சீதாதேவியின் தந்தையான ஜனக மஹாராஜா , பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் மிகுந்த பக்தரும் ஆவார் . ஸ்ரீமத் பகவதம் - இல் அவர் தர்மத்தை நிலைநாட்டிய பன்னிரண்டு மகாஜனர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார் . அவருடைய கருணையும் , பக்தியும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சம்பவம் பத்ம புராணத்தில் ( பாதாளகண்டம் ) விவரிக்கப்படுகிறது . ஒருநாள் , அனந்த சேஷன் ஜனக மஹாராஜா நரகத்தில் சென்ற நிகழ்வைப் பற்றி கூறினார் . தெய் வீக வைகுண்ட பயணம் இடைவிடாத யோக சாதனையின் பின் ஜனக மஹாராஜா தனது உடலைத் துறந்தார் . அப்பொழுது மணி ஒலிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தெய்வீக விமானம் இறங்கி வந்தது . அவர் அதில் ஏறிச் சென்றார் . அந்த விமானம் யமராஜாவின் உலகத்திற்கருகே சென்றபோது , அங்குள்ள பாவிகள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆச்சரியம் என்னவெனில் – ஜனக மஹாராஜாவைத் தொட்ட காற்று அந்தப் பாவிகளை எட்டியவுடன் , அவர்கள் துன்பம் மறந்து பேரின்பத்தை அனுபவித்தனர் . அந்தப் பாவிகள் கண்ணீர் மல்க , " அரசே ! எங்களை விட்டுச் செல்ல...