Skip to main content

ஶ்ரீ ராமரின் லீலைகள்

 


கட்வாங்க மகாராஜனின் மகன் தீர்கபாஹு. அவரது மகன் இரகு. இரகுவின் மகன் அஜன். அஜனின் மகன் தசரதர். தசரதரின் புத்திரர் பகவான் ஸ்ரீ ராமச்சந்திரர். பரமபுருஷர் தமது பூரண சதுரங்க அம்சமாக, பகவான் ராமச்சந்திரராகவும், லக்ஷ்மணராகவும், பரனாகவும் மற்றும் சத்ருக்னராகவும் இவ்வுலகில் அவதரித்தார். பரம சத்தியத்தை உண்மையாக அறிந்துள்ள வால்மீகியைப் போன்ற மாமுனிவர்கள் அவரது உன்னதமான லீலைகளை விவரித்துள்ளனர். ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இந்த லீலைகளை சுருக்கமாக விவரிக்கிறார்.

பகவான் ராமச்சந்திரர் விஸ்வாமித்திரருடன் சென்று மாரீசனைப் போன்ற இராட்சஸர்களைக் கொன்றார். ஹரதனு என்ற பருத்த, உறுதியான வில்லை உடைத்தபின், பகவான் சீதைப் பிராட்டியை மணந்தார். பிறகு பரசுராமரின் கவர்த்தை வேரறுத்தார். அதன்பிறகு தன் தந்தையின் கட்டளைப்படி, சீதையும் லக்ஷ்மணனும் பின்தொடர வனம் புகுந்தார். அங்கு சூர்ப்பநகையின் மூக்கைத் துண்டித்ததுடன், இராவணனின் சகாக்களான கரன், தூஷணன் முதலானவர்களையும் கொன்றார். இராவணன் சீதையை அபகரித்துச் சென்றது முதல், அந்த அரக்கனின் துருதிர்ஷ்டம் ஆரம்பமானது. மாரீசன் ஒரு தங்க மானின் உருவை ஏற்றபோது, சீதையை மகிழ்விக்கும் பொருட்டு, மானைப் பிடித்துவர பகவான் ராமர் சென்றார். ஆனால் ராமர் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட இராவணன் சீதையை கடத்திச் சென்றான். பிறகு பகவான் ராமச்சந்திரரும், லக்ஷ்மணனும் வனம் முழுவதிலும் சீதையைத் தேடியலைந்தனர். இவ்வாறு தேடிச் செல்லும் சமயம், அவர்கள் ஜடாயுவைச் சந்தித்தனர். பிறகு பகவான் அசுரனான கபந்தனையும், வாலியையும் கொன்று சுக்ரீவனுடன் நட்புக் கொண்டார். வானர வீரர்களின் படை பலத்தை ஒழுங்குபடுத்தியபின், அவர்களுடன் கடற்கறைக்குச் சென்ற பகவான், சமுத்திர ராஜனின் வரவுக்காகக் காத்திருந்தார். ஆனால் சமுத்திர ராஜன் வராததைக் கண்ட சமுத்திர பதியான பகவான் கோபாவேஷமானார். பிறகு விரைவாக அங்கு வந்து சேர்ந்த சமுத்திரராஜன், பகவானிடம் சரணடைந்து, எல்லா வழிகளிலும் அவருக்கு உதவத் தயாரானார். பிறகு சமுத்திரத்தில் பாலம் கட்டிய பகவான், விபீஷணரின் உதவியுடன் இராவணனின் தலைநகரான இலங்கைகையத் தாக்கினார். பகவானின் நித்தியத் தொண்டரான ஹனுமான் முன்பு இலங்கைக்குத் தீ வைத்தார். இப்பொழுது லக்ஷ்மணரின் உதவியுடன் பகவான் ராமச்சந்திரரின் படை இராட்சஸ வீரர்கள் அனைவரையும் கொன்றது. பிறகு பகவான் ராமச்சந்திரர் இராவணனைக் கொன்றார். மண்டோதரியும், பிற மனைவிகளும் இராவணனுக்காக விசனப்பட்டனர். பகவான் ராமரின் கட்டளைப்படி, மரணமடைந்த குடும்பத்தினருக்கு விபீஷணர் ஈமச்சடங்குகளைச் செய்தார். பிறகு பகவான் ராமர் விபீஷணருக்கு இலங்கையை ஆளும் உரிமையையும், நீண்ட ஆயுளையும் அளித்தார். அசோக வனத்திலிருந்து சீதையை மீட்ட பகவான், புஷ்பக விமானத்தில் அவளுடன் அயோத்திக்குச் சென்றார். அங்கு பரதன் அவரை வரவேற்றார். பகவான் ஸ்ரீ ராமர் அயோத்தியில் புகுந்ததும், பரதன் அவரது பாதுகைகளைக் கொண்டு வந்தார். விபூஷணரும், சுக்ரீவனும் வெண்சாமரத்தையும், விசிறியையும் பிடித்திருந்தனர். ஹனுமான் ஒரு குடையைப் பிடித்திருந்தார். சத்ருக்னன் பகவானின் வில்லையும், இரு அம்பறாத்தூணிகளையும் பிடித்திருந்தார். சீதாதேவி புண்ணிய தீர்த்தங்களின் நீரைக் கொண்ட ஒரு கமண்டலத்தைப் பிடித்திருந்தாள். அங்கதனும், (ரிக்ஷராஜனான) ஜாம்பவானும் முறையே ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் பிடித்திருந்தனர். பகவான் லக்ஷ்மணராலும், சீதா தேவியாலும் பின்தொடரப்பட்ட பகவான் ராமச்சந்திரர் அவரது உறவினர்கள் அனைவரையும் சந்தித்தபின், வசிஷ்ட மாமுனிவர் அவரை அரசராக முடி சூட்டினார். 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...