Skip to main content

Posts

Showing posts with the label Yoga / யோகா(Articles)

பக்தித் தொண்டின் உன்னதம்

  யமாதிபிர் யோக-பதை: காம-லோப-ஹதோ முஹு: முகுந்த-ஸேவயா யத்வத் ததாத்மாத்த ந ஸாம்யதி மொழிபெயர்ப்பு   யோக முறையைக் கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல. ஏனெனில் இது (திருப்தி) பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும்.   பொருளுரை யோகம் புலன்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமர்தல், சிந்தித்தல், உணர்தல், விரும்புதல், மனதைக் குவித்தல், தியானம் செய்தல், இறுதியாக தெய்வீகத்தில் ஐக்கியமாகி விடுதல் ஆகிய தேகாப்பியாசங்களைக் கொண்ட யோக முறையைப் பயில்வதால், புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். புலன்கள் விஷமுள்ள பாம்புகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை அடக்குவதற்காகவே யோக முறை உள்ளது. மாறாக புலன்களை அடக்கும் மற்றொரு முறையை நாரதர் சிபாரிசு செய்கிறார். இது பரம புருஷ பகவானாகிய முகுந்தனின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடும் முறையாகும். புலன்களை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதைவிட பகவானின் பக்தித் தொண்டு முறை நடைமு...

தவத்தாலும், துறவினாலும் மனிதன் கடவுளாக முடியுமா ?

  முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மனித அல்லது மிருக உருவங்களை சில சமயங்களில் ஏற்கிறார் . ஆனால் அவர்களின் இயல்புகளை அவர் ஒருபோதும் ஏற்பதேயில்லை . தவத்தினாலும் , துறவினாலும் மனிதன் கடவுளாகலாம் என்ற தத்துவம் குறிப்பாக இந்தியாவில் இன்று அதிகரித்துள்ளது . பகவான் ஸ்ரீ ராமர் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆகியோர் பகவான்களே என்று வேத நூல்களில் கூறப்பட்டுள்ளதை முனிவர்களும் , ரிஷிகளும் அறிந்துள்ளனர் . இதனால் யோக்கியமற்ற பல மனிதர்களும் தங்களது சொந்த அவதாரங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர் . இவ்வாறு கடவுளின் ஓர் அவதாரத்தை உண்டுபண்ணும் இம்முறை , குறிப்பாக வங்காளத்தில் சாதாரண தொழிலாகியிருக்கிறது . பிரபலமான எந்தவொரு மனிதரும் , யோக சக்திகளால் சில மாயாஜால வித்தைகளை செய்து காட்டும் போது , மக்கள் அவரை பரம புருஷரின் ஓர் அவதாரமாக எண்ணுகின்றனர் . ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வகையைச் சேர்ந்த ஓர் அவதாரமல்ல . அவர் உண்மையான பரம புருஷராக இருந்தார் . அவர் தமது தாயார் முன் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவாகத் தோன...