சிவனின் நாம பஜனம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, 'பக்தி ரசாமிர்த சிந்து' என்னும் நூலின் நாற்பத்தி மூன்றாம் அத்தியாயத்தில், கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் சிவபெருமானுக்கு இருக்கும் அளவற்ற ஈடுபாட்டைப் பின்வருமாறு விவரிக்கிறார்: மாமுனிவர் நாரதர் எம்பெருமானின் புகழைப் பாடிக்கொண்டிருந்தபோது, அதைக் கேட்டு மெய்மறந்த சிவபெருமானின் கழுத்தில் இருந்த நீல நிறக் கோடு மறைந்து போயிற்று. இதைக் கண்ட அவருடைய மனைவி கௌரி தேவி, தன் கணவருக்குப் பதில் வேறு யாரோ உருமாறி வந்திருப்பதாக ஐயமுற்று, அச்சத்தினால் உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றார். சிவபெருமானைத் திருமணம் புரியப் பணித்த கிருஷ்ணன் சிவபெருமான் கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர் என்பது மட்டுமல்லாமல், அதைத் தியானிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த உண்மை பல்வேறு வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிரம்ம வைவர்த்த புராணத்தில் (1.6.4-16) கிருஷ்ணருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடந்த உரையாடல் இவ்வாறு விவரிக்கப்படுகிறது: யோகிகளுள் சிறந்தவராகப் போற்றப்படும் சிவபெருமானை ஒருமுறை...