Skip to main content

Posts

Showing posts with the label Varnashrama /வர்ணாசிரமம் (Articles)

பகவத் பக்தியும் ஸ்திரீ புருஷ தர்மங்களும்

  1972-ஆம் ஆண்டு நியூ விருந்தாவனில் நடைபெற்ற நியூயார்க் டைம்ஸ் உடனான நேர்காணலின் ஒரு பகுதி ஜான் நார்ட்ஹைமர்: கிருஷ்ண உணர்வில் பெண்களின் பங்களிப்பு என்ன? ஸ்ரீல  பிரபுபாதர்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாகுபாடு ஏதுமில்லை. ஜான் நார்ட்ஹைமர்: பெண்களுக்கென்று இயல்பான சில சுபாவங்கள்  இருப்பதாகவும், அவை ஆண்களின் சுபாவங்களிலிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டுவதாகவும் நான் தொடர்ந்து கேள்விப்படுகிறேனே. ஸ்ரீல  பிரபுபாதர்: ஆம், கணவனாக வேண்டியது ஒரு ஆணின் கடமை, மனைவியாக வேண்டியது ஒரு பெண்ணின் கடமை; எனவே, இந்தச் சுபாவங்கள் அங்கே இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் சரிசெய்ய முடியும். என்னிடம் சீடர்கள் பலர் உள்ளனர், நான் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், அவர்கள் அமைதியாக வாழ்ந்து கிருஷ்ண உணர்வில் முன்னேறி வருகின்றனர். அனைவரும் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. எங்களிடம் பல கிருஹஸ்தர்களும் (இல்லறத்தார்கள்) குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறாக, ஒரு பெண்ணின் சுபாவங்களும் ஓர் ஆணின் சுபாவங்களும் நெறிப்படுத்தப்படுகின்றன. ஒரு ஆணுக்குப் பெண் தேவைப்படுகிறாள், ஒரு பெண்ணுக்...