பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம் 1 - 18 அத்தியாயம் 1 பதம் 1 த்ருத்ராஷ்ர உவாச தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே சமவேதா யுயுத்ஸவ : மாமகா : பாண்டவஸ் ச திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்? அத்தியாயம் 2 பதம் 7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி த்வாம் தர்ம - ஸம்மூட – சேதா : யச் ச்ரேய : ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே ஷிஷ்யஸ் தே ( அ ) ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...