Skip to main content

Posts

Showing posts with the label Sri Advaita Acharya / ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர் (Articles)

ஶ்ரீ அத்வைதாசாரியர்

சைதன்ய ஸம்ப்ரதாயத்தின் ப்ரதான ஸ்தம்பம் போன்றவரும், கௌர லீலைகளின் முதல் ப்ரவர்த்தகரும் ஆகிய அத்வைத ஆசார்யரியர் வயதினாலும், கல்வியினாலும், அறிவினாலும் முதியவராக இருந்த போதிலும், பாலகனான ஸ்ரீ மஹாப்ரபுவின் பாததூளியை சிரோபூஷணமாகக் கொண்டவர்.பகவான் ஶ்ரீ சைதன்ய மாஹாபிரபுவின் அவதாரத்துக்கு முன்னரே தோன்றி , கௌர லீலைகளுக்கு வழி வகுத்துத்தானும் பல லீலைகள் செய்து மகிழ்ந்தவர். இவரும் ஷில்ஹட் ஜில்லாவில் இருக்கும் நவக்ராமம் என்னும் நகரின் ஒரு சிறு கிராமவாசியே! அந்நாட்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அதில் லாவுட் என்னும் சிற்றரசை பரம தார்மீகமான ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ சபையில் அத்வைத ஆசார்யரின் தந்தை 'பண்டித குபேர தர்க்க பஞ்சானன்', ராஜ பண்டிதராக இருந்து வந்தார். தர்க்கபஞ்சானன் சிறந்த நியாயாதிபதி. அவர் புகழ் வாய்ந்த வித்வான். அத்துடன் நல்ல செல்வந்தர். குழந்தை இல்லாத குறையினால், அவரும் அவரது மனைவி லாபாதேவியும் மிகுந்த வருத்தமுற்று இருந்தனர் அவரகளுக்குப் பல குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. இதனால் அவர்கள் மிகவும் வருத்தமும் வேதனையடைந்தனர், நித்தமும் பாகவானிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க பக...

அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும்

  அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவானின் பக்தன் அல்லது ஒரு வைணவன் பகவானுக்கு அளிக்காமல் எதையுமே தொடுவதில்லை. ஒரு வைணவன் தனது செயல்கள் அனைத்தின் பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணித்திருப்பதினால் அவன் பகவானுக்கு முதலில் படைக்கப்படாத எந்தவொரு உணவையும் சுவைப்பதில்லை. பகவானும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை வைணவனின் வாய்க்கு அளித்து சுவைத்து மகிழ்கிறார். இச்சுலோகத்திலிருந்து பகவான் வேள்விக் குண்டத்தின் தீயின் மூலமும் அந்தணனின் வாயின் மூலமும் உண்கிறார் என்று தெளிவாகிறது. பல்வேறு விதமானப் பொருட்கள் தானியங்கள், நெய் போன்றவை பகவானின் திருப்திக்காக வேள்வித் தீயில் அர்ப்பணிக்ப்படுகின்றன. பகவான் வேள்வியின் நிவேதனங்களை அந்தணர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது போல் அந்தணர்க்கும் வைணவர்க்கும் உண்பதற்காக வழங்கப்படும் எதையும் பகவானும் கூட ஏற்றுக் கொள்கிறார். இங்கே அவர் அந்தணர் மற்றும் வைணவர்களின் வாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுபவற்றையே மிகுந்த சுவையுடன் ஏற்றுக் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்...