Skip to main content

Posts

Showing posts with the label Madhavan Maanbugal / மாதவன் மாண்புகள் (articles)

ஸர்வஜ்ஞன் / மாதவன் மாண்புகள் (பகுதி 1)

மாதவன் மாண்புகள் (பகுதி 1) ஸர்வஜ்ஞன் ஶ்ரீ கிருஷ்ணர் அனைத்தையும் அறியும் பேராற்றல் கொண்டவர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 நமஸ் தஸ்மை பகவதே க்ருஷ்ணாயாகுண்ட- மேதஸே  ஸ்வ-யோகமாயயாச்சன்ன-மஹிம்னே பரமாத்மனே மொழிபெயர்ப்பு பரமபுருஷரும், எல்லையற்ற அறிவு படைத்த பரமாத்மாவும், தமது யோக-மாயையால் தமது மகிமையை மறைத்துக் கொண்டுள்ளவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நமது பணிவான வணக்கங்கள். பொருளுரை பரமபுருஷரை வழிபடுவதால் அடையப்போகும் எதிர்கால இலாபம் ஒருபுறமிருக்க, தான் பகவானின் ஆதரவில் இருப்பதையும், தான் அவரது அடிமை என்பதையும் ஏற்றுக்கொள்ள்ளும் வகையில், ஒவ்வொருவரும் பகவானை வணங்க வேண்டியது மிகவும் முக்கியமான கடமையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு சிபாரிசு செய்கிறார்: மன்-மனா பவ மத்-பக்தோ யத்-யாஜீ மாம் நமஸ்குரு  மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மானம் மத்-பராயண: “உன் மனதை எப்பொழுதும் என்னைச் சிந்திப்பதிலேயே ஈடுபடுத்தி, என்னுடைய பக்தனாகி, என்னை வணங்கி வழிபடுவாயாக, என்னில் ஆழமாக ஈடுபட்டு, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.” (பகவத் கீதை 9.34) (ஸ்ரீமத் பாகவதம் 10.84.22) ஸ்லோகத்தின் முக்கிய குறிப்புகள்: ...