Skip to main content

Posts

“கிருஷ்ணனை நினைக்கும் இரு வழிகள் — பக்தியின் வழி, பகையின் வழி.”

  பகவத்கீதையில் (4.10) பகவான் கூறுகிறார்: வீத–ராக–பய–க்ரோதா மன் மயா மாம் உபாஷ்ரிதா: பஹவோ க்ஞான–தபஸா பூதா மத்–பாவம் ஆகதா: “பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக ஆழ்ந்து, என்னிடம் சரணடைந்து, என்னைப் பற்றிய அறிவால் பலர் இதற்கு முன்பு தூய்மையடைந்துள்ளனர். இவ்விதமாக, அவர்களனைவரும் என்னிடம் உன்னத பிரேமையுடைவராயினர்.” இரு வழிகளில் கிருஷ்ணரை இடையறாது நினைக்க முடியும். ஒன்று, ஒரு பக்தனாக மற்றது, ஒரு பகைவனாக. ஒரு பக்தன் அவனுடைய அறிவினாலும், தவத்தினாலும், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு ஒரு தூய பக்தனாகிறான். அவ்வாறே ஓர் எதிரியும் கிருஷ்ணரைப் பற்றிய பகை உணர்ச்சியுடன் நினைத்த போதிலும், அவரையே இடையறாது நினைத்துத் தூய்மையடைகிறான். இது பகவத் கீதையில் (9.30) பகவானால் பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது: அபி சேத் சதுராசாரோ பஜந்தே மாம் அனன்ய - பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: “ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பானாயின், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் தக்க முறையில் நிலைபெற்றுள்ளான...

பக்தி - முக்தியை விடச் சிறந்தது

  பக்தி - முக்தியை விடச் சிறந்தது முக்திக்கான தனி முயற்சி தேவையில்லை: ஒரு பக்தர் முக்தி அல்லது விடுதலையை அடையத் தனியாகப் பெருமுயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர் பரம புருஷ பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டே தானாகவே முக்தியை அடைவதற்கான வழியாகிறது. வயிற்றில் உள்ள நெருப்பு உதாரணம்: ஜீரணிக்கும் சக்தி போதுமான அளவு இருந்தால், நாம் உண்ணும் எதுவும் ஜீரணமாகிவிடும். அதுபோல, உண்மையான பக்தி இருந்தால், விடுதலை தானாகவே கைகூடும். ஸ்ரீ பில்வமங்கள தாகூரின் கூற்று: பக்தியுடன் பகவானின் தாமரைப் பாதங்களை வழிபடும்போது, முக்தி அல்லது விடுதலை, ஒரு பணியாளராக வந்து பக்தருக்குத் தொண்டு புரியும் என்று அவர் கூறுகிறார். முக்தி பக்தரின் பணிக்குக் காத்திருக்கிறது. புலன் கட்டுப்பாடு (யோக சித்தி): மாயாவாதிகள் முக்தி அடையக் கடுமையான தவம் மேற்கொள்கின்றனர். பக்தர்கள், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் தங்கள் நாவைக் கட்டுப்படுத்துகிறார்கள். சுவையுணர்வு கட்டுப்படுத்தப்பட்டவுடன், பிற எல்லாப் புலன்களும் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ...

பக்தியால் முக்தி பெற்ற மான் : ஒரு தெய்வீகக் கதை

  பக்தியால் முக்தி பெற்ற மான்: ஒரு தெய்வீகக் கதை 🌟 ஒரு காலத்தில், புன்ய நதிக்கரை அருகே, தெய்வீகமான வனமொன்று அமைந்திருந்தது. அங்கே, மிகவும் சாந்த குணமுடைய ஒரு மான் வாழ்ந்து வந்தது. இந்த மான் மற்ற சாதாரண மான்களைப் போல இல்லாமல், அருகிலிருந்த முனிவர்களின் ஆசிரமத்தின் ஆன்மீகச் சூழலால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தது. பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் மீது பக்தி தினமும் அதிகாலையில், முனிவர்கள் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் திருநாமங்களையும் வேத மந்திரங்களையும் ஓதுவதை மான் மிகுந்த கவனத்துடன் கேட்கும். அந்தத் தெய்வீக ஒலிகளின் பலனாக நாளடைவில் விஷ்ணுவின் நாமத்தின் மீது மாபெரும் ஈர்ப்பு ஈர்ப்பு  ஏற்பட்டது, அது மெல்ல மெல்ல வளர்ந்தது. பகவான் ஶ்ரீமன் நாராயணனின் ரூபங்களும் லீலைகளும் அதன் மனதிற்குள் ஆழமாகப் பதிந்தன. மானின் அமைதியான மற்றும் சாந்தமான நடத்தையைக் கண்ட முனிவர்கள், அதனை அங்கேயே, பாதுகாப்பாக இருக்க அனுமதித்தனர். அருகில் இருந்த ஆலயத்தின் மணியோசை கேட்கும் போதும், தீபாராதனை காட்டப்படும் போதும், அந்த மான் மிகுந்த மரியாதையுடன் தலை வணங்கியது. அது மற்ற விலங்குகளைப் போல் பிரசாதத்திற்காக ஒருபோதும் ஆவலுடன் நிற்கவ...

யஜ்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர வோகோ அரயம் கர்ம - பந்தன; முழுமுதற் கடவுளுக்குத் திருப்தியளிப்பதற்காகவே நாம் செயல் செய்ய வேண்டும்.

  ஒரு வேள்விச் சடங்கானது முழுமுதற் கடவுளை மகிழ்விப்பதற்கென்றே செய்யப்படுகிறது. ஸ்ரீமத் - பாகவதம் முதல்காண்டம் இரண்டாம் அத்தியாயம் ஒவ்வொருவரும் தமது செயலினால் முழுமுதற் கடவுள் திருப்தியுற்றிருக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதாவது நமது செயலின் நோக்கம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கானதாகவே இருத்தல் வேண்டும். எவ்வாறு ஒரு பணியாளன் தன் அலுவலகத்தில் தனது முதலாளி அல்லது உயர் அதிகாரி திருப்தியடைந்திருக்கிறாரா என்று கவனிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறானோ அதுபோல் முழுமுதற் கடவுள் தனது செயலினால் திருப்தியுற்றிருக்கிறாரா என்று பார்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கான செயல்கள் எவையென்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அச்செயல்களின் நிறைவேற்றமே வேள்வி அல்லது யக்ஞம் என்றழைக்கப்படுகிறது. வேறொரு முறையில் முழுமுதற் கடவுளின் சார்பாகச் செயல்படுவதே வேள்வியாகும் என்றும் கூறலாம். வேள்வியினைத் தவிர வேறெச் செயலும் உலகப் பிடிப்பிற்குக் காரணமாகும் என்பதை ஒருவன் மிக நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். பகவத்கீதையிலும் (3.9) ...