Skip to main content

Posts

Showing posts with the label Vandanam / பிரார்த்தனை (வந்தனம்) (Articles)

எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகும்

  பத்ம புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் தஸ்மாத் பாதரம் தேவி ததீயானாம் ஸமர்சனம் “எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகு ம் . பகவான் விஷ்ணுவின் வழிபாட்டை விடச் சிறந்தது அவரது பக்தர்களான, வைஷ்ணவர்களை வழிபடுவதாகும்.” பௌதிக ஆசைகளில் பற்றுக் கொண்டவர்களால் வழிபடப்படும் தேவர்கள் பலர் உள்ளனர் (காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத - ஞானா: ப்ரபத்யந்தே ‘ன்ய - தேவதா:) மக்கள் பலவிதமான பௌதிக ஆசைகளால் சங்கடத்திற்கு ஆளாகும் போது, அவர்கள் வெவ்வேறு பலன்களை அடைவதற்காக சிவபெருமான், பிரம்ம தேவர், காளி, துர்கா, கணேஷர் மற்றும் சூரியன் ஆகியோரை வழிபடுகின்றனர். ஆயினும், பகவான் விஷ்ணுவை வழிபடுவதாலேயே ஒருவரால் இப்பலன்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் அடைந்து விட முடியும். பாகவதத்தில் (4.31.14) குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல்: யதா தரோர் மூல - நிஷேசனேன த்ருப்யந்தி தத் - ஸ்கந்த - புஜோபசாகா: ப்ராணோபஹாராச் ச யதேந்ரியாணாம் ததைவ ஸர்வார்ஹணம் அச்யுதேஜ்யா “ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதாலேயே, அதன் அடிமரம், இலைகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை ஒருவர் வ...

எல்லா நேரத்திலும் என்னை நிணைத்து வழிபடலாம்

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச மய்-யர்பித- மனோ புத்திர் மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷய: மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 எனவே, அர்ஜுனா,  என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அர்ஜுனனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரை, பௌதிகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் மிக முக்கியமானதாகும். விதிக்கப்பட்ட கடமையையும் தொழிலையும் விட்டுவிடும்படி கடவுள் கூறவில்லை. அவற்றை தொடர்ந்து செய்து கொண்டே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் கிருஷ்ணரை நினைக்க முடியும். இஃது ஒருவனை பௌதிகக் களங்கங்களிலிருந்து தூய்மைப்படுத்தி, அவனது மனதையும் புத்தியையும் கிருஷ்ணரில் ஈடுபடுத்தும். கிருஷ்ணரின் திருநாம உச்சாடனத்தின் மூலம், உன்னத லோகமான கிருஷ்ண லோகத்திற்கு ஒருவன் மாற்றப்படு. ஶ்ரீமத் பகவத்கீதை (உண்மையுருவில்) 8.7 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண...