Skip to main content

Posts

Showing posts with the label Surrender / சரணாகதி (Articles)

எவ்வாறு துன்பக் கடலை கடப்பது

  பந்தப்பட்ட வாழ்வில் இருப்பதென்பது கடல் நடுவே ஒரு படகை ஓட்டுவதற்கு ஒப்பாகும் . சூழ்நிலை நன்றாக இருந்தால் , படகு மிகச் சுலபமாக ஓடும் . ஆனால் அங்கு புயல் காற்றோ , மூடுபனியோ , வீசும் காற்றோ அல்லது மேகமோ இருக்கு மானால் , கடலில் மூழ்கிவிடுவதற்கும் வாய்ப்புண்டு . எவ்வளவு நன்றாக ஆயத்தபபடுத்தப்பட்டு இருந்தாலும் , கடலில் திடீர் மாற்றத்தை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது . கப்பலால் கடல்களைக் கடந்துள்ளவனுக்கு , கடலின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது . ஆனால் பகவானின் கருணையால் ஜட வாழ்வெனும் கடலை ஒருவனால் மிகவும் சுலபமாகச் கடந்து விட முடியும் . புயல் காற்றுக்கோ அல்லது மூடுபனிக்கோ அவன் அஞ்ச வேண்டியதில்லை . இதல்லாம் பகவானின் விருப்பத்தைப் பொறுத்ததாகும் ; பந்தப்பட்ட வாழ்வில் சில துரதிர்ஷடமான ஆபத்து விளையுமானால் ஒருவராலும் உதவி செய்ய முடியாது . ஆனால் பகவத் பக்தர்கள் , கவலைப்படாமல் ஜட இருப்பெனும் கடலைக் கடந்து விடுகின்றனர் , ஏனெனில் தூய பக்தரொருவர் எப்பொழுதுமே பகவானால் பாதுகாக்கப்படுகிறார் ( பகவத் கீதை 9.13). பௌ...

ஆத்ம நிவேதனம் (பூரண சரணாகதி)

தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன் ஸர்வாத்மனா ய: சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம் மொழிபெயர்ப்பு அரசே, பௌதிக கடகைமளையெல்லாம் விட்டு அனைவருக்கும் புகலிடமளிக்கும் முகுந்தனின் தாமரைப் பாதங்களைப் புகலிடம் அடைந்தவன் தேவர்களுக்கோ, சிறந்த முனிவர்களுக்கோ சாதாரண ஜீவராசிகளுக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ மனித குலத்திற்கோ அல்லது முன்னோர்களுக்கோ கடனாளி அல்ல. இவ்வெல்லா ஜீவராசிகளும் பரமபுருஷரின் அங்கங்களே என்பதால், பகவானின் சேவைக்காகத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் தனித்தனியாக இவர்களுக்குச் சேவை செய்ய அவசியமில்லை. பொருளுரை பகவானின் பக்தித் தொண்டிடம் முழுமையாகச் சரணடையாதவனுக்கு நிச்சயமாகப் பல பௌதிக கடமைகள் உள்ளன. ஒவ்வொரு சாதாரண பந்தப்பட்ட ஆத்மாவும் சூரிய ஒளி, சந்திர ஒளி, மழை, காற்று, உணவு ஜட உடல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தேவர்களிடமிருந்து பெறுகிறான். இவற்றிற்குப் பதிலாக தேவர்களுக்கு யாகத்தில் நிவேதனம் செய்யாதவன் திருடன் (ஸ்தேன) என்று பகவத் கீதை கூறுகிறது. அவ்வாறே, பசு முதலான ஜீவராசிகள் சுவை மிக்க அநேக உணவு வகைகளை அளிக்கின்றன. காலையில் எழுந்ததும் பறவைகளின் இன...

ஸ வை மண: க்ருஷ்ண - பதார விந்தயோ- னதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகும்

  யாவல் லிங்கபன்விதேோ ஹி ஆத்மா தாவத் கர்ம - நிபந்தனம் தேதா விபர்யய: க்லே சோ மாயா - யோகோ ‘நுவர்த்ததே மொழிபெயர்ப்பு ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பந்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும். பொருளுரை ஜீவராசியானவன் மனம், புத்தி, பொய் அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் பந்திக்கப்படுகிறான். ஆகவே மரணத்தருவாயில் ஏற்படும் மனநிலையே அடுத்த உடலுக்குக் காரணமாகிறது. பகவத் கீதை (8.6) உறுதி செய்வதுபோல், யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜதி அந்தே கலேவரம். மரணத்தருவாயில் ஆத்மா வேறொரு வகையான உடலுக்கு மாறுவதற்கு மனமே அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. ஒரு ஜீவராசி தன் மனதின் உத்தரவை எதிர்த்து, மனதை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்துவானாயின், அவனுடைய மனதால் அவனை இழிவு படுத்தமுடியாது. எனவே மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகு...

சரணாகதியின் ஆறு அறிகுறிகள்

  சரணாகதியின் ஆறு அறிகுறிகள்  ********** ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:  ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸோ  கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்ம-நிகே்ஷப-கார்பண்யே  ஷட்-விதா ஷரணாகதி: -  (1) கிருஷ்ண உணர்விற்கு சாதகமான விஷயங்களை ஏற்றல்,  (2) கிருஷ்ண உணர்விற்கு எதிரான அல்லது பாதகமான விஷயங்களைக் கைவிடுதல், (3) கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவார் என்று பூரண நம்பிக்கை வைத்தல்,  (4) கிருஷ்ணரை தனது பாதுகாவலராக ஏற்றல்,  (5) ஆத்மாவை அர்ப்பணம் செய்தல்,  (6) எப்போதும் தன்னை மிகத் தாழ்வாக வைத்து பணிவுடன் நடந்து கொள்ளுதல். (ஹரி-பக்தி-விலாஸம்  (11.676)) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண   கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,   ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram 🍁🍁🍁🍁🍁 ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்...