ஒரு சாதுவின் முதன்மைப் பண்புகள் மயிஅனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம் மத் க்ருதே த்யக்தகர்மாணஸ் த்யக்த ஸ்வஜன பாந்தவா : மொழிபெயர்ப்பு அம்மாதிரி ஸாது விலகிச் செல்லாமல் பகவானிடம் கடும் உறுதியுடன் கூடிய பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார் . பகவானுக்காக அவர் உலகத்தில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் போன்ற பிற தொடர்புகளை ஒதுக்கி விடுகிறார் . பொருளுரை துறவு வாழ்வில் இருப்பவர் , ஸந்யாஸி , ஸாது என்றும் அழைக்கப்படுகிறார் . ஏனென்றால் , அவர் எல்லாவற்றையும் தன் வீடு , தன் வசதி , தன் நண்பர்கள் , தன் உறவினர்கள் மற்றும் தன் நண்பர்கள் , குடும்பத்திற்கான தனது கடமைகள் , இவற்றைத் துறக்கிறார் . அவர் பரம புருஷ பகவானின் பொருட்டு இவற்றைத் துறக்கிறார் . சந்நியாசி பொதுவாக வாழ்வின் துறவு நெறியில் இருப்பவர் . ஆனால் அவர் துறவு அவரது ஆற்றல் , சிறந்த தவத்துடன் பகவானின் தொண்டில் செயல்பட்டால் மட்டுமே வெற்றியடையும் . அதனால் பக்திம் குர்வந்தி யே த்ருடாம் என்று இங்கு கூறப்படுகிறது . ஸாது என்பவர் பகவானின் ...