Skip to main content

Posts

Showing posts with the label Attachment / பற்றுதல் (Articles)

கிருஷ்ண உணர்வு நிலைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாததற்கு காரணம் என்ன?

  பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந்து கொள்வதற்கான கற...

மரணத்தை வெல்லும் அறிவு

மரணத்தறுவாயில் ஒவ்வொரு உயிரும் தன் மனைவி , மக்களுக்கு என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான் . அதுபோல் ஓர் அரசியல்வாதி நாட்டுக்கும் , தன் கட்சிக்கும் என்ன நேருமோ என்று கவலைப்படுகிறான் . ஒருவன் முழுதும் கிருஷ்ண உணர்வு பெறவில்லையென்றால் , அவன் எந்த உணர்வு நிலையில் இறக்கிறானோ அதற்கேற்ப மறுபிறவியில் உடலைப் பெறுகிறான் . மன்னர் புரஞ்ஜனன் முற்றிலும் தம் மனைவி மக்களின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் . எனவே அவர் ஒரு பெண்ணின் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது . அதுபோல் தான் பிறந்த நாட்டின் மீது அதிகப் பற்றுடைய அரசியல்வாதி தன் வாழ்வு முடிந்தபிறகு மீண்டும் அநித நாட்டிலேயே பிறக்கிறான் . இம்மையில் ஒருவன் செய்யும் செயல்களின் விளைவு மறுமையிலும் அவனைப் பாதிக்கிறது . சிலநேரங்களில் அரசியல்வாதிகள் தங்கள் புலனுகர்ச்சிக்காக கொடிய பாவங்களைச் செய்கின்றனர் . எதிர்க்கட்டிசியை அழிப்பது ஒரு அரசியல்வாதிக்கு அசாதாரணமன்று . ஒரு அரசியல்வாதி அவனது தாய் நாட்டிலேயே மீண்டும் பிறந்தால் கூட அவன்தன் முந்தைய வாழ்வில் செய்த பாவங்களின் பலன்களை அனுப...