Skip to main content

Posts

Showing posts with the label Shelter / அடைக்கலம் (Articles)

கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது.

  ஸ்த்ரியோ வைஸ்யாஸ் ததா சூத்ராஸ் தே ‘பி யாந்தி பராம் கதிம் என்று பகவத்கீதை (9.32) குறிப்பிடுகிறது. ஆன்மீக கொள்கைகளைப் பின்பற்றுவதில் பெண்கள் அவ்வளவு சக்தியுடையவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால் போதிய அதிர்ஷ்டசாலியான ஒரு பெண் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ள ஒரு கணவனைப் பெற்று, அவரது சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பாளாயின், கணவன் அடையும் அதே நன்மையை அவளும் அடைகிறாள். சபரி முனிவரின் செல்வாக்கினால் அவரது மனைவிகளும் ஆன்மீக உலகிற்குள் பிரவேசித்தனர் என்று இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், தங்கள் கணவரை விசுவாசத்துடன் பின்பற்றியதால், அவர்களாலும் அவருடன் ஆன்மீக உலகினுள் பிரவேசிக்க முடிந்தது. இவ்வாறாக ஒரு பெண் தன் கணவனுக்கு விசுவாசத்துடன் சேவை செய்பவளாக இருக்க வேண்டும். கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது. ( ஸ்ரீமத் - பாகவதம்   9 .6 .55 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே...

ஒவ்வொரு அடியிலும் அபாயம்

ஸமாஷ்ரிதா யே பத-ப்லவம் மஹத் பதம் புண்ய-யஷோ முராரே: பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம் பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம் "முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின் பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு, பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில் தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிக துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) —ஒவ்வொரு அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இடமல்ல." ( ஶ்ரீமத் பாகவதம் (10.14.58) ) இவ்வுலகம், ஒவ்வொரு அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையினால் ஒருவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே, சிற்றறிவுடையோர், செயல்களின் பலன்கள் தங்களை மகிழ்விக்கும் எனக் கருதி பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையை சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழு பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை. வாழ்வின் துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகியவை பௌதிக உலகம் முழுவதும் உள்ளன. ஆனால் பகவானது நித்தியத் தொண்டன் எனும் தனது உண்மையான ஸ்வரூபத்தை...