்கு , கடலின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது . ஆனால் பகவானின் கருணையால் ஜட வாழ்வெனும் கடலை ஒருவனால் மிகவும் சுலபமாகச் கடந்து விட முடியும் . புயல் காற்றுக்கோ அல்லது மூடுபனிக்கோ அவன் அஞ்ச வேண்டியதில்லை . இதல்லாம் பகவானின் விருப்பத்தைப் பொறுத்ததாகும் ; பந்தப்பட்ட வாழ்வில் சில துரதிர்ஷடமான ஆபத்து விளையுமானால் ஒருவராலும் உதவி செய்ய முடியாது . ஆனால் பகவத் பக்தர்கள் , கவலைப்படாமல் ஜட இருப்பெனும் கடலைக் கடந்து விடுகின்றனர் , ஏனெனில் தூய பக்தரொருவர் எப்பொழுதுமே பகவானால் பாதுகாக்கப்படுகிறார் ( பகவத் கீதை 9.13). பௌ...