Skip to main content

Posts

Showing posts with the label Tulasi / துளசி (Articles)

துளசி ஜலதானம்

  சித்திரையில் மலரும் புத்தாண்டும் கேசவ விரத மகிமையும் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் இந்த மாதமே பாரதப் பஞ்சாங்கங்களின்படி பல இடங்களில் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய மங்கலகரமான வேளையில்தான் கேசவ விரதம் ஆரம்பமாகிறது. ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும் இந்த விரத காலத்தில், ஐம்புலன்களையும் அடக்கி நல்வழியில் செலுத்துவதும், தரையில் படுத்து உறங்குவதும் அவசியமாகும். விரத முறைகள் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் தினமும் காலை, மாலை என இருவேளைகளும் நதியில் நீராடி பகவானை வழிபட வேண்டும். மேலும் ஆடை, வெல்லம், எள், அரிசி மற்றும் பொன் ஆகியவற்றை அந்தணர்களுக்குத் தானமாக வழங்க வேண்டும். இந்த மாதத்தில் மதுசூதனனை பக்திப்பரவசத்துடன் வழிபடுபவர்களுக்கு, ஒரு முழு ஆண்டு முழுவதும் பகவானை வழிபட்டதற்கான புண்ணிய பலன் கிட்டும் என்பது ஐதீகம். ஜலதாரை வழிபாடு கேசவ விரதத்தின் போது, சிறிய துளைகளிடப்பட்ட ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதனைத் துளசிச் செடி மற்றும் சாலக்கிராமத் திருமேனியின் மீது ஜலதாரையாக (நீர் சொட்டுமாறு) அமைக்கலாம்.  கோடைக் காலம் நிலவுவதால், கடும் வெப்பத்திலிருந்து குளிர்ச்...

துளசி இலையின் மகிமை: பக்தியால் பகவான் அடையப்படும் வழி

பக்தி மார்க்கத்தின் ஆழமான உண்மை என்னவென்றால் — பகவானை அடையப் பெரும் யாகங்கள், பெரும் தானங்கள் தேவையில்லை; ஒரு துளசி இலையும் ஒரு துளி நீரும், உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அவை அவரை அளவில்லாமல் திருப்திப்படுத்தும். “துலஸீ-தல-மாத்ரேண ஜலஸ்ய சுலுகேன வா…” என்று தொடங்கும் இந்த ஸ்லோகம் கௌதமீய தந்திர நூலிலிருந்து வந்தது. இதில், பக்தர்களிடம் அளவற்ற பாசம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , துளசி இலைக்கும் சிறிதளவு நீருக்கும் தம்மையே அர்ப்பணிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்லோகத்தை ஆழமாக சிந்தித்த ஆச்சாரியர், “இவ்வளவு சிறிய அர்ப்பணிப்புக்கும் கடன் பட்டவனாக இருப்பதாக பகவான் நினைக்கிறார்” என்பதை உணர்ந்தார். அந்த உணர்வின் பேரில், அவர் துளசி இலையும் கங்கை நீரையும் தொடர்ந்து சமர்ப்பித்து, பரமபுருஷனான கிருஷ்ணரை இவ்வுலகில் அவதரிக்க அழைத்தார். இந்த நிகழ்வுகள் நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகின்றன — பகவானை அடைய பொருள் தேவையில்லை; பக்தி, உண்மை, அன்பு மட்டுமே போதும். பக்தனின் இதயத்திலிருந்து எழும் சுத்தமான அர்ப்பணிப்பால், அனந்தமான பகவானும் அவன் பாசத்தில்  வசப்படுகிறார் ஸ்ரீ சைதன்ய சரி...

துளசி மஹாத்மியம்

  துளசி  மஹாத்மியம் ( கர்க சம்ஹிதை / அத்தியாயம் 16 /  வ்ருந்தாவன கண்டம் / துளசி பூஜை ) ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'அரசே!', ஸ்ரீ ராதாவின் பேச்சைக் கேட்டு தோழிகளில் சிறந்தவளான சந்திரானனா தன் இதயத்துள் ஒருகணம் யோசித்து பின் பின்வருமாறு பதில் கூறினாள்.' சந்திரானனா கூறினாள்: 'ராதே! சிறந்த சௌபாக்யமளிப்பதும், மிகுந்த புண்ணியத்தைத் தருவதும் ஸ்ரீகிருஷ்ணனையே அளிக்கக்கூடிய வரம் தருவதுமான விரதம் துளசிக்கு சேவை செய்வதாகும். என் கருத்தின்படி துளசி சேவையையே நீ நியமமாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் துளசியை ஸ்பரிசிப்பதோ, தியானம் செய்வதோ நாம கீர்த்தனம், துதி செய்வதோ, செடியை நட்டு, நீரூற்றி துளசி தளத்தாலேயே தினமும் பூஜை செய்யப்பட்டால் அது பெரிய புண்ணியத்தை அளிப்பதாகிறது. சுபே!, தினந்தோறும் துளசியிடம் ஒன்பது வகையான பக்தி செய்பவர்கள் கோடி ஆயிரம் யுகங்கள் தனது அந்த நற்செயலின் உத்தமமான பலனை அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் நட்ட துளசி, கிளை, சிறு கிளை,விதை, மலர் மற்றும் அழகிய இலைகளோடு பூமியில் வளர்ந்து கொண்டிருக்கும்வரை அவர்களது வம்சத்தில் பிறவியெடுப்பவர்கள் அனைவரும் நட்ட மனிதனோடு கூட இரண்டாயிரம் கல்பங்கள...

துளசி மாலை அணிவதன் பலன்கள்

  ஸ்ரீல ஸனாதன கோஸ்வாமியால் எழுதப்பட்ட ஹரி பக்தி விலாஸாவில் (ஹபவி) துளசி மாலை அணிவதால் உண்டாகும் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில . கருட புராணத்தின்படி, துளசி மாலை அணிபவர்களிடம் எப்போதும் ஸ்ரீ ஹரி இருக்கிறார் (ஹபவி 4.3353) எம ராஜன் அவர்களை நெருங்குவதில்லை (ஹபவி 4.3375) கெட்ட கனவுகள், விபத்துகள், ஆயுத தாக்குதல் மற்றும் யமதூதர்களிடமிருந்து, துளசி மாலை பாதுகாப்பு அளிக்கிறது (ஹபவி 4 .338). யார் வேண்டுமானாலும் துளசி மாலை அணியலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது. பத்ம புராணத்தின்படி, சுத்தமான நிலை அல்லது அசுத்தமான நிலை ஆகிய எந்த நிலையிலிருந்தாலும், ஒருவர் துளசி மாலையை எப்போதும் அணிந்திருக்கவேண்டும். விஷ்ணு தாமோதரத்தில், கிருஷ்ணர் சொல்லுகிறார், "துளசி மாலையை அணிந்திருக்கும் ஒருவர், சுத்தமில்லாமல் தவறான பழக்கங்களையுடையவராக இருந்தாலும், அவர் எந்த சந்தேகமுமில்லாமல் கண்டிப்பாக என்னை வந்தடைகிறார்" (ஹபவி 4. 322). இதன் பொருள், *துளசி பரிசுத்தமானதாகையால். அதனை பக்தியுடன் அணிபவர்களை பரிசுத்தப்படுத்துகிறது.* யார் வேண்டுமானாலும் துளசி மாலை அணியலாம் என்றாலும், துளசி மாலை அணிபவர்கள் மது அரு...