தஸ்யாவலோகமதிகம் க்ருபயாதிகோர தாபத்ரயோபசமனாய நிஸ்ருஷ்டமக்ஷ்ணோ: ஸ்நிக்தஸ்மிதாநுகுணிதம் விபுலப்ரஸாதம் த்யாயேச்சிரம்விபுலபாவனயா குஹாயாம் மொழிபெயர்ப்பு யோகிகள் முழு பக்தியுடன் பகவானின் கண்களிலிருந்து அடிக்கடி வீசும் அன்புப் பார்வைகளை ஆழ்ந்து நினைக்க வேண்டும். ஏனெனில், அவரது பக்தர்களின் அச்சம் தரத்தக்க மூன்று வித வேதனைகளுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன. இனிய புன்சிரிப்பினைத் தொடர்ந்துவரும் அவரது பார்வைகள் அதிகமான அருள் நிறைந்தவை. பொருளுரை ஒருவர் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வில், இந்த ஜடவுடலில் இருக்கும் வரை அவர் கவலைகள், வேதனைகளால் துன்பப்படுதல் இயற்கையானது. ஒருவர் உன்னதமான இருப்பிடத்தில் இருந்தபோதிலும், அவர் ஜட சக்தியின் பாதிப்பைத் தவிர்க்க முடியாது சில சமயம் தொல்லைகள் வருகின்றன. ஆனால் பக்தர்களின் கவலைகளும் வேதனைகளும், அவர்கள் பரம புருஷ பகவானை அவருடைய அழகிய வடிவத்தில் அல்லது பகவானின் சிரித்த முகத்தை நினைக்கும் பொழுது உடனே தணிக்கப்படுகின்றன. பகவான் தன் பக்தர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அளிக்கிறார். அவர் அருளின் மிகச்சிறந்த வெளிப்பாடு, அவரது பக்தர்களுக்கான கருணை நிறைந்த புன்சிரிப்பு நிறைந்த முகமாக...