Skip to main content

Posts

Showing posts with the label Prabhupada Q & A /ஶ்ரீல பிரபுபாதர் கேள்வி பதில்கள் (Articles)

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்

   மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பத்திரிகையாளர்களுடன் நிகழ்ந்த கீழ்க்காணும் உரையாடலில், உலகிலுள்ள பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம் காரணமல்ல என்றும், மேற்கத்திய பண்பாடுதான் காரணம் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: தற்சமயத்தில் மேற்கத்திய பண்பாட்டைப் பின்பற்றுவதால் இந்தியா பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. விருந்தினர்: அப்படியெனில், மக்கள் தொகை பெருக்கத்தால் பிரச்சனைகள் ஏதும் உண்டாவதில்லையா? ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் தொகை பெருக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த எண்ணம் முட்டாள்தனமானது. விருந்தினர்: முட்டாள்தனமானதா! ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது. கடவுளே அனைவருக்கும் தந்தை என்பது நாம் ...