Skip to main content

அசுரத் தோழர்களுக்குபிரகலாதரின் உபதேசம்

 


அசுரத் தோழர்களுக்குப் பிரகலாதரின் உபதேசம்

பிரகலாதர் தமது பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பிரகலாதர், அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும்பொழுது, ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக மனிதர்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஆத்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே, அவர்களுக்குப் பரமபுருஷர் ஒருவரே அனைவராலும் வழிபடத்தக்க மூர்த்தி என்பது கற்பிக்கப்பட வேண்டும்.

பௌதிக சுகத்தில் ஒருவன் அதிக நாட்டம் கொள்ளக் கூடாது; மாறாக, சுலபமாக அடையப்படக்கூடிய பௌதிக விஷயங்களைக் கொண்டு ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவனது ஆயுள் மிகவும் குறுகியதாக உள்ளதால், அவன் ஒவ்வொரு நொடியையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே செலவிட வேண்டும். “இளமையில் பௌதிக சுகபோகங்களை அனுபவிப்போம், முதுமையில் கிருஷ்ண பக்தியில் ஈடுபடலாம்” என்று ஒருவன் தவறாக நினைக்கக் கூடும். இத்தகைய பௌதிகமான சிந்தனையால் பயனில்லை. ஏனெனில், வயதான பருவத்தில் ஒருவனை ஆன்மீக வழிமுறையில் பயிற்றுவிக்க முடியாது.

ஆகவே, வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஒருவன் பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும் (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:). இதுவே ஜீவராசிகளின் கடமையாகும். பௌதிகக் கல்வியானது இயற்கையின் முக்குணங்களால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மனித சமுதாயத்தில் மிகவும் தேவையாக உள்ள ஆன்மீகக் கல்வி உன்னதமானதாகும். நாரத முனிவரிடமிருந்து தான் உபதேசம் பெற்ற இரகசியத்தைப் பிரகலாத மகாராஜன் வெளிப்படுத்தினார். சீடப் பரம்பரையில் இடம் பெற்றுள்ள பிரகலாத மகாராஜனின் தாமரைப் பாதங்களை ஏற்றுக்கொள்வதன் மூலமாக, ஆன்மீக வாழ்வின் சரியான மார்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய செயல்முறையை ஏற்றுக்கொள்வதற்கு பௌதிகத் தகுதிமுறைகள் தேவையில்லை.

பிரகலாத மகாராஜன் கூறியதைக் கேட்ட அவரது நெருங்கிய நண்பர்கள், அவர் எவ்வாறு இந்த அளவிற்குத் கற்றறிந்தவராகவும், உயர்ந்தவராகவும் ஆனார் என்று வினவினர். இவ்விதமாக இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.





கர்ப்பத்தில் பிரகலாதர் கற்றது

இரண்யகசிபு தன் ராஜ்யத்தை விட்டுவிட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றபொழுது, எல்லா அசுரர்களும் இங்குமங்குமாக ஓடி ஒளிந்தனர். அப்பொழுது இரண்யகசிபுவின் மனைவியான கயாது கர்ப்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமொரு அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று தவறாக எண்ணிய தேவர்கள் அவளைச் சிறைப்பிடித்தனர். குழந்தை பிறந்த உடனேயே அதைக் கொன்றுவிட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம்.

அவர்கள் கயாதுவைச் சுவர்க்க லோகங்களுக்கு அழைத்துச் செல்லும்பொழுது, வழியில் அவர்களைச் சந்தித்த நாரத முனிவர், அவர்களைத் தடுத்து நிறுத்தி, இரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைத் தமது ஆசிரமத்தில் வைத்திருக்கத் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆசிரமத்தை அடைந்த கயாது, கர்ப்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டினாள். நாரதரும் குழந்தையைக் காப்பதாக உறுதியளித்துவிட்டு, அவளுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். பிரகலாத மகாராஜன் சிறு குழந்தையாகக் கர்ப்பத்தினுள் இருந்த போதிலும், நாரதரின் அவ்வுபதேசங்களைக் கேட்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

ஆன்மீகமான ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டதாகும். ஜீவராசியின் ஆன்மீக ரூபத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. தேகாபிமானத்திற்கு மேற்பட்ட ஒருவன் பரிசுத்தனும், ஆன்மீக அறிவைப் பெறும் தகுதியுடையவனுமாவான். ஆன்மீக அறிவு எனப்படும் இது பக்தித் தொண்டாகும். இவ்வாறாகக் கர்ப்பத்தில் இருந்த பிரகலாத மகாராஜன், நாரத முனிவரிடமிருந்து பக்தித் தொண்டைப் பற்றிய உபதேசத்தைப் பெற்றார்.

உண்மையான ஓர் ஆன்மீக குருவிடம் உபதேசங்களைப் பெற்றுப் பகவானின் சேவையில் ஈடுபடும் ஒருவன், மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு, அறியாமையும், பௌதிக ஆசைகளும் அகலப் பெற்றவனாய் உடனேயே முக்தியை அடைகிறான். பரமபுருஷரிடம் தஞ்சமடைந்து எல்லா பௌதிக ஆசைகளிலிருந்து விடுபடுவதே ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். எத்தகைய பௌதிக நிலையில் இருப்பவனாலும் இந்த பூரணத்துவத்தை அடைய முடியும். பக்தித் தொண்டானது, பௌதிக செயல்களான தவம், விரதம், அஷ்டாங்க யோகம், மதச் சார்பு ஆகியவற்றைச் சார்ந்ததல்ல. இவற்றில் எதுவுமே இல்லையென்றாலும், ஒரு தூய பக்தரின் கருணையினால் ஒருவன் பக்தித் தொண்டைப் பெற முடியும்.




தொடரும்...

நாளை: பகவான் நரசிம்மர் அசுர ராஜனை வதம் செய்தல்.

 

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...