யன் மர்த்ய-லீலௌபயிகம் ஸ்வ-யோக- மாயா-பலம் தர்சயதா க்ருஹீதம் விஸ்மாபனம் ஸ்வஸ்ய ச ஸௌபகர்த்தே: பரம் பதம் பூஷண-பூஷணாங்கம் மொழிபெயர்ப்பு பகவான் தமது அந்தரங்கச் சக்தியான யோகமாயையினால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவர் தமது லீலைகளுக்குப் பொருத்தமான நித்திய ரூபத்துடன் வருகிறார். வைகுண்ட நாதராகத் தமது நித்திய ரூபத்திலுள்ள பகவான் உட்பட, தங்களுடைய சொந்த ஐசுவரியத்தில் செருக்குடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. இவ்வாறாக, அவரது (ஸ்ரீ கிருஷ்ணரின்) உன்னதமான உடல் அணிகலன்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்குகிறது. பொருளுரை வேத மந்திரங்களில் ( நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ) உறுதி செய்யப்பட்டுள்ளதுபோல், எல்லா பிரபஞ்சங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட பரமபுருஷர் தலைசிறந்தவராவார். அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைமையானவர்; செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு மற்றும் துறவு ஆகிய ஐசுவரியங்களில் அவருக்கு இணையானவர்களோ அல்லது அவரை விட உயர்ந்தவர்களோ ஒருவரும் இல்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பிரபஞ்சத்தில் அவதரித்திருந்த பொழுது, ஜடவுலக லீலைகளுக்குச் சற்றே ப...