Skip to main content

Posts

ஶ்ரீ கோவர்த்தனாஷ்டகம்

  பதம் 1 கிருஷ்ண-ப்ரஸாதேந ஸமஸ்த-ஷைல- சாம்ராஜ்யம் ஆப்நோதி ச வைரிணோ 'பி சக்ரஷ்ய ய: ப்ரப பலிம் ச ஸாக்ஷாத் கோவர்தனோ மே திஷாதம் அபிஷ்டம் பிரபு கிருஷ்ணரின் கருணையினால், மலைகள் அனைத்திற்கும் பேரரசன் என்ற பெருமை பெற்றதும், பொறாமை கொண்ட எதிரியான இந்திரனிடமிருந்தே போற்றத் தகுந்த மதிப்பு, மரியாதையும், பாராட்டும் பெற்றதுமான மேன்மை மிக்க கோவர்த்தன மலையானது கருணையுடன் எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன். பதம் 2 ஸ்வ-ப்ரேஷ்ட-ஹஸ்தம்புஜ-ஸௌகுமார்ய ஸுகானுபுதேர் அதி-பூமி-வருத்தே: மஹேந்ர-வஜ்ரஹதிம் அபி அஜனம் கோவர்தநோ மே திஷாதம் அபிஷ்டம் கோவர்த்தன மலையானது தனது உன்னத விருப்பத்தினால் இந்த பூமியில் அவதரித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. கிருஷ்ணரின் தாமரை திருக்கரங்களால் ஏந்தப்பட்டு மென்மையிலும் மென்மையை அடைந்ததால், இந்திரனின் கோபத்தினால் உண்டாக்கப்பட்ட, கடும் இடி, மின்னலுடன் கூடிய நாசக்கார மழையையும் கூட சிறு பூஞ்சாரல் போன்று ஏற்று புன்னகை பூத்த கோவர்த்தன மலையானது எனது உன்னத விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகின்றேன். பதம் 3 யத்ரைவ க்ருஷ்ணோ விருஷபானு-புத்ர்ய தானம் க்ரிதும் கலஹம்  வித...

எந்த நோக்கத்திற்காகவே பகவான் மனித வாழ்வைப் படைத்துள்ளார் ?

  பந்தப்பட்ட ஆத்மாவின் முக்திக்கு உதவும் பொருட்டே கடவுள் குறிப்பாக மானிட ரூபத்தைப் படைத்துள்ளார் . எனவே மனித வாழ்வை துஷ்பிரயோகம் செய்பவன் நரகத்திற்கு வழியை அமைத்துக்கொள்கிறான் . புருஷத்வே சாவிஸ்தராம் என்று வேதங்கள் கூறுவது போல் , “ மனித உருவிலுள்ள வாழ்வின் நித்திய ஆத்மாவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது ” வேதங்களும் பின்வருமாறு கூறுகின்றன . தாப்யோ காம் ஆனயத் தா அப்ருவன் ந வை நோ ‘ யம் அலம் இதி தாப்யோ ‘ ஸ்வம் ஆனயத் தா அப்ருவன் ந வை நோ ‘ யம் அலம் இதி தாப்ய - புருஷம் ஆனயத் தா அப்ருவன் ஸுக்ருதம் பத இந்த சுருதி மந்திரத்தின் பொருள் பின்வருமாறு : பசு , குதிரை முதலான தாழ்ந்த உயிரினங்கள் சிருஷ்டியின் நோக்கத்தை நிறைவேற்ற உண்மையில் பொருத்தமானவை அல்ல . ஆனால் கடவுளுடனான தனது நித்திய உறவைப் புரிந்து கொள்வதற்கு மனித வாழ்வு வாய்ப்பளிக்கிறது . எனவே ஒருவன் பௌதிக புலன்களை அடக்கி மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் . ஒருவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால் , பரமபுருஷர் மிகவும் மகிழ்ந்...

வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள்

  நவீன விஞ்ஞான யுகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கின்றவர்கள் , இப்பூமி ஒன்றில் மட்டுமே விஞ்ஞான அறிவும் , புத்திசாலித் தனமும் நிறைந்த உயிர்கள் இருக்கின்றனவென்றும் பிற கோள்களில் இப்படிப்பட்ட உயிர்கள் ஏதும் இல்லை என்றும் பொதுக் கருத்துடையவர்களாக இருக்கின்றனர் . வேத இலக்கியங்கள் இம்மூடக் கூற்றினை மறுக்கின்றன . வேத ஞானம் படைத்தவர்கள் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமான உயிர்கள் தேவர்கள் , முனிவர்கள் , பித்ருக்கள் , கந்தர்வர்கள் . நாகர்கள் , கின்னரர்கள் , சாரணர்கள் , சித்தர்கள் , மற்றும் அப்ஸரர்கள் என்று இருக்கின்றார்கள் என்பதை அறிவர் . வேதங்கள் , இந்த பௌதீக வானத்தில் மட்டுமல்லாது ஆன்மீக வானத்திலும் பல்வேறு வகையான உயிர்கள் வாழ்கின்றன என்றும் தகவல்களைக் கூறுகின்றன . இங்குள்ள உயிர்கள் எல்லாம் ஒரே ஆன்மீகத் தன்மை உடையன . முழுமுதற் கடவுளிடமுள்ள அதே குணமுடையனவாகவும் இருந்த போதிலும் ஆத்மாவிற்கு நிலம் , நீர் , காற்று , தீ , வானம் , மனம் புத்தி மற்றும் ஆணவம் என்னும் எண்வகைப் பொருள்களினாலான தேகம் உ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more