Skip to main content

Posts

Showing posts with the label Deity worship / விக்ரஹ வழிபாடு (Articles)

அனைத்தும் இறைவனைத் தவிர வேறில்லை என்றால் ஏன் அவரை பிரத்யேகமாக வணங்க வேண்டும்?

  அனைத்தும் பகவானாகவே இருப்பதால் , அவரை வழிபடுகதில் பயனில்லை என்று அருவவாதிகள் வாதிக்கின்றனர் . ஆனால் பகவானின் தேக உறுப்புக்களிலிருந்து பிறந்துள்ள பகுதிப் பொருட்களை உபயோகித்து , நன்றி உணர்வுடன் உருவவாதிகள் பகவானை வழிபடுகின்றனர் . பழங்களும் , பூக்களும் பூமித்தாயின் தேகத்திலிருந்து கிடைக்கின்றன . இருப்பினும் அறிவுள்ள பக்தன் பூமியிலிருந்து பிறந்த பொருட்களாலேயே பூமித்தாயை வழிபடுகிறான் . இதைப் போலவே , கங்கைத் தாய் கங்கை நீராலேயே வழிபாடு செய்யப்படுகிறாள் . இருப்பினும் அத்தகைய வழிபாட்டின் பலனை , வழிபடுபவன் அனுபவிக்கிறான் . பகவானின் உடலுறுப்புக்களிலிருந்து பிறந்த பொருட்களாலேயே அவரது வழிபாடும் நடத்தப்படுகிறது . இருப்பினும் பகவானின் ஒரு பாகமாக உள்ள வழிபாடு செய்பவன் , பகவானிடம் செய்யும் பக்தித் தொண்டின் பலனை அடைகிறான் . நானே பகவான் என்று அருவவாதி தப்பாக முடிவு செய்யும் வேளையில் , உருவவாதி , பகவானிலிருந்து எதுவுமே வேறானதல்ல என்பதைப் பூரணமாக உணர்ந்து , பக்தித் தொண்டால் பகவானை வழிபடுகிறான் . எனவே எதுவுமே தனக்குச் சொந்தமானதன...

நமது அர்ப்பணிப்பின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்

  கோவில் தெய்வ வழிபாட்டிற்காக அறுபத்து நான்கு விதிமுறைகள் உள்ளன . தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் பல பொருட்கள் உள்ளன . சில மதிப்பு மிகுந்தவை , சில குறைவான மதிப்புடையவை . “ ஒரு பக்தர் எனக்குச் சிறிய மலர் , இலை , சிறிது நீர் அல்லது சிறிய பழத்தை அர்ப்பணித்தால் , நான் அதை ஏற்றுக்கொள்வேன் ” என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது . உண்மையான நோக்கம் என்னவென்றால் பகவானிடம் ஒருவருக்குள்ள அன்பான பக்தியை வெளிப்படுத்துவதாகும் ; அர்ப்பணிக்கப்படுபவை இரண்டாமிடம் பெறுகின்றன . ஒருவர் பகவானிடம் அன்பான பக்தியை வளர்க்காமல் , பலவித உணவுப் பொட்கள் , பழங்கள் , மற்றும் மலர்களை உண்மையான பக்தியின்றி அளிப்பாரானால் அது பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது . நாம் பரம புருஷ பகவானுக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது . அவர் மிகவும் சிறந்தவராதலால் , நமது இலஞ்சத்திற்கு மதிப்பில்லை , அவருக்கு எந்தத் தட்டுப்பாடும் கிடையாது . அவர் அவரிடமே நிறைந்திருப்பதால் , நாம் அவருக்கு என்ன கொடுக்க முடியும் ? எல்லாம் அவரால் உருவாக்கப்படுகின்றன . நாம் பகவானிடம் நமது அ...

விக்ரஹ வழிபாடு

  மரம் கல் அல்லது வேறு பொருட்களிலிருந்து பகவானின் ரூபம் செதுக்கப்படும் போது அதில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் வீற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் யதார்த்தமாக யோசித்தால் கூட எல்லா பௌதிக மூலக்கூறுகளும் பகவானுடைய சக்தியின் விரிவுகளே என்பதை புரிந்துகொள்ள முடியும் பரம புருஷ பகவானின் சக்தியானது அவரது தனிப்பட்ட உடலிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால் பகவான் அவரது சக்தியில் எப்பொழுதும் விற்றுள்ளார் தமது பக்தனின் தீவிரமான விருப்பத்தின் அடிப்படையில் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார் பகவான் மிக உயர்ந்த சக்திகளை கொண்டுள்ளார் என்பதால் அவர் தம்மை தமது சக்திகளின் மூலமாக வெளிப்படுத்த இயலும் என்பது நியாயமானதாகும். விக்கிரக வழிபாடு அல்லது சாளக்ராம வழிபாடு என்பது சிலையை வழிபடுவது அன்று. தூய பக்தனின் இல்லத்திலுள்ள பகவானின் விக்ரஹத்தினால் அந்த தெய்வீகமான மூல புருஷர் எவ்வாறு செயல்படுவாரோ அதே போன்று செயல்பட முடியும். (பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்/ ஆதி லீலை 14.9) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ...

ஸ்ரீ அபராத சோதணா.

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஜனார்தனா யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் தத் அஸ்து மே ஓ கடவுளே ! ஓ ஜனார்தனரே! நான் முறையான பக்தி இல்லாமல், முறையான மந்திரங்கள் இல்லாமல், முறையான விதிமுறைகளை அனுஷ்டிக்காமல் செய்யும் சிறிய பூஜையையும் ஏற்று அதனை முழுமை அடையச் செய்வீராக யத் தத்தம் பக்தி மாத்ரேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம் ஆவேதிதம் நிவேத்யான் து தத் க்ருஹானானு கம்பயா நான் பக்தியோடு எதை அர்பணித்தாலும் – இலையோ, பூவோ, நீரோ, பழமோ - தையை கூர்ந்து அதை தங்கள் காரணமற்ற கருணையால் ஏற்று கொள்ள வேண்டும். விதி ஹீனம் மந்த்ர ஹீனம் யத் கின்சிட் உபபாதிதம் க்ரியா மந்த்ர விஹீனம் வா தத் சர்வம் க்ஷந்தும் அர்ஹஸி முறையான மந்திரங்கள் இல்லாமலும் முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும் நான் உங்களை வணங்கி இருந்தால் தையை கூர்ந்து தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். அஞ்ஞானாத் அதவா ஞானாத் அசுபம் யன் மயா க்ருதம் க்ஷ்ந்தும் அர்ஹஸி தத் சர்வம் தாஸ்ஏனைவ க்ரிஹான மம் ஸ்திதி சேவா கதிர் யாத்ரா ஸ்ம்ரிதிஷ் சிந்த ஸ்துதிர் வச பூயாத் சர்வாத்மனா விஷ்ணோ மைதீயம் த்வயி சேஸ்திதம் நான் எனது அறியாமையினாலோ அல்லது தெரியாமலோ ஏதேனும் அமங்கலமான செ...