Skip to main content

Posts

Showing posts with the label Spritual world / ஆன்மீக உலகம் (Articles)

ஆன்மீக உலகமே தனது நித்யமான வாசஸ்தலம் என்று அறியாத கட்டுண்ட ஜீவராசிகள்.

  பொதுவாக மக்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவது என்னும் தங்கள் வாழ்க்கை நலனை அறியாதிருக்கின்றனர். ஆன்மீக உலகிலுள்ள தங்கள் உண்மை வீட்டினைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆன்மீக உலகில் பல வைகுண்ட லோகங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்ததாக இருப்பது கிருஷ்ண லோகம் எனப்படும் கோலோக பிருந்தாவனமேயாகும். சமுதாயத்தின் முன்னேற்றம் அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு ஆன்மீக உலகிலுள்ள வைகுண்ட லோகத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இன்றைய தினம் நாகரீகத்தில் முன்னேறியிருப்பதாகச் சொல்லும் மனிதர்கள் பிறஉலகங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தாங்கள் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்த உலகமான பிரம்ம லோகத்திற்குச் சென்றாலும் கூட மீண்டும் இப்பூமிக்கு திரும்பி வேண்டியதிருக்கும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது. இதனை பகவத்கீதை (8.16) உறுதி செய்கின்றது: ஆப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன மாம் உபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே “குந்தியின் மகனே! உலகில் உயர்ந்த தேவலோகத்திலிருந்து தாழ்ந்தபாதாள லோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் பிறப்பு இறப்ப...

ஜட உடலிலிருந்து விடுபட்ட பிறகு, ஆன்மா எங்கே போகிறது?

  நி : ஸ்ரேயஸ என்றால் “ இறுதியாகச் சேரும் இடம் ” என்று பொருள் ஸ்வஸம்ஸ்தான என்றால் மாயாவாதிகளுக்குத் தங்குவதற்குக் குறிப்பிட்ட இடம் இல்லை என்று பொருள் . மாயாவாதிகள் தங்கள் தனித்தன்மையைத் தியாகம் செய்கின்றனர் . அதனால் வாழும் பொறி பகவானின் திவ்யமான உடலிலிருந்து வெளிப்படும் மாய ஒளியில் கலக்க முடியும் . ஆனால் பக்தருக்கென்று குறிப்பிட்ட இடம் உண்டு . கோள்கள் சூரியஒளியினை நம்பியுள்ளன , ஆனால் சூரியஒளிக்கு என்று குறிப்பிட்ட நம்பகமான இடம் கிடையாது . ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோளை அடையும் பொழுது , அவருக்குத் தங்கும் இடமுண்டு . கைவல்ய என்று அறியப்படும் ஆன்மீக வானம் எல்லாப் பக்கங்களிலும் இன்ப ஒளியாக , பரம புருஷ பகவானின் பாதுகாப்பின் கீழ் உள்ளது . பகவத் கீதையில் (14.27) குறிப்பிடப்பட்டுள்ளதுபோல , ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம் : மாயையாகிய பிரம்ம ஒளி பரம புருஷ பகவானின் உடலில் தங்கும் . அதாவது பரம புருஷ பகவானின் உடலொளியே கைவல்யம் அல்லது மாய பிரம்மன் . அந்த மாயா ஒளியில் வைகுந்தங்கள் எனப்படும் ஆன்மீகக் கோள்கள் உள்ளன , அதன் ...